Close Menu
    What's Hot

    ‘ராணுவ சீருடைகள்-2026’: புதிய சீருடை விதிமுறைகளை அறிமுகம் செய்கிறது இந்திய ராணுவம்..!!

    #BREAKING| பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறியது தமாகா..!! ஜி.கே வாசன் அறிவிப்பு..!!

    அமெரிக்கா சொல்லுது.. பிரதமர் மோடி அப்படியே கேட்டு நடக்கிறார்..!! ராகுல் காந்தி விமர்சனம்..!!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»விளையாட்டு»இங்கிலாந்துக்கு எதிராக சதம் விளாசிய ஜெய்ஸ்வால்…
    விளையாட்டு

    இங்கிலாந்துக்கு எதிராக சதம் விளாசிய ஜெய்ஸ்வால்…

    Editor TN TalksBy Editor TN TalksJune 20, 2025Updated:June 20, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    Yashasvi Jaiswal of India celebrates after scoring double century against England during Test cricket match February 18 2024
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்தியாவின் தொடக்க வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் சதம் விளாசி சாதனை படைத்துள்ளார்.

    5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்பதற்காக இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. முதல் போட்டி லீட்ஸ் மைதானத்தில் இன்று தொடங்கியது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

    தொடக்க வீரர்களாக யஷஸ்வி ஜெய்ஸ்வால், கே.எல்.ராகுல் களமிறங்கினர். மிக நிதானமாக ஆடத்தொடங்கிய இருவரும் வாய்ப்புள்ள பந்துகளை மட்டும் ரன்களாக மாற்றினர். 42 ரன்கள் எடுத்திருந்த கே.எல்.ராகுல், கார்ஸ் பந்துவீச்சில் ரூட்டிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் களமிறங்கிய தமிழக வீரர் சாய் சுதர்சன் டக் அவுட் ஆகி இந்திய ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தினார்.

    பின்னர் ஜெய்ஸ்வாலுடன், கேப்டன் சுப்மன் கில் ஜோடி சேர்ந்தார். இந்த இணை பொறுப்புடனும், நிதானமாகவும் விளையாடியது. அதேசமயம், ஜெய்ஸ்வால் மிகச்சிறப்பாக விளையாடி சதம் அடித்து அசத்தினார். 155 பந்துகளை எதிர்கொண்ட அவர் ஒரு சிக்சர், 16 பவுண்டரிகளுடன் சதம் அடித்தார். டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இது அவரது 5-வது சதமாகும். சதமடித்த நிலையில் 101 ரன்கள் எடுத்தபோது ஸ்டோக்ஸ் பந்தில் ஜெய்ஸ்வால் க்ளீன்போல்டாகி வெளியேறினார்.

    ஆஸ்திரேலியா, மேற்கிந்திய தீவுகள் நாட்டினைத் தொடர்ந்து இங்கிலாந்திலும் தான் ஆடிய முதல் போட்டியில் சதத்தினை அடித்து அசத்தியிருக்கிறார் ஜெய்ஸ்வால். இந்தியா இதுவரை இங்கிலாந்தில் ஆடிய தொடர்களில் முதல் போட்டியை வென்றதில்லை. யஷஸ்வி ஜெய்ஸ்வால் இதுவரை சதமடித்த போட்டிகளில் இந்தியா தோற்றதுமில்லை. இரண்டில் எது நடக்கப் போகிறது என்பது கிரிக்கெட் ரசிகர்கள் இடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleவான்வெளியை திறந்த ஈரான்… இந்திய மாணவர்கள் 1,000 பேர் வெளியேற சிறப்பு ஏற்பாடு…
    Next Article வால்பாறை அருகே சிறுமியை தூக்கிச் சென்ற சிறுத்தை..
    Editor TN Talks

    Related Posts

    ‘ராணுவ சீருடைகள்-2026’: புதிய சீருடை விதிமுறைகளை அறிமுகம் செய்கிறது இந்திய ராணுவம்..!!

    June 14, 2026

    #BREAKING| பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறியது தமாகா..!! ஜி.கே வாசன் அறிவிப்பு..!!

    June 14, 2026

    அமெரிக்கா சொல்லுது.. பிரதமர் மோடி அப்படியே கேட்டு நடக்கிறார்..!! ராகுல் காந்தி விமர்சனம்..!!

    June 14, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    ‘ராணுவ சீருடைகள்-2026’: புதிய சீருடை விதிமுறைகளை அறிமுகம் செய்கிறது இந்திய ராணுவம்..!!

    #BREAKING| பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறியது தமாகா..!! ஜி.கே வாசன் அறிவிப்பு..!!

    அமெரிக்கா சொல்லுது.. பிரதமர் மோடி அப்படியே கேட்டு நடக்கிறார்..!! ராகுல் காந்தி விமர்சனம்..!!

    தவெக ஆள்பிடிக்கிறதா? – மு.க.ஸ்டாலினுக்கு செங்கோட்டையன் பளீச் பதில்

    ஈரான் புரட்சிகர காவலர் படை அதிரடி;  ஹார்முஸ் நீரிணையை மூடியது  

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.