Close Menu
    What's Hot

    நீட் தேர்வே தேவையில்லை; மாப்பிள்ளையும், மகனும்தான் அதிகார மையம் – அமைச்சர் நிர்மல்குமார் பளீச்

    அம்மோனியா கசிவு சம்பவம்: 3 நாளில் முழு அறிக்கை சமர்ப்பிக்க முதல்வர் உத்தரவு

    திருவள்ளூர் அருகே சோகம்: தொழிற்சாலையில் வாயுக் கசிவு… 2  பேர் பலி!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»இந்தியா»கேரளாவில் ஆளும் கட்சிக்கு தோல்வி… டெல்லியில் விட்டதை குஜராத், பஞ்சாப்பில் பிடித்த ஆம் ஆத்மி…
    இந்தியா

    கேரளாவில் ஆளும் கட்சிக்கு தோல்வி… டெல்லியில் விட்டதை குஜராத், பஞ்சாப்பில் பிடித்த ஆம் ஆத்மி…

    Editor TN TalksBy Editor TN TalksJune 23, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    29 4
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    கேரளா, குஜராத், மேற்கு வங்கம், பஞ்சாப் ஆகிய 4 மாநிலங்களில் காலியாக இருந்த 5 சட்டசபை தொகுதிகளுக்கு கடந்த 19-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது. அதனை தொடர்ந்து இன்று(23.06.2025) வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. அதன்படி,

    கேரளாவில், நிலம்பூர் தொகுதியில் ஆளும் கம்யூனிஸ்டு கூட்டணி ஆதரவுடன் வெற்றி பெற்ற சுயேட்சை எம்.எல்.ஏ பி.வி.அன்வர், முதலமைச்சர் பினராயி விஜயனுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால், தனது பதவியை ராஜினாமா செய்தார். பின்னர் அவர் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். இந்த தொகுதிக்கு நடந்த இடைத்தேர்தலில் ஆளும் மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு, காங்கிரஸ், பா.ஜ.க. ஆகிய கட்சிகள் களமிறங்கின.

    பதவியை ராஜினாமா செய்த அன்வர், சுயேட்சையாக போட்டியிட்டார். இந்த தொகுதியில் நடந்த தேர்தல் முடிவில், ஆளும் மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி வேட்பாளர் தோல்வியை தழுவினார். அவரை விட 11,077 வாக்குகள் அதிகம் பெற்று காங்கிரஸ் வேட்பாளர் ஆர்யதன் வெற்றி பெற்றார்.

    குஜராத் மாநிலம் விசாவதர் தொகுதியில் ஆம் ஆத்மி எம்.எல்.ஏ பூபேந்திர பயானி தனது பதவியை ராஜினாமா செய்து விட்டு பாஜகவில் இணைந்தார். காடி தொகுடியில் பாஜக எம்.எல்.ஏ கர்சன்பாய் சோலங்கி காலமானதால், அங்கும் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. இவ்விரு தொகுதிகளிலும் பாஜக, காங்கிரஸ், ஆம் ஆத்மி என மும்முனை போட்டி நிலவியது. இதில் காடி தொகுதியில் பாஜக வேட்பாளர் ராஜேந்திரன் சவ்டா 40,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். விசாவதர் தொகுதியில் மீண்டும் ஆம் ஆத்மி வெற்றி பெற்றது.

    மேற்கு வங்க மாநிலம் காளிகஞ்ச் டொகுதிய்ல் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் எம்.எல்.ஏ நசிருதீன் அகமது காலமானதால், அங்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. இந்த தேர்தலில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி வேட்பாளர், பாஜக, காங்கிரஸ் வேட்பாளர்களை விட அதிக வாக்குகள் பெற்று வெற்றியடைந்தார்.

    பஞ்சாப் மாநிலம் லூதியானா மேற்கு தொகுதிய்ல் ஆளும் ஆம் ஆத்மி கட்சி எம்.எல்.ஏ குர்பிரீத் கோகி காலமானதால், இடைத்தேர்தல் நடைபெற்றது. இதில் ஆம் ஆத்மி மீண்டும் வெற்றி பெற்றது.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleநீட் முறைகேடு – NTA அதிகாரிகள் 2 பேர் மீது CBI வழக்குப்பதிவு..
    Next Article வெளியானது கூலி படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் அப்டேட்… வீடியோவுடன் படக்குழு அறிவிப்பு…
    Editor TN Talks

    Related Posts

    நீட் மறு தேர்வு தொடங்கியது… 22.79 லட்சம் மாணவர்கள் பங்கேற்பு!

    June 21, 2026

    சிம்லாவில்  சர்வதேச யோகா தினக் கொண்டாட்டம் ; வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் பங்கேற்பு

    June 21, 2026

    உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட 3 கடற்படை போர்க்கப்பல்கள்; நாட்டுக்கு அர்ப்பணித்தார் பிரதமர் மோடி

    June 21, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    நீட் தேர்வே தேவையில்லை; மாப்பிள்ளையும், மகனும்தான் அதிகார மையம் – அமைச்சர் நிர்மல்குமார் பளீச்

    அம்மோனியா கசிவு சம்பவம்: 3 நாளில் முழு அறிக்கை சமர்ப்பிக்க முதல்வர் உத்தரவு

    திருவள்ளூர் அருகே சோகம்: தொழிற்சாலையில் வாயுக் கசிவு… 2  பேர் பலி!

    நகராட்சி பெயரில் போலி ரசீது; கோவில்பட்டியில் இப்படியும் ஒரு வசூல்

    கல்லூரி மாணவிக்கு பாலியல் சீண்டல் ; பேராசிரியரைக்  கைது செய்த சிங்கப் பெண்படை

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.