Close Menu
    What's Hot

    பள்ளி வகுப்பறையில் அரசியல் செய்த தவெக நிர்வாகிகள்..!! பாடம் எடுத்து ரீல்ஸ் வெளியிட்டு அட்ராசிட்டி..!!

    டெல்லி கேபிடல்ஸ் அணியில் யுவராஜ் சிங்!. கங்குலி கூட்டணியுடன் அதிரடி மாற்றங்கள்!.

    குடியரசுத் தலைவருக்கு 68வது பிறந்தநாள்..!! துணை குடியரசுத் தலைவர் உள்ளிட்ட பலர் வாழ்த்து..!!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»தமிழ்நாடு»காலி மதுபாட்டில்களை திரும்ப பெறுவதில் தனியார் ஊழியர்கள்?..
    தமிழ்நாடு

    காலி மதுபாட்டில்களை திரும்ப பெறுவதில் தனியார் ஊழியர்கள்?..

    Editor TN TalksBy Editor TN TalksJuly 1, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    1366963
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    டாஸ்மாக் கடைகளில் காலி மதுபான பாட்டில்கள் திரும்பப் பெறும் பணிக்கு தனியாக ஊழியர்களை நியமிப்பது தொடர்பாக அரசு நியமித்துள்ள குழுவை அணுகும்படி டாஸ்மாக் ஊழியர் சங்கத்திற்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    சுற்றுச்சூழலை கருத்தில் கொண்டு, டாஸ்மாக் கடைகளில் விற்கப்படும் மதுபாட்டில்களை திரும்பப் பெறும் திட்டம், சென்னை உயர் நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில், தமிழகம் முழுவதும் அமல்படுத்தப்படுகிறது.

    இந்த திட்டத்தின்படி, விற்பனை செய்யப்படும் மதுபாட்டில்கள் மீது கூடுதலாக 10 ரூபாய்க்கு விற்க வேண்டும். வாடிக்கையாளர்கள் காலி பாட்டில்களை திரும்பத் தரும் பட்சத்தில், 10 ரூபாயை திருப்பிக் கொடுக்க வேண்டும்.

    இந்த பணிகளுக்கு தற்போது டாஸ்மாக் கடைகளில் பணியாற்றுவோரை அமர்த்தாமல், தனியாக ஊழியர்களை நியமிக்கக் கோரியும், காலி பாட்டில்களை வைக்க தனி இடம், உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தித் தரக் கோரியும், டாஸ்மாக் ஊழியர் மாநில சம்மேளனம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

    இந்த வழக்கு, நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி முன் விசாரணைக்கு வந்த போது, காலி பாட்டில்கள் திரும்பப் பெறும் திட்டம் தொடர்பாக ஊழியர்களின் குறைகளை ஆய்வு செய்ய டாஸ்மாக் நிர்வாக இயக்குனர் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும், மனுதாரர் சங்கம், அந்த குழுவை அணுகலாம் எனவும் தமிழக அரசின் கூடுதல் தலைமை வழக்கறிஞர் ஜெ.ரவீந்திரன் தெரிவித்தார்.

    இதை பதிவு செய்து கொண்ட நீதிபதி, காலி பாட்டில்களை திரும்ப பெரும் பணிக்கு தனியாக ஊழியர்களை நியமிக்க வேண்டும் என்ற கோரிக்கை தொடர்பாக அரசு நியமித்துள்ள குழுவை அணுகும்படி மனுதாரர் சங்கத்திற்கு உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleஇடைநின்ற மாணவர்கள் பயன்பெறும் வெற்றி நிச்சயம் திட்டம்
    Next Article ரூ.5,000 லஞ்சம் பெற்ற நில அளவையர் கைது..
    Editor TN Talks

    Related Posts

    பள்ளி வகுப்பறையில் அரசியல் செய்த தவெக நிர்வாகிகள்..!! பாடம் எடுத்து ரீல்ஸ் வெளியிட்டு அட்ராசிட்டி..!!

    June 20, 2026

    வெப்பம் குறையும்; ஈரப்பதம் நிலவும் – சென்னை மக்களுக்கு ஜில்லுனு ஒரு செய்தி

    June 20, 2026

    மழைக்கால சோதனை.. சேறும் சகதியுமாக மாறிய ஈரோடு நேதாஜி காய்கறி மார்க்கெட்..!! அல்லல்படும் மக்கள்..!!

    June 20, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    பள்ளி வகுப்பறையில் அரசியல் செய்த தவெக நிர்வாகிகள்..!! பாடம் எடுத்து ரீல்ஸ் வெளியிட்டு அட்ராசிட்டி..!!

    டெல்லி கேபிடல்ஸ் அணியில் யுவராஜ் சிங்!. கங்குலி கூட்டணியுடன் அதிரடி மாற்றங்கள்!.

    குடியரசுத் தலைவருக்கு 68வது பிறந்தநாள்..!! துணை குடியரசுத் தலைவர் உள்ளிட்ட பலர் வாழ்த்து..!!

    வெப்பம் குறையும்; ஈரப்பதம் நிலவும் – சென்னை மக்களுக்கு ஜில்லுனு ஒரு செய்தி

    குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பிறந்தநாள் இன்று..! தலைவர்கள் வாழ்த்து..!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.