நெல்லை மாவட்டம் காவல்கிணறு மகேந்திரகிரி இஸ்ரோ மையத்தில், விண்வெளிக்கு அனுப்பப்படும் ராக்கெட்டுகளுக்கான கிரையோஜெனிக் என்ஜின், விகாஷ் என்ஜின், பி.எஸ்.4 என்ஜின் ஆகியவை தயாரிக்கப்பட்டு பரிசோதனை செய்யப்பட்டு வருகின்றன.
இதுமட்டுமின்றி, மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் ககன்யான் திட்டத்தில் பயன்படுத்தப்படும் ராக்கெட்டுகள் விண்வெளிக்குச் சென்று மீண்டும் பூமிக்குத் திரும்புவதற்காக, எஸ்.எம்.எஸ்.டி.எம். (SMSTM) என்ற மாடலிங் என்ஜின் பல்வேறு கட்டங்களாகச் சோதனை செய்யப்பட்டு வருகிறது. இதன் நான்காவது கட்டமாக 130 வினாடிகள் சோதனை நடத்த இஸ்ரோ திட்டமிட்டது.
இந்தச் சோதனைக்கான கவுண்டவுன் ஆரம்பிக்கப்பட்டு, நிர்ணயிக்கப்பட்ட இலக்கை வெற்றிகரமாக அடைந்தது. மகேந்திரகிரி இஸ்ரோ மைய இயக்குனர் ஆசீர் பாக்யராஜ் இந்தச் சோதனையை நேரில் பார்வையிட்டார். இஸ்ரோ தலைவர் சோம்நாத் (நாராயணன் அல்ல, இஸ்ரோ தலைவர் சோம்நாத்) மற்றும் திருவனந்தபுரம் திரவ இயக்க மைய இயக்குனர் மோகன் ஆகியோர் காணொலிக்காட்சி வாயிலாக இந்தச் சோதனையைக் கண்டுகளித்தனர்.