Close Menu
    What's Hot

    நயினார் நாகேந்திரனுக்கு கறுப்பு கொடி காட்டிய பெண் : திடீரென மயங்கியதால் பரபரப்பு

    தமிழகத்தின் கடனை திமுக இரட்டிப்பாக்கி உள்ளது; காங்., நிர்வாகி கருத்துக்கு அண்ணாமலை வரவேற்பு

    காங்கிரஸ் வெறும் கட்சியல்ல ; ஆன்மாவின் குரல் : சொல்கிறார் ராகுல்

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»ராசிபலன்»மாங்கனித் திருவிழாவுக்கு தயாராகும் காரைக்கால்…
    ராசிபலன்

    மாங்கனித் திருவிழாவுக்கு தயாராகும் காரைக்கால்…

    Editor TN TalksBy Editor TN TalksJuly 8, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    1266660
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    காரைக்கால் அம்மையார் கோயில் மாங்கனி திருவிழா மாப்பிள்ளை அழைப்புடன் வெகு விமர்சையாக தொடங்குகியது. வரும் 10-ஆம் தேதி விழாவின் முக்கிய நிகழ்வான மாங்கனி திருவிழா மாங்கனி இரைத்தல் நடைபெற உள்ளது.

    காரைக்கால் அம்மையார் கோயிலில் மாங்கனித் திருவிழா ஒவ்வொரு ஆண்டும் ஆனி மாதம், பௌர்ணமி அன்று கொண்டாடப்படுவது வழக்கம். திருவிழாவின் போது சுவாமி தேர் வீதி உலா வருகையில், பக்தர்கள் தங்கள் வேண்டுதலை நிறைவேற்றும் விதமாக, இறைவன் மீது மாங்கனிகளை வாரி இறைத்து நேர்த்திக்கடன் செலுத்துவார்கள்.

    இந்த விழாவின் ஒருபகுதியாக கடந்த 7-ந் தேதி பரமதத்த செட்டியாருக்கும் புனிதவதியாருக்கும்
    திருக்கல்யாணம் நடைபெற்றது. அன்று மாலையே ஸ்ரீ பிக்ஷாடணமூர்த்தி வெள்ளை சாத்தி புறப்பாடு நடந்தேறியது.

    வரும் 10-ந் தேதி அதிகாலை 3 மணிக்கு ஸ்ரீ பிக்ஷாடணமூர்த்தி மற்றும் பஞ்சமூர்த்திகளுக்கு மகா அபிஷேகம்
    தீபாரதனை நடைபெற உள்ளது. அன்றைய தினம் காலை 9:00 மணிக்கு பரமசிவன் அடியார் கோலத்துடன் பவழக்கால் விமானத்தில் பத்மாசனத்தில் அமர்ந்து வேதபாராயணத்துடனும், வாத்தியங்கள் முழங்கவும் திருவீதியுலா வருவார். அப்போது பக்தர்கள் பிச்சாண்டவர் மீது மாங்கனிகளை வீசி தங்கள் நேர்த்திக் கடனை செலுத்துவார்கள்.

    11-ந் தேதி பரமதத்த செட்டியாரும், இரண்டாவது மனைவியும், மகளும் எதிர் வந்து ஸ்ரீ புனிதவதியாரை வலம் வந்து வணங்குதல் நிகழ்ச்சி நடைபெறும். தொடர்ந்து புனிதவதியார் ஊனை உதிர்த்து பேயுருக்கொண்டு அற்புதத் திருவந்தாதி திருவிரட்டை மணிமாலை பாடிக்கொண்டே கயிலாயத்திற்கு சென்று அடைதல் அரங்கேறும்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleநடிகர் ஸ்ரீகாந்த், கிருஷ்ணாவுக்கு நிபந்தனை ஜாமின்..
    Next Article மதுபோதையில் வகுப்பில் விழுந்து கிடந்த ஆசிரியர்… அரசுக்கு நயினார் நாகேந்திரன் கேள்வி..
    Editor TN Talks

    Related Posts

    மேஷம் முதல் மீனம் வரை: இன்றைய ராசிபலன் @ 28 டிசம்பர் 2025

    December 28, 2025

    12 ராசிகளுக்கான வார பலன்கள் @ டிச.26 – 31

    December 26, 2025

    இன்று நாள் எப்படி? 12 ராசிகளுக்கும் துல்லிய கணிப்பு

    December 26, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    நயினார் நாகேந்திரனுக்கு கறுப்பு கொடி காட்டிய பெண் : திடீரென மயங்கியதால் பரபரப்பு

    தமிழகத்தின் கடனை திமுக இரட்டிப்பாக்கி உள்ளது; காங்., நிர்வாகி கருத்துக்கு அண்ணாமலை வரவேற்பு

    காங்கிரஸ் வெறும் கட்சியல்ல ; ஆன்மாவின் குரல் : சொல்கிறார் ராகுல்

    இலங்கை சிறையில் இருந்து 62 மீனவர்களை விடுவிக்க மத்திய அரசின் நடவடிக்கை தேவை: முதல்வர் ஸ்டாலின்

    பல் மருத்துவர்கள் உண்ணாநிலைப் போராட்டம்! காங்கிரஸ் கட்சி ஆதரவு

    Trending Posts

    விஜயகாந்த் நினைவு தினம்: உதயநிதி, செல்வ பெருந்தகை அஞ்சலி

    December 28, 2025

    பாலத்தில் தடம் புரண்ட ரயில்!. ஆற்றில் கவிழ்ந்த 10 பெட்டிகள்!. பீகாரில் பரபரப்பு!

    December 28, 2025

    தைவானை உலுக்கிய பயங்கர நிலநடுக்கம்!. ரிக்டர் அளவில் 7.0 ஆக பதிவு!. 

    December 28, 2025

    பல் மருத்துவர்கள் உண்ணாநிலைப் போராட்டம்! காங்கிரஸ் கட்சி ஆதரவு

    December 28, 2025

    ரூ.100 கோடிக்கும் மேல் வசூல்! 2025இல் 31 படங்கள் சாதனை

    December 28, 2025
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2025 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.