Close Menu
    What's Hot

    பொது இடங்களில் பிடிபடும் தெருநாய்களை மீண்டும் அங்கேயே விடக்கூடாது!. உச்சநீதிமன்றம் அதிரடி

    டாஸ்மாக் கடைகள் மூடப்பட்ட பகுதிகளில் உள்ள FL2 , FL3  கடைகளில்  வருவாய் அதிகரிப்பு

    சென்னை உயர்நீதிமன்றத்துக்கு 19 நீதிபதிகள் –  உச்சநீதிமன்ற கொலிஜியம் ஒப்புதல்

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»தமிழ்நாடு»கடலூர்: பள்ளி வேன் மீது ரயில் மோதிய சம்பவம்… 13 பேருக்கு சம்மன் அனுப்பிய தெற்கு ரயில்வே…
    தமிழ்நாடு

    கடலூர்: பள்ளி வேன் மீது ரயில் மோதிய சம்பவம்… 13 பேருக்கு சம்மன் அனுப்பிய தெற்கு ரயில்வே…

    Editor TN TalksBy Editor TN TalksJuly 9, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    3 8
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    கடலூர் அருகே தனியார் பள்ளிக்கு சொந்தமான பள்ளி வாகனத்தை மஞ்சக்குப்பத்தை சேர்ந்த சங்கர் என்பவர் ஓட்டி வந்துள்ளார். வழக்கம் போல தொண்டமாநத்தம், சின்னகாட்டு சாகை ஆகிய கிராமங்களுக்கு சென்று குழந்தைகளை ஏற்றி சென்றுள்ளார். கடலூர் முதுநகர் பகுதியில் மாணவர்களை ஏற்றிக் கொண்டு, காலை 7.30 மணியளவில் செம்மங்குப்பம் பகுதி அருகே வேன் வந்துள்ளது.

    அப்போது அங்கு ரயில்வே கேட் திறந்து இருந்துள்ளது. எப்போதும் போல சங்கர் வேனை ரயில் தண்டவாளத்தை கடந்து செல்ல முற்பட்டப் போது விழுப்புரத்தில் இருந்து மயிலாடுதுறை நோக்கி சென்ற ரயில், பள்ளி வேன் மீது மோதி இழுத்து சென்றுள்ளது. இதில் வேனில் இருந்த பள்ளி மாணவர்கள் தூக்கி வீசப்பட்டதில், 3 மாணவர்கள் பலியாகினர்.

    இந்த கோர விபத்திற்கு கேட் கீப்பரான மத்தியப் பிரதேசத்தை சேர்ந்த பங்கஜ் சர்மா தான் காரணம் என கூறப்பட்டுள்ளது. அவர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இந்த நிலையில், இந்த விபத்து குறித்து கேட் கீப்பர் பங்கஜ் சர்மா, பள்ளி வேன் டிரைவர் சங்கர் உட்பட 13 பேருக்கு ரெயில்வே விசாரணைக் குழு சம்மன் அனுப்பி உள்ளது.

    இந்த விபத்தில் கவனக்குறைவாக செயல்பட்டதாகக் கூறி, செம்மங்குப்பம் கேட் கீப்பர் பங்கஜ் சர்மா, தனியார் பள்ளி டிரைவர் சங்கர், லோகோ பைலட் சக்தி குமார், உதவி லோகோ பைலட் ரஞ்சித் குமார், ரெயில் நிலைய அதிகாரிகள் விக்ராந்த் சிங், அஜித் குமார், விமல், அங்கித் குமார், ஆனந்த், வடிவேலன், வாசுதேவ பிரசாத், சிவகுமரன் உள்பட 13 பேருக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. இவர்கள் அனைவரும் திருச்சி கோட்ட ரெயில்வே பாதுகாப்பு அலுவலகத்தில் ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் அவர்களிடம் விபத்துக்கான காரணம் குறித்து அறியவும் ரெயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleஇந்துசமய அறநிலையத்துறை கீழ் இயங்கும் கல்லூரிகள்.
    Next Article ஜூலை 18-ம் தேதி வெளியாகும் ’டிரெண்டிங்’… படத்தின் டிரைலரை வெளியிட்ட இயக்குநர் பா.ரஞ்சித்…
    Editor TN Talks

    Related Posts

    டாஸ்மாக் கடைகள் மூடப்பட்ட பகுதிகளில் உள்ள FL2 , FL3  கடைகளில்  வருவாய் அதிகரிப்பு

    May 19, 2026

    சென்னை உயர்நீதிமன்றத்துக்கு 19 நீதிபதிகள் –  உச்சநீதிமன்ற கொலிஜியம் ஒப்புதல்

    May 19, 2026

    திருப்போரூர் பேரூராட்சியில் வளர்ச்சி திட்டப் பணிகள் – மாவட்ட ஆட்சியர் மாலதி ஹெலன் நேரில் ஆய்வு

    May 19, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    பொது இடங்களில் பிடிபடும் தெருநாய்களை மீண்டும் அங்கேயே விடக்கூடாது!. உச்சநீதிமன்றம் அதிரடி

    டாஸ்மாக் கடைகள் மூடப்பட்ட பகுதிகளில் உள்ள FL2 , FL3  கடைகளில்  வருவாய் அதிகரிப்பு

    சென்னை உயர்நீதிமன்றத்துக்கு 19 நீதிபதிகள் –  உச்சநீதிமன்ற கொலிஜியம் ஒப்புதல்

    திருப்போரூர் பேரூராட்சியில் வளர்ச்சி திட்டப் பணிகள் – மாவட்ட ஆட்சியர் மாலதி ஹெலன் நேரில் ஆய்வு

    இசைஞானி இளையராஜா 1540 – கைகோர்க்கும் கார்த்திக் சுப்புராஜ்

    Trending Posts

    “வெற்றி, தோல்வி சகஜம்… ஒன்றிணைந்து நில்லுங்கள்!. அதிமுக நிர்வாகிகளுக்கு இபிஎஸ் அட்வைஸ்!

    May 19, 2026

    இசைஞானி இளையராஜா 1540 – கைகோர்க்கும் கார்த்திக் சுப்புராஜ்

    May 19, 2026

    எடப்பாடி உருக்கம்… அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது என்ன?

    May 19, 2026

    சென்னையில் பரபரப்பு!. 10-க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத்துறை அதிரடி ரெய்டு!. 

    May 19, 2026

    திருப்பூர் குடியிருப்பு பகுதியில் குட்கா பதுக்கிய வடமாநில வாலிபர்கள் கைது!. போலீசார் அதிரடி!

    May 19, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.