Close Menu
    What's Hot

    மேகதாது அணை கட்டுமானப் பணி; கர்நாடகா மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு; தமிழக அரசுக்கு டிடிவி தினகரன் வலியுறுத்தல்

    6 நாள்.. 3 நாடுகள்..!! சுற்றுப்பயணத்தை தொடங்கினார் பிரதமர் மோடி..!!

    போலீஸ் வளையத்தில் மம்தா வீடு..?? மேற்கு வங்கத்தில் பதற்றம் ஏன்..??

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»தமிழ்நாடு»கோவையை மிரட்டும் மங்கி குல்லா கொள்ளையன்..
    தமிழ்நாடு

    கோவையை மிரட்டும் மங்கி குல்லா கொள்ளையன்..

    Editor TN TalksBy Editor TN TalksJuly 11, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    Screenshot 2025 07 11 171232
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    தென்னிந்தியாவின் மான்செஸ்டர் என்று அழைக்கப்படும் கோவை மாநகரம் முக்கிய தொழில் நகரமாக விளங்கி வருகிறது. தமிழகத்தில் இருந்து பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த தொழிலாளர்கள் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்தும் ஏராளமான தொழிலாளர்கள் குடும்பத்துடன் தங்கி பணி செய்து வருகின்றனர்.

    இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு டவுசர் கொள்ளையர்கள் மாநகரில் பல்வேறு வீடுகளுக்குள் புகுந்து கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டு வந்தனர். மேலும் தனியார் குடியிருப்பு பகுதிகளில் உள்ள தனித், தனியான வீடுகளில் நோட்டமிட்டு உள்ளே புகுந்து கொள்ளை அடித்து சென்றது தொடர்ந்தது, மேலும் டவுசர் கொள்ளையர்கள், முகத்தை மறைத்துக் கொண்டு, உடல் முழுவதும் எண்ணையை ஊற்றிக் கொண்டு இரவில் செல்லும் சி.சி.டி.வி காட்சிகளும் வெளியாகி கோவையில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. வழக்கு பதிவு செய்த காவல் துறையினர் நீண்ட நாட்கள் போராட்டத்திற்கு பிறகு தீவிர தேடுதல் வேட்டைக்கு பின்னர் வடமாநில டவுசர் கொள்ளையர்களைப் பிடித்து சிறையில் அடைத்தனர்.

    இந்நிலையில் கடந்த திங்கட்கிழமை 7 ம் தேவி அன்று கோவைப்புதூர் பகுதியில் உள்ள சாமுவேல் என்பவரின் வீட்டில் 10 பவுன் நகை 34,000 ரூபாய் ரொக்க பணம் என மேலும் அப்பகுதியில் உள்ள ஐந்து வீடுகளில் கொள்ளைபோனது. இதுகுறித்து குனியமுத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்து உள்ளனர். வழக்கு பதிவு செய்த காவல் துறையினர் கொள்ளை நடந்த வீடுகளுக்கு சென்று ஆய்வு நடத்தி அங்கு இருந்த சி.சி.டி.வி கேமரா காட்சிகளை கைப்பற்றி அதைப் பார்த்த போது, டிப் டாப்பாக உடையில், மங்கி குல்லா அணிந்து கொண்டு ஒவ்வொரு வீடாக நோட்டமிட்டு கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது.

    இதனையடுத்து ரோந்துப் பணிகளை தீவிரப்படுத்தி கண்காணிக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர். மங்கி குல்லா அணிந்த டிப் டாப் கொள்ளையனை உடனடியாக பிடித்து நடவடிக்கை எடுத்தால் மட்டுமே அப்பகுதி மக்கள் நிம்மதி அடைவார்கள்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleஅதிக வட்டிக்கு ஆசைப்பட்டு ரூ.27 லட்சத்தை பறிகொடுத்த பாட்டி
    Next Article தவெக கொடியின் யானைச்சின்னத்திற்கு எதிரான வழக்கு.. இடைக்கால தடைகோரிய மனுவை திரும்ப பெற்ற பகுஜன் சமாஸ்..
    Editor TN Talks

    Related Posts

    மேகதாது அணை கட்டுமானப் பணி; கர்நாடகா மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு; தமிழக அரசுக்கு டிடிவி தினகரன் வலியுறுத்தல்

    July 6, 2026

    திருச்சி : காதல் திருமணம் செய்த பெண்ணை கடத்திய பெற்றோர்..! சினிமா பாணியில் விரட்டிப் பிடித்த போலீசார்..!

    July 6, 2026

    வெட்கமில்லையா விஜய் அரசே..?? ஸ்டிக்கர் ஒட்ட கல்வெட்டை அகற்றுவதா? கொந்தளித்த திமுக..!!

    July 6, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    மேகதாது அணை கட்டுமானப் பணி; கர்நாடகா மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு; தமிழக அரசுக்கு டிடிவி தினகரன் வலியுறுத்தல்

    6 நாள்.. 3 நாடுகள்..!! சுற்றுப்பயணத்தை தொடங்கினார் பிரதமர் மோடி..!!

    போலீஸ் வளையத்தில் மம்தா வீடு..?? மேற்கு வங்கத்தில் பதற்றம் ஏன்..??

    மனுஷன் வாழ்றாப்ல.. 61 வயதில் 3வது கல்யாணம்..!! அமீர்கானை நினைத்து புலம்பும் 90’s கிட்ஸ்..!!

    திருச்சி : காதல் திருமணம் செய்த பெண்ணை கடத்திய பெற்றோர்..! சினிமா பாணியில் விரட்டிப் பிடித்த போலீசார்..!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.