ஒவ்வோர் ஆண்டும் ஜூலை 18-ம் தேதி தமிழ்நாடு நாளாகக் கொண்டாடப்படுகிறது. இந்த நாள், மெட்ராஸ் மாகாணம் அதிகாரப்பூர்வமாகத் ‘தமிழ்நாடு’ எனப் பெயர் மாற்றப்பட்டதை நினைவுகூரும் ஒரு முக்கிய தினமாகும்.
பெயர் மாற்றத்தின் பின்னணி:
1956-ம் ஆண்டு நவம்பர் 1-ம் தேதி மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்டபோது, இந்தியாவின் பிற மாநிலங்கள் இந்த நாளைத் தங்கள் மாநில நாளாகக் கொண்டாடின. தமிழ்நாட்டிலும் 2019-ம் ஆண்டு வரை நவம்பர் 1-ம் தேதியே தமிழ்நாடு நாளாகக் கொண்டாடப்பட்டு வந்தது.
ஆனால், தி.மு.க. அரசு பொறுப்பேற்ற பிறகு, மெட்ராஸ் மாகாணம் ‘தமிழ்நாடு’ எனப் பெயர் மாற்றப்பட்டு, 1967-ம் ஆண்டு ஜூலை 18-ம் தேதி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதைக் கருத்தில் கொண்டு, 2021-ம் ஆண்டு அப்போதைய முதல்வர் மு.க. ஸ்டாலின் ஜூலை 18-ம் தேதியையே தமிழ்நாடு நாளாக அறிவித்தார்.
முதலமைச்சர் மு.க. ஸ்டாலினின் வாழ்த்துச் செய்தி:
இன்றைய தமிழ்நாடு நாளை முன்னிட்டு, முதல்வர் மு.க. ஸ்டாலின் தனது X பக்கத்தில், “தமிழ்நாடு நாள் – தமிழ்கூறு நல்லுலகின் வரலாற்றில் தனிப்பெரும் நாள்! ஜூலை 18, 1967 தி.மு.க. எனும் இயக்கம் ஆட்சிப் பொறுப்பேற்றதால் இம்மண்ணின் முகவரியின் முதல் வரியே மாற்றம் பெற்றது. தமிழ்நாடு என்ற நம் உண்மைப் பெயரை அதிகாரபூர்வமாகப் பெற்று, ஆண்டாண்டு காலமாய் நெஞ்சில் சுமந்த கனவு நனவான நாள்.
#தமிழ்நாடு_நாள் – தமிழ்கூறு நல்லுலகின் வரலாற்றில் தனிப்பெரும் நாள்!
ஜூலை 18, 1967: தி.மு.க. எனும் இயக்கம் ஆட்சிப் பொறுப்பேற்றதால் இம்மண்ணின் முகவரியின் முதல் வரியே மாற்றம் பெற்றது.
தமிழ்நாடு என்ற நம் உண்மைப் பெயரை அதிகாரப்பூர்வமாகப் பெற்று, ஆண்டாண்டு காலமாய் நெஞ்சில் சுமந்த… pic.twitter.com/ja5fC8zRQ0
— M.K.Stalin (@mkstalin) July 18, 2025
அதுவரை இல்லாத சிறப்பாய்த் தாய்நிலத்துக்குத் தலைமகன் பேரறிஞர் அண்ணா பெயர்சூட்டி ‘தமிழ்நாடு தமிழ்நாடு தமிழ்நாடு’ என மூன்று முறை பேரவையில் முழங்க, மேசையொலிகள் விண்ணதிர்ந்த இந்நாள்தான் தமிழ்நாடு நாள்” என்று குறிப்பிட்டுள்ளார்.