Close Menu
    What's Hot

    310 ஸ்ட்ரைக் ரேட்.. தென்னாப்பிரிக்கா செல்வதற்கு முன்பு வைபவ் சூர்யவன்ஷி வெறியாட்டம்

    திருத்தணி ரயிலில் கத்தியுடன் சிறுவர்கள் ரீல்ஸ்… திமுக அரசு மீது இபிஎஸ் கடும் விமர்சனம்

    ஆரவல்லி மலைத் தொடரை வரையறுக்கும் தீர்ப்பு நிறுத்தி வைப்பு! உச்ச நீதிமன்றம் உத்தரவு

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»உலகம்»பாக்.ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பயங்கரவாதி மசூத் அசார் உலா… உளவுத்துறை அதிர்ச்சி ரிப்போர்ட்…
    உலகம்

    பாக்.ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பயங்கரவாதி மசூத் அசார் உலா… உளவுத்துறை அதிர்ச்சி ரிப்போர்ட்…

    Editor TN TalksBy Editor TN TalksJuly 18, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    9 9
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    பயங்கரவாதி மசூத் அசார் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உலா வருவதாக உளவுத்துறை கண்டறிந்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

    அமெரிக்கா மற்றும் ஐ.நா., சபையால் பயங்கரவாதியாக அறிவிக்கப்பட்டவர் மசூத் அசார். ஜெய்ஷ் இ முகமது என்ற பயங்கரவாத இயக்கத்தின் தலைவரான இவர், 2016-ம் ஆண்டு தான்கோட் விமானப்படை தளம் தாக்குதல், 2019ம் ஆண்டு புல்வாமா தாக்குதல் உள்ளிட்ட பல்வேறு பயங்கரவாத தாக்குதல்களுக்கு மூளையாக செயல்பட்டவர். பஹல்காம் சம்பவத்தை அடுத்து, ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை மூலம் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதிகளில் இயங்கி வந்த பயங்கரவாத முகாம்கள் அழிக்கப்பட்டன.

    இந்த தாக்குதலின் போது மசூத் அசாரின் குடும்பமும் கொல்லப்பட்டனர். ஆனால் மசூத் மட்டும் தப்பிவிட்டதாகவும், அவர் எங்கிருக்கிறார் என்ற தகவல் குறித்து தெரியவில்லை எனவும் கூறப்படுகிறது. இந்த நிலையில், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மிரில் அவரது நடமாட்டம் இருப்பதாக உளவுத்துறை கண்டறிந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

    பஹாவல்பூரில் இருந்து 1000 கி.மீ., தொலைவில் உள்ள கில்ஜித்-பல்திஸ்தான் பகுதியில் மசூத் தென்பட்டுள்ளார் என தெரியவந்துள்ளது. அதேபோல, ஸ்கர்டு பகுதியிலும் அவனது நடமாட்டம் இருப்பதை உளவுத்துறை கண்டறிந்துள்ளது. இந்த ஸ்கர்டு பகுதி என்பது, கில்ஜித்-பல்திஸ்தான் பகுதிக்கு உட்பட்ட ஒரு நகரமாகும். இங்கு 2 மசூதிகள், அரசு மற்றும் தனியார் ஓய்வு விடுதிகள் அதிகம் உள்ளன.

    ஆப்கானிஸ்தானில் தான் மசூத் அசார் ஒளிந்து கொண்டிருப்பார் எனவும், பாகிஸ்தான் மண்ணில் அவர் இருந்தால் உடனடியாக பிடித்து இந்தியாவிடம் ஒப்படைப்போம் எனவும் பாகிஸ்தானின் முன்னாள் வெளியுறவு அமைச்சர் பிலாவல் புட்டோ ஜர்தாரி தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleபெண்கள் குறித்து இழிவாக பேசிய சீமான்… மாதர் சங்கம் புகார்…
    Next Article மேற்கு வங்கம் வளர்ச்சிக்கு யாரால் தடை… பிரமர் மோடியின் குற்றச்சாட்டு…
    Editor TN Talks

    Related Posts

    போரா அல்லது சமரசமா?. 3 மணி நேர டிரம்ப்-ஜெலென்ஸ்கி சந்திப்பில் என்ன நடந்தது?

    December 29, 2025

    மெக்சிகோவில் ரயில் தடம் புரண்டு விபத்து!. 13 பேர் பலி, 98 பேர் காயம்!.

    December 29, 2025

    வெளிநாடுகளில் இருந்து இந்தியர்கள் வெளியேற்றம்: அமெரிக்காவை விட முஸ்லிம் நாடுகளில் அதிகம்

    December 29, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    310 ஸ்ட்ரைக் ரேட்.. தென்னாப்பிரிக்கா செல்வதற்கு முன்பு வைபவ் சூர்யவன்ஷி வெறியாட்டம்

    திருத்தணி ரயிலில் கத்தியுடன் சிறுவர்கள் ரீல்ஸ்… திமுக அரசு மீது இபிஎஸ் கடும் விமர்சனம்

    ஆரவல்லி மலைத் தொடரை வரையறுக்கும் தீர்ப்பு நிறுத்தி வைப்பு! உச்ச நீதிமன்றம் உத்தரவு

    பகை முடிவுக்கு வந்தது! சரத் பவார் கட்சியுடன் அஜித் பவார் கட்சி கூட்டணி!

    பல்மருத்துவர்களின் எதிர்காலத்தை பாழாக்கும் திமுக அரசு! நயினார் நாகேந்திரன் தாக்கு

    Trending Posts

    திருத்தணி ரயிலில் கத்தியுடன் சிறுவர்கள் ரீல்ஸ்… திமுக அரசு மீது இபிஎஸ் கடும் விமர்சனம்

    December 29, 2025

    மகனை சரியா வளர்க்கல; கனவில் சொன்ன தாய்!. கண்ணீர் சிந்திய ராமதாஸ்!.

    December 29, 2025

    விஜய் நாவை அடக்கி பேசவேண்டும்!. செல்லூர் ராஜு கொந்தளிப்பு!

    December 29, 2025

    உன்னாவ் வன்கொடுமை வழக்கு!. எந்த சூழ்நிலையிலும் குல்தீப் செங்காரை விடுவிக்க முடியாது!. ஜாமீனை நிறுத்தி வைத்த உச்ச நீதிமன்றம்!

    December 29, 2025

    ‘‘திமுக ஆட்சிக்கு வந்த பிறகுதான் கஞ்சா கலாச்சாரம் உச்சத்தை அடைந்துள்ளது’’ – அன்புமணி

    December 29, 2025
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2025 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.