Close Menu
    What's Hot

    அதிக கோல்கள் அடித்தால் மட்டும் போதாது! “கோல்டன் பூட்” விருதுக்கான பிஃபா-வின் புதிய விதிகள் என்ன?

    அதிமுகவினர் மாறவில்லை ; தவெகவால் விலை பேசப்பட்டவர்கள் கட்சி மாறியிருக்கிறார்கள் – அக்ரி கிருஷ்ணமூர்த்தி

    அரசு பேருந்து கட்டணத்திலேயே 500 ஆம்னி பேருந்துகளை இயக்க தயார்!. முதலமைச்சரிடம் உரிமையாளர்கள் சங்கம் கோரிக்கை!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»இந்தியா»இந்திய மகளிரின் சிந்தூரத்திற்காகவே ஆபரேஷன் சிந்தூர் – ராஜ்நாத் சிங்
    இந்தியா

    இந்திய மகளிரின் சிந்தூரத்திற்காகவே ஆபரேஷன் சிந்தூர் – ராஜ்நாத் சிங்

    Editor TN TalksBy Editor TN TalksJuly 28, 2025Updated:July 28, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    Rajnath Singh 1748503623786 1748503624011
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் கடந்த ஏப்ரல் 22-ந்தேதி பாகிஸ்தானை அடிப்படையாக கொண்டு செயல்படும் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் அப்பாவி சுற்றுலா பயணிகள் 26 பேர் பலியானார்கள். இதற்கு பதிலடியாக, இரு வாரங்களுக்கு பின்னர் ஆபரேஷன் சிந்தூர் இந்தியா தரப்பில் மேற்கொள்ளப்பட்டது. இதுகுறித்து நாடாளுமன்றத்தில் விவாதம் நடைபெற்றது.

    ஆபரேசன் சிந்தூர் பற்றி மக்களவையில் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பேசியதாவது..

    நாட்டுக்காக உயிர் தியாகம் செய்த தைரியம் நிறைந்த வீரர்களுக்கு என்னுடைய அஞ்சலியை செலுத்தி கொள்கிறேன். பயங்கரவாதத்திற்கு எதிரான உறுதியான நடவடிக்கையாக ஆபரேசன் சிந்தூர் அமைந்தது. இந்தியாவின் நவீன ஏவுகணைகளை பயன்படுத்தி தாக்குதல் நடத்தினோம்.

    இந்திய மகளிரின் சிந்தூர் அழிக்கப்பட்டதற்கு பதிலடியாகவே தாக்குதல் நடத்தப்பட்டது. பாகிஸ்தானில் தீவிரவாத இடங்களை மட்டுமே நாங்கள் இலக்காக கொண்டு தாக்குதல் நடத்தினோம். பாகிஸ்தான் தாக்குதலால் இந்தியாவுக்கு எந்தவொரு பாதிப்பும் இல்லை.

    இந்திய வீரர்களின் வீரத்திற்குகும், திறமைக்கும் நான் தலைவணங்குகிறேன். அப்போது, இந்திய படைகளுக்கு முழு அதிகாரம் கொடுக்கப்பட்டது. பயங்கரவாத செயல்களை இந்தியா பொறுத்து கொள்ளாது என ஆபரேசன் சிந்தூர் வாயிலாக தெளிவுப்படுத்தப்பட்டது. ஆனால், கொல்லப்பட்ட பயங்கரவாதிகளுக்கு பாகிஸ்தான் அரசு மரியாதை செலுத்தியது

    நமது இலக்கு 100 சதவீதம் எட்டப்பட்டு விட்டது. ஆபரேசன் சிந்தூர் நடவடிக்கையின்போது, எந்த அழுத்தத்திற்கும் அடிபணியவில்லை. அது ஒரு தற்காப்பு நடவடிக்கை. முப்படைகளின் அசாத்திய ஒருங்கிணைப்புக்கு இது ஒரு சிறந்த உதாரணம்.

    பயங்கரவாதிகளை வளர்த்தெடுக்கும் இடங்கள் மட்டுமே இலக்காக இருந்தது. போரை நிறுத்த முதலில் பாகிஸ்தான் நாடே கோரிக்கை விடுத்தது. பாகிஸ்தான் விமான தளங்கள் தாக்கப்பட்டதும், தாக்குதலை நிறுத்த அந்நாட்டு அதிகாரிகள் கோரிக்கை விடுத்தனர். நம்முடைய நோக்கங்கள் நிறைவேறின என்று பேசியுள்ளார்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleமுன்னாள் எம்.பி.ஞானதிரவியம் வழக்கு – இன்ஸ்பெக்டர்களுக்கு சம்மன்
    Next Article சிவகங்கையில் நாளை சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இபிஎஸ்
    Editor TN Talks

    Related Posts

    அதிக கோல்கள் அடித்தால் மட்டும் போதாது! “கோல்டன் பூட்” விருதுக்கான பிஃபா-வின் புதிய விதிகள் என்ன?

    July 17, 2026

    அதிமுகவினர் மாறவில்லை ; தவெகவால் விலை பேசப்பட்டவர்கள் கட்சி மாறியிருக்கிறார்கள் – அக்ரி கிருஷ்ணமூர்த்தி

    July 17, 2026

    அரசு பேருந்து கட்டணத்திலேயே 500 ஆம்னி பேருந்துகளை இயக்க தயார்!. முதலமைச்சரிடம் உரிமையாளர்கள் சங்கம் கோரிக்கை!

    July 17, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    அதிக கோல்கள் அடித்தால் மட்டும் போதாது! “கோல்டன் பூட்” விருதுக்கான பிஃபா-வின் புதிய விதிகள் என்ன?

    அதிமுகவினர் மாறவில்லை ; தவெகவால் விலை பேசப்பட்டவர்கள் கட்சி மாறியிருக்கிறார்கள் – அக்ரி கிருஷ்ணமூர்த்தி

    அரசு பேருந்து கட்டணத்திலேயே 500 ஆம்னி பேருந்துகளை இயக்க தயார்!. முதலமைச்சரிடம் உரிமையாளர்கள் சங்கம் கோரிக்கை!

    காவிரி நீர்;  ஒன்றிய அரசு விவசாயிகளை ஏமாற்றுகிறது – அமைச்சர் ஷாஜஹான் குற்றச்சாட்டு!

    “இப்போது சிரிப்பார்கள்… நாளை என்னைத் தேடி வருவார்கள்!” – சீமான் சீரியஸ் பேச்சு

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.