Close Menu
    What's Hot

    மக்கள் தொகை சுய கணக்கெடுப்பு… மக்களுக்கு முதலமைச்சர் விஜய் அழைப்பு!

    பிக் பாஸ் சீசன் 10!. முன்கூட்டியே களமிறங்கும் பிரம்மாண்ட நிகழ்ச்சி! ரசிகர்களுக்கு காத்திருக்கும் சர்ப்ரைஸ்!

    பிரிட்டனின் புதிய பிரதமராக ஆண்டி பர்ன்ஹாம் தேர்வு!.

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»தமிழ்நாடு»100 நாள் வேலைத்திட்டத்தில் முறைகேடு – போராட்டம்
    தமிழ்நாடு

    100 நாள் வேலைத்திட்டத்தில் முறைகேடு – போராட்டம்

    Editor TN TalksBy Editor TN TalksAugust 1, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    signal 2022 06 23 182457 005 1655989185
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    ஆண்டிபட்டி அருகே ரெங்கசமுத்திரம் ஊராட்சியில் ஆறு மாதங்களுக்குப் பிறகு 100 நாள் வேலைக்கு அழைத்த நிலையில் வேலை வழங்காமல் அலைக்கழித்ததாக 100 நாள் வேலை பணியாளர்கள் ஆத்திரத்தில் சாலை மறியல் போராட்டம். கடந்த ஆறு மாதங்களாக 100 நாள் வேலைப் பணி முறையாக வழங்கப்படவில்லை என குற்றச்சாட்டு.

    தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி தாலுகா ரெங்கசமுத்திரம் ஊராட்சிக்குட்பட்ட 10க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த சுமார் 500க்கும் மேற்பட்ட பொதுமக்கள் 100 நாள் வேலை திட்டத்தில் பதிவு செய்து பணிபுரிந்து வரும் நிலையில்,கடந்த 6 மாதங்களாக இவர்களுக்கு 100 நாள் வேலைப்பணி முறையாக வழங்காமல் ஊராட்சி நிர்வாகம் அலைக்கழிப்பதாக பணியாளர்கள் குற்றம்சாட்டி வந்த நிலையில்,

    6 மாதங்களுக்கு பிறகு இன்று 100 நாள் வேலைக்கு ஊராட்சியில் பணிபுரியும் 100 நாள் வேலைத்திட்ட பணித்தள பொறுப்பாளர் அழைத்த நிலையில், ரெங்கசமுத்திரம், ஜம்புலிபுத்தூர் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் காலை வேலைக்கு வந்த நிலையில் காலை 9மணி வரை ஊராட்சி நிர்வாகத்தில் இருந்து அலுவலர்கள் எவரும் வரவில்லை என்றும், பணித்தள பொறுப்பாளருக்கு போன் செய்தால் போனை சுவிட்ச் ஆப் செய்ததாகவும் குற்றம் சாட்டினர். வேலைக்கு வந்து வேலை கிடைக்காத ஆத்திரத்தில் 100 நாள் வேலை திட்ட பெண்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் ஆண்டிபட்டி வைகை அணை செல்லும் சாலையில் ஜம்புலிபுத்தூர் பகுதியில் சாலையில் அமர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதனால் ஆண்டிப்பட்டி வைகை அணை சாலையில் பரபரப்பான சூழல் நிலவியது. சம்பவ இடத்திற்கு வந்த ஆண்டிப்பட்டி போலீசார் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட நபர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
    அப்போது கிராம வட்டார வளர்ச்சி அலுவலர் சம்பவ இடத்திற்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார்.அப்போது கிராம வட்டார வளர்ச்சி அலுவலரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் தங்களுக்கு முறையாக 100 நாள் வேலை திட்ட பணிகள் வழங்க வேண்டும் என்றும்,

    ஊராட்சியில் உள்ள பணித்தள பொறுப்பாளர் வேறு பகுதியைச் சேர்ந்தவர் என்பதால் தங்கள் பகுதியைச் சேர்ந்தவரையே நியமிக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.அதனைத் தொடர்ந்து கிராம வட்டார வளர்ச்சி அலுவலக உரிய நடவடிக்கை எடுத்து வேலை முறையாக வழங்குவதாக கூறியதன் அடிப்படையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட பணியாளர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleகாரைக்கால் டைல்ஸ் ஆலைக்கு எதிராக போராட்டம்
    Next Article திமுக முன்னாள் அமைச்சரின் மகனுக்கு சிக்கல்
    Editor TN Talks

    Related Posts

    மக்கள் தொகை சுய கணக்கெடுப்பு… மக்களுக்கு முதலமைச்சர் விஜய் அழைப்பு!

    July 17, 2026

    சமூக நீதி விடுதியில் முதல்வர் விஜய் திடீர் ஆய்வு… குறைகளை அடுக்கிய மாணவர்கள்

    July 17, 2026

    அமைச்சர் புஸ்ஸி ஆனந்த் பிறந்தநாள்!. ரத்தினகிரி முருகன் கோவிலில் தவெகவினரின் பிரம்மாண்ட அன்னதானம்!

    July 17, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    மக்கள் தொகை சுய கணக்கெடுப்பு… மக்களுக்கு முதலமைச்சர் விஜய் அழைப்பு!

    பிக் பாஸ் சீசன் 10!. முன்கூட்டியே களமிறங்கும் பிரம்மாண்ட நிகழ்ச்சி! ரசிகர்களுக்கு காத்திருக்கும் சர்ப்ரைஸ்!

    பிரிட்டனின் புதிய பிரதமராக ஆண்டி பர்ன்ஹாம் தேர்வு!.

    இங்கிலாந்தின் அடுத்த பிரதமராகிறார் ஆண்டி பர்ன்ஹாம்… தொழிலாளர் கட்சியின் புதிய தலைவராக தேர்வு!

    சமூக நீதி விடுதியில் முதல்வர் விஜய் திடீர் ஆய்வு… குறைகளை அடுக்கிய மாணவர்கள்

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.