Close Menu
    What's Hot

    காமன்வெல்த் போட்டியில் வெள்ளிப் பதக்கம்…. ராஜா முத்துப்பாண்டிக்கு ரூ.30 இலட்சம் வழங்கிய முதலமைச்சர்

    நாட்டை விட்டு வெளியேற நேர்ந்தது; மக்களை விட்டு அல்ல…! கண்ணீர் மல்க பேசிய ஷேக் ஹசீனா

    அசாம் வெள்ளப் பாதிப்பு: சேதங்களை ஆய்வு செய்த மத்திய அமைச்சர் ஜே.பி. நட்டா

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»தமிழ்நாடு»புழல் சிறைக்கைதிகளுக்கு சுகாதாரமான உணவு – அரசு பதிலளிக்க உத்தரவு
    தமிழ்நாடு

    புழல் சிறைக்கைதிகளுக்கு சுகாதாரமான உணவு – அரசு பதிலளிக்க உத்தரவு

    Editor TN TalksBy Editor TN TalksAugust 4, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    puzhal jail 6600 1537508999
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    புழல் சிறையில் உள்ள கைதிகளுக்கு சுகாதாரமான உணவு மற்றும் முறையான மருத்துவ வசதி வழங்காதது குறித்த மனுவுக்கு தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    சென்னையை சேர்ந்த பைஃசல் ஹமீது என்பவர் தாக்கல் செய்த மனுவில், கடந்தாண்டு சட்டவிரோத செயல்கள் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யபட்டு புழல் சிறையில் உள்ள தம்மை தனி சிறையில் வைத்து கொடுமை செய்வதாகவும், அடிப்படை தேவைகளான சோப் உள்ளிட்ட பொருட்களை வழங்க மறுப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

    மேலும், ஆயிரத்திற்கும் மேற்பட்ட கைதிகள் உள்ள புழல் சிறையில் சரியான நேரத்திற்கு கைதிகளுக்கு உணவு வழங்கவில்லை எனவும், சுகாதாரமற்ற உணவு வழங்குவதாகவும், முறையான மருத்துவ வசதி இல்லை என்றும், சிறைக்கு புதிதாக வரும் விசாரணை கைதிகளை சமையல் மற்றும் சுத்தம் செய்யும் வேலைகளில் ஈடுபடுத்துவதாகவும் மனுவில் தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக புகார் அளித்த தம்மை தனி சிறையில் வைத்து சித்தரவதை செய்வதாகவும், தன்னுடைய குடும்பத்தினரை சந்திக்க அனுமதி மறுப்பதாகவும், இதுதொடர்பாக உள்துறை கூடுதல் தலைமை செயலாளரிடம் கடந்த ஜூன் மாதம் மனு அளித்தும் மனு மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என தெரிவித்துள்ளார்.

    இந்த மனு நீதிபதி எம்.எஸ்.ரமேஷ் மற்றும் வி.லட்சுமி நாராயணன் முன்பு விசாரணைக்கு வந்தபோது, மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் எஸ்.நதியா ஆஜராகி, இந்த புகார்கள் தொடர்பாக விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் என தெரிவித்தார்.இதையடுத்து, வழக்கு தொடர்பாக சிறைத்துறை நிர்வாகம் பதிலளிக்க உத்தரவிட்ட நீதிபதிகள் , விசாரணையை ஆகஸ்ட் 12ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleஎவரெஸ்ட் ஏறிய மாணவரை கவுரவித்த வேலம்மாள் பள்ளி
    Next Article ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட இந்திய கம்யூ.கட்சியினர்…
    Editor TN Talks

    Related Posts

    காமன்வெல்த் போட்டியில் வெள்ளிப் பதக்கம்…. ராஜா முத்துப்பாண்டிக்கு ரூ.30 இலட்சம் வழங்கிய முதலமைச்சர்

    August 5, 2026

    தவெக பட்ஜெட் வெற்று அறிக்கை தான்..! சீமான் விமர்சனம்..!

    August 5, 2026

    தூத்துக்குடியில் கப்பல் கட்டும் தளம்… மீனவர்களுக்கான பல்வேறு அறிவிப்புகள் வரும் … அமைச்சர் ஸ்ரீநாத் தகவல்

    August 5, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    காமன்வெல்த் போட்டியில் வெள்ளிப் பதக்கம்…. ராஜா முத்துப்பாண்டிக்கு ரூ.30 இலட்சம் வழங்கிய முதலமைச்சர்

    நாட்டை விட்டு வெளியேற நேர்ந்தது; மக்களை விட்டு அல்ல…! கண்ணீர் மல்க பேசிய ஷேக் ஹசீனா

    அசாம் வெள்ளப் பாதிப்பு: சேதங்களை ஆய்வு செய்த மத்திய அமைச்சர் ஜே.பி. நட்டா

    தவெக பட்ஜெட் வெற்று அறிக்கை தான்..! சீமான் விமர்சனம்..!

    தூத்துக்குடியில் கப்பல் கட்டும் தளம்… மீனவர்களுக்கான பல்வேறு அறிவிப்புகள் வரும் … அமைச்சர் ஸ்ரீநாத் தகவல்

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.