Close Menu
    What's Hot

    இட ஒதுக்கீடு உயர்வு கோரிக்கையை  தவறாகச் சித்தரிப்பதா? பாஜகவுக்கு எஸ்.டி.பி.ஐ கண்டனம்

    தமிழ்நாட்டின் நிதி நிலைமை: வெள்ளை அறிக்கை வெளியிட்டார் நிதி அமைச்சர் மரியவில்சன்

    யாருக்கு யார் பாடம் நடத்துவது?  ஜெயக்குமார் Vs ஜோசப் விஜய்

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»தமிழ்நாடு»திருப்பூரில் இளம் பெண் தற்கொலை… கணவர் குடும்பத்துடன் கைது…
    தமிழ்நாடு

    திருப்பூரில் இளம் பெண் தற்கொலை… கணவர் குடும்பத்துடன் கைது…

    Editor TN TalksBy Editor TN TalksAugust 7, 2025Updated:August 7, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    5 5
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    திருப்பூரில் வரதட்சணை கொடுமையால் தற்கொலை செய்து கொண்ட புதுப்பெண்ணின் வழக்கில், அவரது கணவர் குடும்பத்தினருடன் கைது செய்யப்பட்டுள்ளார்.

    திருப்பூர் மாவட்டம் கே.செட்டிப்பாளையம் பகுதியை சேர்ந்த தொழிலதிபரான குப்புசாமி – சுகந்தி தம்பதியின் மகள் பிரீத்தி. 26 வயதான பிரீத்திக்கும், ஈரோடு மாவட்டம் வீரப்பன் சத்திரத்தை சேர்ந்த என்ஜினீயரான சதீஸ்வர் என்பவருக்கும் கடந்த 11 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.

    திருமணத்தின் போது பிரீத்திக்கு 120 சவரன் நகை, ரூ.25லட்சம் ரொக்கம் ஆகியவை வரதட்சணையாக கொடுத்ததாக கூறப்படுகிறது. திருமணத்திற்கு பிறகு பிரீத்தியின் பெற்றோர், சின்னக்கரையில் உள்ள சொத்தை சமீபத்தில் விற்பனை செய்துள்ளனர். இதில் பிரீத்தியின் பங்காக ரூ.50லட்ச ரூபாய் பணத்தை பெற்றோரிடம் இருந்து வாங்கி வருமாறு, பிரீத்தியின் கணவர் மற்றும் மாமியார் தகராறு செய்துள்ளனர். இதனால் கடந்த 11-ம் தேதி பிரீத்தி தனது பெற்றோர் வீட்டிற்கு வந்துள்ளார்.

    மன உளைச்சலில் இருந்த பிரீத்தி கடந்த 5-ம் தேதி வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். வரதட்சணை கொடுமையால் தான் பிரீத்தி தற்கொலை செய்து கொண்டதாக குற்றம்சாட்டி, உறவினர்கள் உடலை வாங்க மறுப்பு தெரிவித்தனர். காவல்துறையினர் பிரீத்தியின் பெற்றோரிடம் பேச்சுவார்த்தை நடத்திய நிலையில், அவரது மரணத்திற்கு காரணமான சதீஸ்வர் மற்றும் அவரது பெற்றோரை கைது செய்ய வேண்டுமென வலியுறுத்தி இருந்தனர்.

    அதன்பேரில் பிரீத்தியின் கணவர் சதீஸ்வர், மாமனார் விஜயகுமார் மற்றும் மாமியார் உமா ஆகியோரை நல்லூர் போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். இதனையடுத்து பிரீத்தியின் உடலை வாங்கி சென்றனர். அவரது வீட்டில் வைக்கப்பட்டுள்ள பிரீத்தியின் உடலுக்கு உறவினர்கள் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleதூய்மை பணியாளர்கள் மீது மு.க.ஸ்டாலினுக்கு அக்கறை உள்ளதா? அன்புமணி கேள்வி…
    Next Article விருத்தாசலம் : நாய் குறுக்கே வந்ததால் கவிழ்ந்த ஆட்டோ… 5-வயது சிறுவன் உயிரிழப்பு…
    Editor TN Talks

    Related Posts

    இட ஒதுக்கீடு உயர்வு கோரிக்கையை  தவறாகச் சித்தரிப்பதா? பாஜகவுக்கு எஸ்.டி.பி.ஐ கண்டனம்

    June 16, 2026

    தமிழ்நாட்டின் நிதி நிலைமை: வெள்ளை அறிக்கை வெளியிட்டார் நிதி அமைச்சர் மரியவில்சன்

    June 16, 2026

    யாருக்கு யார் பாடம் நடத்துவது?  ஜெயக்குமார் Vs ஜோசப் விஜய்

    June 16, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    இட ஒதுக்கீடு உயர்வு கோரிக்கையை  தவறாகச் சித்தரிப்பதா? பாஜகவுக்கு எஸ்.டி.பி.ஐ கண்டனம்

    தமிழ்நாட்டின் நிதி நிலைமை: வெள்ளை அறிக்கை வெளியிட்டார் நிதி அமைச்சர் மரியவில்சன்

    யாருக்கு யார் பாடம் நடத்துவது?  ஜெயக்குமார் Vs ஜோசப் விஜய்

    பயிர்க்கடன் தள்ளுபடி; முரணாகச் செயல்படுகிறது தவெக அரசு – டிடிவி தினகரன் குற்றச்சாட்டு

    அதிமுகவில் அடுத்த விக்கெட் காலி;  எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்தார் விஜயபாஸ்கர்

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.