Close Menu
    What's Hot

    இன்றைய ராசிபலன் 29.12.2025: இவர்களுக்கு நினைத்தது நிறைவேறும்

    IND W vs SL W: 4வது டி20!. அதிகபட்ச டி20 ஸ்கோர்!. இலங்கையை வீழ்த்தி இந்திய மகளிர் அணி அபாரம்!.

    சிறை’ விமர்சனம்: மனிதத்தை வலியுறுத்தும் உணர்வுபூர்வ சினிமா!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»அரசியல்»அதிமுக பொதுச்செயலாளர் பதவி தொடர்பான வழக்கு தள்ளிவைப்பு
    அரசியல்

    அதிமுக பொதுச்செயலாளர் பதவி தொடர்பான வழக்கு தள்ளிவைப்பு

    Editor TN TalksBy Editor TN TalksAugust 25, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    eps
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    அதிமுக பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டதை எதிர்த்த வழக்கை நிராகரிக்க மறுத்த உரிமையியல் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து, எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு மீதான தீர்ப்பை சென்னை உயர் நீதிமன்றம், தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்துள்ளது.

    கடந்த 2022ம் ஆண்டு ஜூலை 11ம் தேதி நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில் அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி அறிவிக்கப்பட்டதை எதிர்த்தும், பொதுக்குழு தீர்மானங்களை எதிர்த்தும் திண்டுக்கல்லைச் சேர்ந்த சூர்யமூர்த்தி என்பவர் சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

    இந்த வழக்கை நிராகரிக்க கோரி எடப்பாடி பழனிச்சாமி தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து கடந்த ஜூலை மாதம் சென்னை உரிமையியல் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

    இந்த உத்தரவை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது.

    இந்த வழக்கு இன்று நீதிபதி பி.பி.பாலாஜி முன்பு விசாரணைக்கு வந்த போது, இ பி எஸ் சார்பில் மூத்த வழக்கறிஞர் விஜய் நாராயண் மற்றும் வழக்கறிஞர் நர்மதா சம்பத் ஆகியோர் ஆஜராகினர்.

    அப்போது, 2018ம் ஆண்டிலிருந்து சூர்ய மூர்த்தி கட்சியின் உறுப்பினராக இல்லை எனவும் அதிமுக வேட்பாளரை எதிர்த்து சூர்ய மூர்த்தி போட்டியிட்டதாகவும் தெரிவித்தார்.

    கட்சியில் உறுப்பினராக இல்லாத ஒருவர் கட்சி விவகாரம் குறித்து மனுத்தாக்கல் செய்ய முடியாது எனவும் வாதிட்டார். சூர்ய மூர்த்தி சார்பில் ஆஜரான வழக்கறிஞர் எம்.வேல்முருகன், கட்சி விதிப்படி கட்சியின் உறுப்பினராக தொடர்வதாக கூறினார்.

    கட்சியின் பொதுச்செயலாளர் அடிப்படை உறுப்பினர்களால் தான் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்ற கட்சியின் நிறுவனர் எம்.ஜி.ஆரின். விருப்பத்தை மீறி கட்சி விதியில் மாற்றம் செய்யப்பட்டதாக தெரிவித்தார். கட்சியின் பொதுச்செயலாளர் அடிப்படை உறுப்பினர்களால் தான் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்பது கட்சியின் அடிப்படை விதி. அதனை பொதுக்குழுவால் மாற்ற முடியாது எனக்கூறினார்.
    எம்.ஜி.ஆர். மக்கள் கட்சியின் கூட்டணியுடன் சுயேட்சையாகவே போட்டியிட்டதாகவும் சூர்ய மூர்த்தி தரப்பில் கூறப்பட்டது.

    இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்த மனு மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்தார் .

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleகாலை உணவுத் திட்டம் – அமுதா ஐஏஎஸ் விளக்கம்
    Next Article உலர் சாம்பல் விற்பனையில் முறைகேடு – நீதிமன்றம் கேள்வி
    Editor TN Talks

    Related Posts

    “திமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 10 தொகுதிகள் வேண்டும்” – வைகோவிடம் நிர்வாகிகள் வலியுறுத்தல்

    December 29, 2025

    கூட்டணி பற்றி இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்” – ஜி.கே.மணி தகவல்

    December 29, 2025

    பழனிசாமிக்கு அஜித் படம் பரிசளிப்பு: அதிமுக பிரச்சாரத்தில் சுவாரஸ்யம்!

    December 29, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    இன்றைய ராசிபலன் 29.12.2025: இவர்களுக்கு நினைத்தது நிறைவேறும்

    IND W vs SL W: 4வது டி20!. அதிகபட்ச டி20 ஸ்கோர்!. இலங்கையை வீழ்த்தி இந்திய மகளிர் அணி அபாரம்!.

    சிறை’ விமர்சனம்: மனிதத்தை வலியுறுத்தும் உணர்வுபூர்வ சினிமா!

    வெளிநாடுகளில் இருந்து இந்தியர்கள் வெளியேற்றம்: அமெரிக்காவை விட முஸ்லிம் நாடுகளில் அதிகம்

    “திமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 10 தொகுதிகள் வேண்டும்” – வைகோவிடம் நிர்வாகிகள் வலியுறுத்தல்

    Trending Posts

    இன்றைய ராசிபலன் 29.12.2025: இவர்களுக்கு நினைத்தது நிறைவேறும்

    December 29, 2025

    IND W vs SL W: 4வது டி20!. அதிகபட்ச டி20 ஸ்கோர்!. இலங்கையை வீழ்த்தி இந்திய மகளிர் அணி அபாரம்!.

    December 29, 2025

    சிறை’ விமர்சனம்: மனிதத்தை வலியுறுத்தும் உணர்வுபூர்வ சினிமா!

    December 29, 2025

    வெளிநாடுகளில் இருந்து இந்தியர்கள் வெளியேற்றம்: அமெரிக்காவை விட முஸ்லிம் நாடுகளில் அதிகம்

    December 29, 2025

    “திமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 10 தொகுதிகள் வேண்டும்” – வைகோவிடம் நிர்வாகிகள் வலியுறுத்தல்

    December 29, 2025
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2025 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.