Close Menu
    What's Hot

    தேர்தல் அறிக்கை தயாரிக்க A.I. தொழில்நுட்பம்! திமுக புது வியூகம்

    உத்தர பிரதேச அரசு பள்ளிகளில் செய்தித் தாள்கள் வாசிப்பது கட்டாயம்! தினமும் 10 நிமிடம் ஒதுக்கீடு

    தட்கல் டிக்கெட்: மேலும் 5 ரயில்களில் ஓடிபி கட்டாயம்!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»தமிழ்நாடு»கரூர் துயர சம்பவம்: சிபிஐ அதிகாரிகளிடம் மனு அளிக்க வந்த ஜோதிடர்!
    தமிழ்நாடு

    கரூர் துயர சம்பவம்: சிபிஐ அதிகாரிகளிடம் மனு அளிக்க வந்த ஜோதிடர்!

    Editor TN TalksBy Editor TN TalksNovember 6, 2025Updated:November 6, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    karur jothidar
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    கரூர் துயர சம்பவம் தொடர்பாக கரூர் சுற்றுலா மாளிகைக்கு சிபிஐ அதிகாரிகளிடம் மனு அளிக்க ஒரு ஜோதிடர் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

    கரூர் வேலுசாமிபுரத்தில் கடந்த செப்.27-ம் தேதி நடந்த தவெக பிரச்சாரக் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்த வழக்கை விசாரித்து வரும் சிபிஐ இதுவரை 300-க்கும் மேற்பட்டவர்களுக்கு சம்மன் அனுப்பி அக்.30-ம் தேதி கரூர் நகர இன்ஸ்பெக்டர் மணிவண்ணன், அக்.31-ம் தேதி வேலுசாமிபுரத்தில் உள்ள வியாபாரிகளிடம் விசாரணை நடத்தினர்.

    அக்.31-ம் தேதி ஈரோடு சாலையை 3டி லேசர் கருவி மூலம் சாலையை அளவீடு செய்ததுடன் அப்பகுதியில் உள்ள கடைகள், நிறுவனங்கள், அலுவலகங்கள், வீடுகளில் நேரடியாக விசாரணை நடத்தி சிசிடிவி கேமரா பதிவுகளை வழங்க கேட்டனர். நவ.1-ம் தேதி முழுக்க 3டி லேசர் கருவி மூலம் அளவீடு பணிகள் மேற்கொண்டனர். நவ.2-ம் தேதி வேலுசாமிபுரம் வர்த்தகர்களிடம் விசாரணை நடத்தினர். மேலும் கரூர் காமராஜபுரத்தில் ராம்குமாரை என்பவரைத் தேடிச் சென்றனர். அவர் அங்கு இல்லாததாலும் சென்னை சென்றிருப்பதாக கிடைத்த தகவல் காரணமாக 3 பேர் கொண்ட சிபிஐ குழு சென்னை சென்றது.

    சென்னை பனையூரில் உள்ள தவெக அலுவலகத்திற்கு சென்று பிரச்சார வாகனத்தின் சிசிடிவி கேமரா பதிவுகள், நிகழ்ச்சியில் பங்கேற்றவர்கள் விவரங்களை கேட்டு சம்மன் வழங்கினார். ராம்குமார் குறித்தும் விசாரித்து வருகின்றனர். செப்.27-ம் தேதி வேலுசாமிபுரத்தில் தவெக பிரச்சாரக் கூட்ட பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டிருந்த கரூர் மாவட்ட மற்றும் வெளிமாவட்ட போலீஸாரிடம் கடந்த 2 நாட்களாக விசாரணை நடைபெற்று வருகிறது.

    கரூரில் சிபிஐ அதிகாரிகள் பல்வேறு குழுக்களாக பிரிந்தும், சுற்றுலா மாளிகைக்கு வெளியே தங்கியும் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். வேலுசாமிபுரத்தில் இருந்து விசாரணைக்கு வந்தவர்களை வழக்கறிஞர் ஒருவர் தூண்டிவிட்டு வருவதாக சந்தேகிக்கும் சிபிஐ அதிகாரிகள், அந்த வழக்கறிஞரின் விவரங்களை கண்டுபிடித்து அவரையும் விசாரணைக்கு ஆஜராகக் கோரி சம்மன் அனுப்ப திட்டமிட்டுள்ளனர்.

    இந்நிலையில், கரூர் சுற்றுலா மாளிகையில் விசாரணை பணிகளை மேற்கொண்டு வரும் சிபிஐ அதிகாரிகளை கரூர் பசுபதிபாளையத்தை சேர்ந்த ஜோதிடர் சுந்தரம் சந்திக்க வந்தார். இது குறித்து பாரா காவலர் அளித்த தகவலின்பேரில் சிபிஐ இன்ஸ்பெக்டர் மனோகரன், ஜோதிடரை சந்தித்து தற்போது பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்ட போலீஸாரிடம் விசாரணை மேற்கொண்டு வருவதால் வரும் திங்கள், செவ்வாய்க்கிழமைகளில் வருமாறு கூறி அனுப்பி வைத்தார்.

    மேலும், இதுபோன்ற விஷயங்களை செய்தியாளர்கள் ஊக்குவிக்க வேண்டாம். மேலும், இதன் பின்னணியில் யாரேனும் இருக்கலாம் என சந்தேகிப்பதாகவும் அவர் தெரிவித்தார். ஜோதிடர் ஆர்.சுந்தரம் கொண்டு வந்த மனுவில், ‘ஆக.14-ம் தேதி பசுபதிபாளையம் காவல் நிலையம் அருகேயுள்ள ரவுண்டானா அருகே சாலையை ஆக்கிரமித்து திமுக பொதுக் கூட்டம் நடைபெற்றது. இதற்கு கடுமையான கண்டனம் தெரிவிக்கப்பட்ட நிலையில், மீண்டும் செப்.27-ம் தேதி தவெக பிரச்சாரக் கூட்டத்துக்கு ஈரோடு சாலையில் வேலுசாமிபுரத்தில் எதற்காக அனுமதி கொடுக்கப்பட்டது என எஸ்பியிடம் மனு அளித்துள்ளேன்.

    இந்த கோர சம்பவத்துக்கு 100-க்கு 100 சதவிகிதம் அரசும், கரூர் காவல் துறையும்தான் காரணம் என்பதை பதிவு செய்கிறேன். முதலில் காவல் துறை சாலையை மறித்து வாகன போக்குவரத்தை தடை செய்து பரப்புரைக்கு அனுமதி வழங்கியது முதல் தவறு. காவல் துறை தடியடி நடத்தி அதன் காரணமாக மக்கள் முண்டியத்து ஒருவர் ஒருவர் மீது விழுந்து உயிரிழந்துள்ளனர். மேலும் இதன் பின்னணியில் சதிச் செயலும் உள்ளது’ என குறிப்பிட்டுள்ளார்.

    karur#stampede#jothidar
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleவழக்கறிஞர்களால் பாதிக்கப்பட்டவர்கள் பார் கவுன்சிலில் புகார் அளிக்கலாம்: உயர் நீதிமன்றம் உத்தரவு
    Next Article சுந்தர்.சி இயக்கத்தில் ரஜினிகாந்த்… தயாரிப்பாளர் கமல்ஹாசன் அறிவிப்பு
    Editor TN Talks

    Related Posts

    தட்கல் டிக்கெட்: மேலும் 5 ரயில்களில் ஓடிபி கட்டாயம்!

    December 26, 2025

    சமூகவலைதளங்களை பயன்படுத்த சிறுவர்களுக்குத் தடை! மத்திய அரசுக்கு ஐகோர்ட் கிளை உத்தரவு

    December 26, 2025

    சுனாமி நினைவு தினம்: கடலோர மாவட்டங்களில் கண்ணீர் அஞ்சலி

    December 26, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    தேர்தல் அறிக்கை தயாரிக்க A.I. தொழில்நுட்பம்! திமுக புது வியூகம்

    உத்தர பிரதேச அரசு பள்ளிகளில் செய்தித் தாள்கள் வாசிப்பது கட்டாயம்! தினமும் 10 நிமிடம் ஒதுக்கீடு

    தட்கல் டிக்கெட்: மேலும் 5 ரயில்களில் ஓடிபி கட்டாயம்!

    அதிமுகவில் டிச.31 வரை விருப்ப மனு அளிக்கலாம்! இபிஎஸ் அறிவிப்பு

    தேர்தல் நேரத்தில் கோயில், பக்தி ! திருமா. மீது குஷ்பு தாக்கு

    Trending Posts

    வரிவிதிப்பால் பாதிக்கப்பட்ட தொழில்களுக்கு தமிழகம் துணை நிற்கும்; முதல்வர் ஸ்டாலின்

    December 26, 2025

    தேமுதிகவுக்கு 6 தொகுதிகள் ஒதுக்கீடா? ஜெயக்குமார் சொன்ன பதில் இதுதான்

    December 26, 2025

    சுனாமி நினைவு தினம்: கடலோர மாவட்டங்களில் கண்ணீர் அஞ்சலி

    December 26, 2025

    இந்தியாவிலேயே தமிழகம் தனிகாட்டு ராஜா: சொல்கிறார் முதல்வர் ஸ்டாலின்

    December 26, 2025

    தேர்தல் அறிக்கை தயாரிக்க A.I. தொழில்நுட்பம்! திமுக புது வியூகம்

    December 26, 2025
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2025 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.