Close Menu
    What's Hot

    தகிக்கும் வெப்பம்… தப்பிக்கும் பருவமழை… ஆய்வாளர்கள் சொல்வது என்ன?

    TNPSC: குரூப்-1 தேர்வுக்கான விண்ணப்ப தேதி அறிவிப்பு! வயது வரம்பு விவரம்

    ”அந்த பட்டியலை வெளியிடட்டுமா?” – அமைச்சர் நிர்மல் குமாருக்கு நயினார் கேள்வி

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»இ.பி.எஸ் எடுக்கும் சீக்ரெட் சர்வே..! அடுத்தகட்ட காய்களை நகர்த்த திட்டம்..!!
    Featured

    இ.பி.எஸ் எடுக்கும் சீக்ரெட் சர்வே..! அடுத்தகட்ட காய்களை நகர்த்த திட்டம்..!!

    Editor TN TalksBy Editor TN TalksNovember 11, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    edapadi 1616742788 1617090708 1656394162 1674450511
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    ‘மக்களைக் காப்போம்; தமிழகம் மீட்போம்” எனும் பெயரில் இதுவரை சுற்றுப்பயணம் மேற்கொண்ட தொகுதிகளில் ஒரு விரிவான சர்வே எடுக்கச்சொல்லியிருக்கிறாராம் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி. எடப்பாடியாரின் திடீர் உத்தரவின் பின்னணியை இங்கு பார்க்கலாம்.

    அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தமிழ்நாடு முழுமைக்குமான தேர்தல் பிரச்சாரத்தை ‘மக்களைக் காப்போம்; தமிழகம் மீட்போம்’ எனும் பெயரில் துவக்கி தற்போது வரை 173 தொகுதிகளில் முடித்துள்ளார். இந்த தொகுதிகளில் மக்கள் சந்திப்பு, விவசாயிகள் சந்திப்பு, நெசவாளர்கள் உடனான சந்திப்பு, மீனவர்களுடன் சந்திப்பு என பல்வேறு வகையான கலந்துரையாடல்களை மேற்கொண்டு அவர்களது குறைகளை கேட்டறிந்தார். இத்தகைய சந்திப்புகளும், மழையில் நெல்மணிகளை பறிகொடுத்த விவசாயிகளை களத்தில் இறங்கி சந்தித்து ஆறுதல் அளித்தது உள்ளிட்ட செயல்பாடுகளால் அவர்களது ஆதரவை பெற்று வருகிறார். மேலும், இதுவரை மேற்கொண்ட பிரச்சாரத்தில் வாக்குறுதிகளாக அவர் அறிவித்துள்ள பெண்களுக்கு மாதம் ரூ.1,500, பொங்கலுக்கு மீண்டும் ரூ.2,500, தீபாவளிக்கு பெண்களுக்கு பட்டுச்சேலை உள்ளிட்ட சில வாக்குறுதிகள் மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.

    இருப்பினும் அவற்றின் அளவீடு என்ன? என்பதை அறிய நினைத்துள்ள எடப்பாடி பழனிசாமி, அதிமுகவின் நிர்வாகிகள் மற்றும் வியூகம் அமைக்கும் நிறுவனத்தின் உதவியோடு பிரச்ச்சாரம் செய்துள்ள 173 தொகுதிகளிலும் ஒரு சர்வே எடுப்பதற்கான அசைன்மென்ட்டை கொடுத்திருக்கிறார். இந்த சர்வேயில் திமுக மீதான அதிருப்தி எப்படி இருக்கிறது? அதிமுகவுக்கான செல்வாக்கு எப்படி உள்ளது? பாஜகவுடனான கூட்டணியை மக்கள் எப்படி பார்க்கிறார்கள்? சிறுபான்மையினர் ஓட்டு யாருக்கு? தவெக உடனான கூட்டணியை விரும்புகிறார்களா? வேறு யாருடன் கூட்டணி வைக்க மக்கள் விரும்புகிறார்கள்? இதுவரை அறிவித்துள்ள வாக்குறுதிகளை மக்கள் எப்படி பார்க்கிறார்கள்? செங்கோட்டையன் போன்றோர் கொடுக்கும் குடைச்சல்கள் களத்தில் பிரதிபலிக்கிறதா? உள்ளிட்ட பல்வேறு கேள்விகளை மக்களிடம் கேட்க முடிவு செய்யப்பட்டுள்ளது. ஒரு தொகுதிக்கு 10,000 பேரிடம் அவர்களது கருத்துக்களை கேட்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

    இந்த சர்வே முடிவின் அடிப்படையில் அடுத்தகட்டமாக காய்களை நகர்த்தலாம் என முடிவு செய்துள்ளாராம் எடப்பாடி பழனிசாமி. இப்போதைக்கு சென்னையில் இந்த சர்வே பணிகள் தொடங்கப்படுவதாக தகவல். தற்போதைக்கு பள்ளியில் பருவத்தேர்வு முடிவுகளை எதிர்நோக்கி காத்திருப்பவராக இருக்கிறார் அதிமுக பொதுச் செயலாளர் என்கின்றனர் எம்.ஜி.ஆர் மாளிகை வட்டாரத்தினர்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Article“ஆபரேஷன் திமுக” – பாஜக ‘தலை‘களுக்கு இ.பி.எஸ் கொடுக்கும் நெருக்கடி!
    Next Article விஜய்யுடன் கூட்டணி? ராகுல் களமிறக்கும் புது TEAM! திமுகவின் PLAN ‘B’..!
    Editor TN Talks

    Related Posts

    தகிக்கும் வெப்பம்… தப்பிக்கும் பருவமழை… ஆய்வாளர்கள் சொல்வது என்ன?

    June 23, 2026

    TNPSC: குரூப்-1 தேர்வுக்கான விண்ணப்ப தேதி அறிவிப்பு! வயது வரம்பு விவரம்

    June 23, 2026

    ”அந்த பட்டியலை வெளியிடட்டுமா?” – அமைச்சர் நிர்மல் குமாருக்கு நயினார் கேள்வி

    June 23, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    தகிக்கும் வெப்பம்… தப்பிக்கும் பருவமழை… ஆய்வாளர்கள் சொல்வது என்ன?

    TNPSC: குரூப்-1 தேர்வுக்கான விண்ணப்ப தேதி அறிவிப்பு! வயது வரம்பு விவரம்

    ”அந்த பட்டியலை வெளியிடட்டுமா?” – அமைச்சர் நிர்மல் குமாருக்கு நயினார் கேள்வி

    “ஓலைப்பாயில் தண்ணீர் ஊற்றியதுபோல உதயநிதி பேசக்கூடாது?”  – தவெக விளாசல்

    அறிமுகமான இதே நாளில் ‘பத்மஸ்ரீ’ விருது!. இரட்டிப்பு மகிழ்ச்சியில் ஹிட்மேன் ரோஹித் சர்மா!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.