Close Menu
    What's Hot

    ”இட ஒதுக்கீட்டை ஒழித்துக்கட்ட பாஜக முயற்சி” – காரணத்தைச் சொல்லும் காங்கிரஸ்

    அப்பா ராமதாசுடன் சந்திப்பு; இனி நல்லது நடக்கும் – மகிழ்ச்சியில் மருத்துவர் அன்புமணி

    “ பார்த்து பார்த்து படிச்சாரே…” – உதயநிதியை கலாய்த்த துணை சபாநாயகர்

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»உலகம்»அதிகாலையிலேயே இந்தியர்களுக்கு பேரதிர்ச்சி! உலகையே சோகத்தில் ஆழ்த்திய விபத்து!
    உலகம்

    அதிகாலையிலேயே இந்தியர்களுக்கு பேரதிர்ச்சி! உலகையே சோகத்தில் ஆழ்த்திய விபத்து!

    Editor TN TalksBy Editor TN TalksNovember 17, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    WhatsApp Image 2025 11 17 at 12.17.04 PM
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    சவுதி அரேபியாவில் இன்று அதிகாலை எதிர்பாரா விதமாக நிகழ்ந்த விபத்தில் 42 இந்தியர்கள் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    சவுதி அரேபியாவின் மிக முக்கிய பகுதியும் இஸ்லாமிய புனித தலமாகவும் கருதப்படும் இடங்கள் மெக்கா மற்றும் மதீனா. இதில் மதீனாவுக்கு அருகே உம்ரா புனித பயணம் சென்றவர்களின் பேருந்து இன்று அதிகாலை டீசல் ஏற்றி வந்த டேங்கர் லாரி மோதி பயங்கர விபத்திற்குள்ளானது. இந்த விபத்து மதீனாவிலிருந்து சுமார் 160 கி.மீ தொலைவில் உள்ள முஹர்ராஸ் அருகே, இந்திய நேரப்படி அதிகாலை 1.30 மணி நிகழ்ந்துள்ளது.

    WhatsApp Image 2025 11 17 at 12.16.52 PM

    இந்த விபத்தில் பேருந்து முற்றிலும் எரிந்து சேதமடைந்தது. அப்பேருந்தில் தூங்கிக் கொண்டிருந்த பயணிகள் பலர் இக்கோர சம்பவத்தில் பலியாகியுள்ளனர். அதில் பயணம் செய்த 42 இந்தியர்களும் பலியாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் உயிரிழந்தவர்களில் 20 பேர் பெண்கள் என்றும், 11 பேர் குழந்தைகள் என்பதும் தெரிய வந்துள்ளது. பேருந்தில் பயணம் செய்தவர்களில் பெரும்பாலானவர்கள் தெலங்கானா மற்றும் ஹைதராபாத்தை சேர்ந்தவர்கள் என்ற தகவல்கள் வெளியாகி உள்ளது. விபத்தில் காயமடைந்தவர்கள் அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    இந்த விபத்து பற்றிய தகவல் கிடைக்கப்பெற்றதில் இருந்து ரியாத்தில் உள்ள இந்திய தூதரகத்துடன் தொடர்ந்து தொடர்பில் இருப்பதாக தெலங்கானா அரசு தெரிவித்துள்ளது. பாதிக்கப்பட்டவர்களை அடையாளம் காணவும் தேவையான உதவிகளைச் செய்வதற்கும் தூதரகத்துடன் நெருக்கமாக பணியாற்றுமாறு தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி டெல்லியில் உள்ள மத்திய அரசு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மேலும், விபத்து குறித்து தகவல் அறிய 24 மணி நேரம் இயங்கும் உதவி எண்ணை இந்திய தூதரகம் வெளியிட்டுள்ளது. அதன்படி ஜெட்டாவில் உள்ள இந்திய தூதரகம் கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொள்ள 8002440003 என்ற எண்ணைத் தொடர்பு கொள்ளுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, தகவல் தேடும் குடும்பங்களுக்காக தெலங்கானா அரசு செயலகத்தில் ஒரு கட்டுப்பாட்டு அறையை அமைத்துள்ளது. இதற்காக 79979 59754, 99129 19545 என்ற தொடர்பு எண்களையும் அறிவித்துள்ளது.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleபெருமழை அச்சம்; முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க ராமதாஸ் வலியுறுத்தல்
    Next Article ஈடன் கார்டனில் இந்தியா கற்றுக் கொண்டது என்ன?
    Editor TN Talks

    Related Posts

    ”இட ஒதுக்கீட்டை ஒழித்துக்கட்ட பாஜக முயற்சி” – காரணத்தைச் சொல்லும் காங்கிரஸ்

    June 24, 2026

    அப்பா ராமதாசுடன் சந்திப்பு; இனி நல்லது நடக்கும் – மகிழ்ச்சியில் மருத்துவர் அன்புமணி

    June 24, 2026

    “ பார்த்து பார்த்து படிச்சாரே…” – உதயநிதியை கலாய்த்த துணை சபாநாயகர்

    June 24, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    ”இட ஒதுக்கீட்டை ஒழித்துக்கட்ட பாஜக முயற்சி” – காரணத்தைச் சொல்லும் காங்கிரஸ்

    அப்பா ராமதாசுடன் சந்திப்பு; இனி நல்லது நடக்கும் – மகிழ்ச்சியில் மருத்துவர் அன்புமணி

    “ பார்த்து பார்த்து படிச்சாரே…” – உதயநிதியை கலாய்த்த துணை சபாநாயகர்

    ”இனி இஷ்டத்துக்கு FOOD REVIEW  பண்ண முடியாது!” –  யூடியூபர்களுக்கு அரசு எச்சரிக்கை

    சட்டப்பேரவையில் முதலமைச்சர் நடிக்க வேண்டிய அவசியம் எப்போதும் இல்லை – அமைச்சர் செங்கோட்டையன்

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.