Close Menu
    What's Hot

    ரன்வேயில் தீப்பிடித்த விமானம்!. 200 பயணிகளின் திக் திக் நிமிடங்கள்!. டெல்லி ஏர்போர்ட்டில் பரபரப்பு!

     ”ஒன்றும் தெரியாது”!. விஜய்யின் அரசியல் குறித்து மம்மூட்டி ரியாக்‌ஷன்!

    இமாலய இலக்கை சேஸ் செய்தது எப்படி?. வெற்றி ரகசியத்தை பகிர்ந்த ஸ்ரேயஸ் ஐயர்!.

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»தமிழ்நாடு»SIR பணியால் பல லட்சம் வாக்குகள் நீக்கப்படலாம் – பகீர் கிளப்பும் திமுக எம்.பி
    தமிழ்நாடு

    SIR பணியால் பல லட்சம் வாக்குகள் நீக்கப்படலாம் – பகீர் கிளப்பும் திமுக எம்.பி

    Editor TN TalksBy Editor TN TalksNovember 18, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    dmk mp
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிரத் திருத்தப் பணிகளால் (SIR) பல லட்சக்கணக்கான வாக்குகள் நீக்கப்படலாம் என்ற அச்சம் உள்ளது. ஆனால், தகுதியுள்ள நபர்களின் வாக்குகள் நீக்கப்படக்கூடாது என திமுக சட்டத்துறை செயலாளர் என்.ஆர்.இளங்கோ தெரிவித்துள்ளார்.

    சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில், திமுக சட்டத்துறை செயலாளரும், மாநிலங்களை உறுப்பினருமான என்.ஆர்.இளங்கோ இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது தேர்தல் ஆணையம் முறையான தயாரிப்பு வேலைகளுடன் SIR-ஐ அணுகியுள்ளார்களா? என செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு, “ஒருநாள் நடைபெறும் தேர்தலுக்கு பல்வேறு விதிகளை கடைபிடிக்கும் தேர்தல் ஆணையம், ஒரு மாதம் நடத்தும் SIR பணிகளை எந்த காலத்தில் நடத்த வேண்டும் என்பதை கருத்தில் கொள்ள வேண்டும்.

    முழுக்க முழுக்க BLO-க்களை (வாக்குச்சாவடி நிலை அதிகாரிகள்) நம்பி மேற்கொள்ளப்படும் இந்தப் பணியில், அவர்களுக்கு ஒருநாள் மட்டுமே பயிற்சி வழங்கப்பட்டுள்ளது. மக்களின் எதிர்ப்பு மற்றும் தேர்தல் ஆணையத்தின் அழுத்ததால் BLO-க்கள் சிரமப்படுகின்றனர்,” என பதில் அளித்தார்.

    BLO-க்கள் அனைவரும் அரசு அலுவலர்கள் என பாஜக கூறுவது குறித்த கேள்விக்கு, “சட்டம் பற்றி தெரிந்துகொள்ள பாஜக விரும்புவதில்லை. தேர்தல் பணிக்காக அலுவலர்கள் எடுக்கப்பட்டால், அரசு அலுவலர்கள் தேர்தல் ஆணைய அலுவலர்களாக கருதப்படுவார்கள். இதற்கு திமுக என்ன செய்ய முடியும்?,” என கேள்வி எழுப்பினார்.

    தொடர்ந்து, SIR பணிகள் நிறைவடைய இன்னும் 15 நாட்களே உள்ள நிலையில் இதுவரை பல்வேறு பகுதிகளில் படிவங்களே செல்லவில்லை என கூறப்படுகிறதே என்ற கேள்விக்கு, “இதனால் பல லட்சக்கணக்கான வாக்குகள் நீக்கப்படலாம் என்ற அச்சம் உள்ளது. தகுதியுள்ள நபர்களின் வாக்குகள் நீக்கக்கூடாது. இதனால்தான் மக்களுக்கு தேவையான அனைத்து உதவிகளை செய்து வருகிறோம். இந்த விவகாரத்தில் நீதிமன்றம் நல்ல தீர்ப்பை வழங்கும் என்று எதிர்பார்க்கிறோம். தனிமனிதன் வாக்குகள் நீக்கப்பட்டால் நிச்சயம் உச்ச நீதிமன்றம் செல்வோம்,” என்றார்.

    மேலும், காங்கிரஸ் ஆட்சியில் SIR பணிக்கு எதிர்ப்பு தெரிவிக்காத திமுக இப்போது மட்டும் ஏன் எதிர்கிறது? என மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியது குறித்த கேள்விக்கு, “கடந்த 2004 ஆம் ஆண்டு முன்னாள் முதலமைச்சர் கலைஞர் வாக்காளர் பட்டியல் சரி செய்ய வேண்டும் என கூறியிருந்தார். தொடர்ந்து, அனைத்து தேர்தலிலும் வாக்காளர் பட்டியல் முறைப்படுத்த வேண்டும் என 100-க்கும் மேலான கடிதம் தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பப்பட்டது. தகுதியற்ற நபர்கள், இறந்தவர்கள், இடம் பெயர்ந்தவர்கள் பெயர் நீக்கப்பட வேண்டும் என்பதில் மாற்று கருத்து இல்லை. ஆனால், தகுதியுள்ள ஒருவரின் பெயர் நீக்கக்கூடாது” என்று இளங்கோ கூறினார்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleபிளாக் பேந்தர் 3 குறித்த ரகசியத்தை உடைத்த ரியான் கூகுலர்
    Next Article பொதுக்கூட்டங்கள் பரப்புரைகள் தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகள் உகந்ததல்ல – சிபிஐஎம் சண்முகம் குற்றச்சாட்டு
    Editor TN Talks

    Related Posts

     ”ஒன்றும் தெரியாது”!. விஜய்யின் அரசியல் குறித்து மம்மூட்டி ரியாக்‌ஷன்!

    April 26, 2026

    வார்னிங்!. 29ம் தேதி வரை இயல்பை விட 3 டிகிரி வெப்பநிலை அதிகரிக்கும்!.

    April 26, 2026

    தமிழ்நாட்டில் மறுவாக்குப்பதிவா? தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு!

    April 26, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    ரன்வேயில் தீப்பிடித்த விமானம்!. 200 பயணிகளின் திக் திக் நிமிடங்கள்!. டெல்லி ஏர்போர்ட்டில் பரபரப்பு!

     ”ஒன்றும் தெரியாது”!. விஜய்யின் அரசியல் குறித்து மம்மூட்டி ரியாக்‌ஷன்!

    இமாலய இலக்கை சேஸ் செய்தது எப்படி?. வெற்றி ரகசியத்தை பகிர்ந்த ஸ்ரேயஸ் ஐயர்!.

    டாக்டரிடம் போகவேண்டாம்!. பாத்ரூமிலேயே பாடி செக்கப்!. சீனாவின் மிரட்டல் டெக்னாலஜி!

    புதுச்சேரி அரசியலில் அதிரடி!. பாஜகவை கழற்றிவிட ரங்கசாமி திட்டம்? தவெக-வுடன் ரகசிய கூட்டணி!

    Trending Posts

    திடீர் திருப்பம்!. நீட் தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு நாளைக்கு ஒத்திவைப்பு!

    April 26, 2026

    ஜனநாயகத்தில் வன்முறைக்கு இடமில்லை!. வாஷிங்டன் துப்பாக்கிச்சூட்டிற்கு பிரதமர் மோடி கண்டனம்!

    April 26, 2026

    ரன்வேயில் தீப்பிடித்த விமானம்!. 200 பயணிகளின் திக் திக் நிமிடங்கள்!. டெல்லி ஏர்போர்ட்டில் பரபரப்பு!

    April 26, 2026

     ”ஒன்றும் தெரியாது”!. விஜய்யின் அரசியல் குறித்து மம்மூட்டி ரியாக்‌ஷன்!

    April 26, 2026

    இமாலய இலக்கை சேஸ் செய்தது எப்படி?. வெற்றி ரகசியத்தை பகிர்ந்த ஸ்ரேயஸ் ஐயர்!.

    April 26, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.