Close Menu
    What's Hot

    ஆஷஸ் 4-வது டெஸ்ட்!. இங்கி. மிரட்டல் பவுலிங்!. 152 ரன்களில் சுருண்டது ஆஸ்திரேலியா!.

    சிங்கள சதியை முறியடிக்க வேண்டும்! பிரதமர் மோடிக்கு ராமதாஸ் கடிதம்

    கனடாவில் மற்றொரு இந்திய மாணவர் சுட்டுக் கொலை!. ஒரே வாரத்தில் 2 பேர் பலியான அதிர்ச்சி!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»தேர்தல் 2026»2026 தேர்தல்: செந்தில் பாலாஜிக்கு ஸ்டாலின் போட்ட கடுமையான உத்தரவு
    தேர்தல் 2026

    2026 தேர்தல்: செந்தில் பாலாஜிக்கு ஸ்டாலின் போட்ட கடுமையான உத்தரவு

    Editor TN TalksBy Editor TN TalksNovember 18, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    senthilbalaji8 1658830262
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    எதிர்வரும் 2026 சட்டமன்ற தேர்தலில் கோயம்புத்தூர் மாவட்டத்தில் பெரும்பான்மையான தொகுதிகளில் வெற்றி பெற்றே ஆக வேண்டும் என திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு அக்கட்சியின் தலைவர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

    அண்ணா அறிவாலயத்தில், ’உடன்பிறப்பே வா’ என்ற தலைப்பில் சட்டமன்றத் தொகுதி வாரியாக பகுதி, நகர, ஒன்றிய, பேரூர் கழகச் செயலாளர்கள் ஒவ்வொருவரையும் திமுக தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் தனித்தனியாக சந்திக்கும் நிகழ்வு கடந்த ஜூன் மாதம் 13ஆம் தேதி அன்று தொடங்கி நடைபெற்று வருகிறது.

    இந்த சந்திப்பின்போது சட்டமன்றத் தொகுதிகளில் திமுக ஆட்சி குறித்த பொதுமக்களின் மனநிலை, இளைஞர்கள் முதல் முதியவர்கள் வரை உள்ள எதிர்பார்ப்புகள் உள்ளிட்டவை குறித்து கேட்டறிந்து வருகிறார்.

    மேலும் மாணவர்கள், பெண்கள், தொழிலாளர்கள் என அனைத்து தரப்பினருக்கும் அரசு செயல்படுத்தி வரும் சிறப்பான திட்டங்களையும், சாதனைகளையும் அவர்களிடம் எடுத்துச் சொல்லி அரசின் செயல்பாடுகளை விளக்க வேண்டும் எனவும் நிர்வாகிகளை ஸ்டாலின் அறிவுறுத்தி வருகிறார். இச்சந்திப்பின் போது, முன்வைக்கப்படும் கோரிக்கைகள் உடனடியாக அமைச்சர்களிடம் பேசித் தீர்வு காணப்படுவதோடு, மண்டல பொறுப்பாளர்கள் அனைத்து பிரச்சனைகளையும் கண்காணித்து அறிக்கை தர வேண்டும் என்றும் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

    இந்த நிலையில், சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற இன்றைய ’உடன்பிறப்பே வா’ நிகழ்வில் சூலூர், கிணத்துக்கடவு, மற்றும் வால்பாறை சட்டமன்ற தொகுதிகளை சேர்ந்த கட்சி நிர்வாகிகளை ஸ்டாலின் சந்தித்து பேசினார். அப்போது அவர், கோயம்புத்தூர் மாவட்டத்தில் பெரும்பான்மையான தொகுதிகளில் திமுக வெற்றி பெற வேண்டும் என்று, நிர்வாகிகள் முன்னிலையில் மண்டல பொறுப்பாளர் செந்தில் பாலாஜிக்கு உத்தரவிட்டார்.

    கடந்த சட்டமன்ற தேர்தலின்போது கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள 10 சட்டமன்ற தொகுதிகளிலும் அதிமுகவே வென்றது. அதன் காரணமாக இம்முறை திமுக நிச்சயம் வெற்றி பெற வேண்டும் என முதலமைச்சர் ஸ்டாலின் கண்டிப்பாக தெரிவித்துள்ளார். மேலும் அரசின் சாதனைகளை தொகுதி முழுக்கவும் விளம்பரப்படுத்த வேண்டும் என்றும், கலைஞர் உரிமைத்தொகை பெறாதவர்களில் தகுதியானவர்கள் இருப்பின் அவர்கள் உரிமைத்தொகை பெறும் வகையில் கட்சியினர் உதவிட வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளார்.

    அதேபோல் SIR பணிகளில் உள்ள குழப்பங்களால் லட்சக்கணக்கான வாக்காளர்கள் நீக்கப்படும் அபாயம் உள்ளதாகவும், வாக்காளர்களின் விவரங்களை சேகரிக்கும் பணிகளுக்கு திமுகவினர் மிகுந்த முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்றும் திமுக தவைவர் ஸ்டாலின் அறிவுறுத்தி உள்ளார்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleவருவாய்த் துறையினர் போராட்டத்தை திமுக அரசு தூண்டுகிறது: நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு
    Next Article ஹனுமான் பற்றி தவறாக பேசியதால் எஸ் எஸ் ராஜமௌலி மீது போலீஸ் வழக்கு
    Editor TN Talks

    Related Posts

    10 வேட்பாளர்கள் கூட தவெகவில் கிடையாது! நயினார் நாகேந்திரன் கிண்டல்

    December 25, 2025

    அதிமுக தேர்தல் அறிக்கையை தயாரிக்க 10 பேர் குழு! விரைவில் தமிழகம் முழுவதும் பயணம்

    December 25, 2025

    தவெக கூட்டணியில் டிடிவி, ஓபிஎஸ்? செங்கோட்டையன் சொன்ன பதில்

    December 25, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    ஆஷஸ் 4-வது டெஸ்ட்!. இங்கி. மிரட்டல் பவுலிங்!. 152 ரன்களில் சுருண்டது ஆஸ்திரேலியா!.

    சிங்கள சதியை முறியடிக்க வேண்டும்! பிரதமர் மோடிக்கு ராமதாஸ் கடிதம்

    கனடாவில் மற்றொரு இந்திய மாணவர் சுட்டுக் கொலை!. ஒரே வாரத்தில் 2 பேர் பலியான அதிர்ச்சி!

    நைஜீரியாவில் ஐ.எஸ். பயங்கரவாதிகளை குறிவைத்து தாக்குதல்; அதிபர் டிரம்ப் தகவல்

    ‘மேக் இன் இந்தியா வெற்றியை ஒப்புக்கொண்ட ராகுலுக்கு நன்றி’: அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ்

    Trending Posts

    பாமக-வில் இருந்து ஜி.கே.மணி நீக்கம்!. கட்சி தலைமை அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

    December 26, 2025

    ரயில் கட்டணம் உயர்வு இன்று முதல் அமல்.. புதிய கட்டணம் எவ்வளவு?

    December 26, 2025

    12 ராசிகளுக்கான வார பலன்கள் @ டிச.26 – 31

    December 26, 2025

    ஒரு பவுன் தங்கம் : இன்றைய நிலவரம் என்ன?

    December 25, 2025

    இந்தியா உள்ளிட்ட ஆசிய நாடுகள் மீது 50% வரி விதித்த மெக்சிகோ!. டிரம்பை திருப்திப்படுத்தும் முயற்சி?.

    December 11, 2025
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2025 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.