Close Menu
    What's Hot

    தொகுதி மறுவரையரை என்றால் என்ன?. சர்ச்சையும் தென்மாநிலங்களின் அச்சமும்!. 

    நடுவானில் 300 அடி சரிந்த விமானம்!. போதைப்பொருள் சோதனையில் சிக்கிய பைலட்?. ஏர் இந்தியா கொடுத்த விளக்கம்!

    U20 சர்வதேச தடகளப் போட்டி!. இந்தியவுக்கு பெருமை சேர்த்த பசந்த் குமார் மேக்வால்!. வெள்ளி வென்று அசத்தல்!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»தமிழ்நாடு»‘நமது இசையை ஆய்வு செய்து காப்புரிமையை பெற வேண்டும்’ – ஆளுநர் ரவி
    தமிழ்நாடு

    ‘நமது இசையை ஆய்வு செய்து காப்புரிமையை பெற வேண்டும்’ – ஆளுநர் ரவி

    Editor TN TalksBy Editor TN TalksNovember 21, 2025Updated:November 21, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    gov
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    நமது இசையை ஆய்வு செய்து, அதன் அடிப்படையில் காப்புரிமையை பெற வேண்டும். அதன் மூலம் பாரம்பரியம் பாதுகாக்கப்படும் என்று ஆளுநர் ரவி கூறினார்.

    சென்னை பாரதிய வித்யா பவன் சார்பில் மார்கழி மகா உற்சவம் நடைபெறுகிறது. அதன் துவக்க விழா சென்னை மயிலாப்பூரில் உள்ள பாரதிய வித்யா பவனில் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி கலந்துகொண்டு பேசுகையில், ” தமிழ்நாட்டில் பாரதிய வித்யா பவன் கலாச்சார மையமாக திகழ்கிறது. அதைப் போல, கலைக்களுக்கான மாதமாக மார்கழியை கடைப்பிடிக்கிறோம். உலகில் பல்வேறு நாடுகளில் இருந்து இந்த கலைகளை காண்பதற்கும், கற்பதற்கும் சென்னைக்கு பலரும் வருகின்றனர். ஒவ்வொருவருக்கும் உள்ள தனித் திறமைகளை வளர்ப்பதில் மார்கழி மாதம் முக்கிய பங்கு வகிக்கிறது. சுதந்திரத்திற்கு முன்பு பிரிட்டிஷ்காரர்கள் தலையீட்டால் கலை மற்றும் கலாச்சாரம் மறைக்கப்பட்டன. அவற்றை நாம் மீட்டு காக்க வேண்டும்.

    அனைத்து மொழிகளையும் இணைப்பதற்கு இசை முக்கியமாக உள்ளது. மேற்கத்திய கலாச்சாரத்தை தவிர்த்து, நம்முடைய பாரம்பரிய கலாச்சாரத்தை பின்பற்ற வேண்டும். ஏனென்றால் நம்முடைய கலாச்சாரம், பண்பாடு 5 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தையது. பாரதிய வித்யா பவன், இசை நிகழ்ச்சிகள் மட்டுமல்லாமல், அவர்கள் நடத்தும் கல்வி நிறுவனங்களிலும் கலாச்சாரத்தையும், கல்வியையும் சிறப்பாக கற்பிக்கின்றனர்.

    ஐஐடி மெட்ராஸ் கலாச்சார பண்பாடுகளுக்கான சிறந்த மையமாக விளங்குகிறது. கலாச்சார முன்னேற்றத்திற்கு சென்னை ஐஐடியின் முன்னெடுப்பு பாராட்டத்தக்கது. சென்னை ஐஐடியில் படிக்கும் மாணவர்கள் கலாச்சார நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்ள வேண்டும். மேலும் நமது இசையை ஆய்வு செய்து, அதன் அடிப்படையில் காப்புரிமையை பெற வேண்டும். அதன் மூலம் பாரம்பரியம் பாதுகாக்கப்படும்.
    ஐரோப்பிய நாட்டவர்களை காட்டிலும் இந்தியர்களின் சிந்தனை புனிதம் வாய்ந்ததாக உள்ளது.

    இசை மற்றும் கலாச்சாரம் சார்ந்த பல ஆய்வுகளை இன்னும் நாம் மேற்கொள்ள வேண்டும். பாரதம் நமக்கானது மட்டுமல்ல, உலகத்திற்கானது. அதை நாம் போற்ற வேண்டும்.” என பேசினார்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleசென்னைக்கு வரப் போகிறதா ஏர் டாக்சி? வெளியானது புதிய தகவல்!
    Next Article தூய்மைப் பணியாளர்களுக்கு குப்பை வண்டியில் உணவு அனுப்பி வைப்பதா? – நயினார் நாகேந்திரன் கண்டனம்
    Editor TN Talks

    Related Posts

    தொகுதி மறுவரையரை என்றால் என்ன?. சர்ச்சையும் தென்மாநிலங்களின் அச்சமும்!. 

    August 9, 2026

    நடுவானில் 300 அடி சரிந்த விமானம்!. போதைப்பொருள் சோதனையில் சிக்கிய பைலட்?. ஏர் இந்தியா கொடுத்த விளக்கம்!

    August 9, 2026

    U20 சர்வதேச தடகளப் போட்டி!. இந்தியவுக்கு பெருமை சேர்த்த பசந்த் குமார் மேக்வால்!. வெள்ளி வென்று அசத்தல்!

    August 9, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    தொகுதி மறுவரையரை என்றால் என்ன?. சர்ச்சையும் தென்மாநிலங்களின் அச்சமும்!. 

    நடுவானில் 300 அடி சரிந்த விமானம்!. போதைப்பொருள் சோதனையில் சிக்கிய பைலட்?. ஏர் இந்தியா கொடுத்த விளக்கம்!

    U20 சர்வதேச தடகளப் போட்டி!. இந்தியவுக்கு பெருமை சேர்த்த பசந்த் குமார் மேக்வால்!. வெள்ளி வென்று அசத்தல்!

    தவெக அரசை கண்டித்து ஆகஸ்ட் 14-ம் தேதி அதிமுக ஆர்ப்பாட்டம்!. இபிஎஸ் அறிவிப்பு!

    மகாராஷ்டிராவில் அடுத்தடுத்து நிலநடுக்கம்!. வீடுகளில் விரிசல் ஏற்பட்டதால் வீதிகளில் தஞ்சமடைந்த மக்கள்!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.