Close Menu
    What's Hot

    பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டம்!. டெண்டர் அறிவிப்பை வெளியிட்டது நகராட்சி நிர்வாகத் துறை!

    நீட் விவகாரம் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க மத்திய அரசு தயார்!. ஜே.பி.நட்டா அதிரடி!

    ஐசிசி கிரிக்கெட் தரவரிசை!. கோலி ரெக்கார்டை நெருங்கும் ரோகித்; 5 ஆண்டுகளுக்குப் பின் டாப் 10-ல் ஜோ ரூட்!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»தமிழ்நாடு»மிரட்டும் கனமழை… நெல்லை, தென்காசி உள்ளிட்ட மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!
    தமிழ்நாடு

    மிரட்டும் கனமழை… நெல்லை, தென்காசி உள்ளிட்ட மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!

    Editor TN TalksBy Editor TN TalksNovember 23, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    Holiday for schools
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    தொடர் கனமழை காரணமாக நெல்லை, தென்காசி உள்ளிட்ட மாவட்டங்களுக்கு  பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

    வடகிழக்கு பருவமழையின் ஒரு பகுதியாக, வங்கக் கடலில் புதிதாக உருவாகியுள்ள காற்றழுத்து தாழ்வு நிலை புயலாக மாறக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்நிலையில் நெல்லை, தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களுக்கு அதிக கனமழை எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக நெல்லை மாவட்டத்துக்கு ஆரஞ்ச் அலெர்ட்டும் விடப்பட்டது.

    இதற்கிடையே, நெல்லையில் தொடர்ந்து இரண்டு நாட்களாக கனமழை கொட்டி வரும் நிலையில், மாவட்டத்தில் உள்ள பிரதான அணைகள் வேகமாக நிரம்பி வருகின்றன. இந்நிலையில் நெல்லை, தென்காசி, கன்னியாகுமரி, மதுரை ஆகிய மாவட்டங்களில் அடுத்த இரண்டு தினங்களுக்கு நீர்வரத்து அதிகரிப்பால் வெள்ளம் ஏற்பட வாய்ப்பிருப்பதாக மத்திய நீர்வள ஆணையம் எச்சரித்துள்ளது.

    எனவே வெள்ள பாதிப்புகளை எதிர்கொள்ள தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக, மீட்பு பணிகளை மேற்கொள்ளும் வகையில் தூத்துக்குடியில் அமைக்கப்பட்டுள்ள தமிழ்நாடு பேரிடர் மீட்பு படை மையத்தில் இருந்து உதவி ஆய்வாளர் லாரன்ஸ் தலைமையில் 25 பேர் கொண்ட மீட்பு படையினர் அதிநவீன உபகரங்களுடன் இன்று இரவு நெல்லை வந்தடைந்தனர்.

    மேலும் நெல்லை ராதாபுரத்தில் அமைந்துள்ள தேசிய பேரிடர் மீட்பு படை மையத்தில், ஒரு கம்பெனியை சேர்ந்த 28 தேசிய மீட்பு படை வீரர்களும் தயார் நிலையில் வைத்திருக்க மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தி உள்ளது.

    கனமழை பாதிப்புகள் குறித்து பொதுமக்கள் உடனடியாக தகவல் தெரிவிக்கும் பொருட்டு பேரிடர்கால அவசர கட்டுப்பாட்டு மையம் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் 24 மணி நேரமும் செயல்படும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.

    இந்த நிலையில், நெல்லை மாவட்டத்தில் கனமழை பெய்து வரும் காரணமாக, பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு நாளை (நவ.24) ஒரு நாள் மட்டும் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சித் தலைவர் சுகுமார் உத்தரவிட்டுள்ளார். அதே போல, தூத்துக்குடி மாவட்டத்திற்கு நாளை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து, தென்காசி மாவட்டத்திற்கும் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleசெனுரன் முத்​து​சாமி சதம்: குவாஹாட்டி டெஸ்ட்டில் தென் ஆப்பிரிக்கா ஆதிக்கம்!
    Next Article பீகாரை போல தமிழகத்திலும் காங்கிரஸ் கூட்டணிக்கு தோல்வி காத்திருக்கிறது – அண்ணாமலை
    Editor TN Talks

    Related Posts

    பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டம்!. டெண்டர் அறிவிப்பை வெளியிட்டது நகராட்சி நிர்வாகத் துறை!

    July 23, 2026

    ‘ஜனநாயகன்’ திரைப்படத்தைப் பார்த்தார் முதலமைச்சர் விஜய்!

    July 23, 2026

    திரையரங்குகளில் இன்று களமிறங்கியது ‘ஜனநாயகன்’: ரசிகர்கள் கொண்டாட்டம்!

    July 23, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டம்!. டெண்டர் அறிவிப்பை வெளியிட்டது நகராட்சி நிர்வாகத் துறை!

    நீட் விவகாரம் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க மத்திய அரசு தயார்!. ஜே.பி.நட்டா அதிரடி!

    ஐசிசி கிரிக்கெட் தரவரிசை!. கோலி ரெக்கார்டை நெருங்கும் ரோகித்; 5 ஆண்டுகளுக்குப் பின் டாப் 10-ல் ஜோ ரூட்!

    டி20 கிரிக்கெட்: இந்தியா – ஜிம்பாப்வே அணிகள் இன்று மோதல்!

    23-வது காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் இன்று கோலாகலமாக தொடக்கம்!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.