Close Menu
    What's Hot

    முதல்வர் விஜய் – சங்கீதா விவாகரத்து வழக்கு..! நாளை விசாரணை..!

    “எல்லாரும் நல்லா இருப்போம்” என்பது இதுதானா? தவெகவினரின் குற்றச்சம்பவங்களை சுட்டிக்காட்டி இபிஎஸ் கேள்வி!

    மீன்பிடி தடைக்காலம் நிறைவு..! மீன்பிடிக்க புறப்பட்ட மீனவர்கள்..!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»இந்தியா»மக்களை பாதுகாக்க  புதிய இந்தியா தயங்காது!- பிரதமர் மோடி
    இந்தியா

    மக்களை பாதுகாக்க  புதிய இந்தியா தயங்காது!- பிரதமர் மோடி

    Editor TN TalksBy Editor TN TalksNovember 28, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    Modi 1
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    அராஜகம் செய்பவர்களை அழிக்க வேண்டியதன் அவசியத்தை கீதை நமக்கு கற்பிப்பதாகவும், மக்களை பாதுகாக்க புதிய இந்தியா தயங்காது என்றும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

    கர்நாடகா மாநிலம் உடுப்பி நகரில் உள்ள பிரசித்தி பெற்ற கிருஷ்ணர் கோயிலில் பிரதமர் மோடி இன்று (நவ. 28) வழிபாடு நடத்தினார். இதற்காக டெல்லியில் இருந்து விமானம் மூலம் கர்நாடகா வந்த பிரதமர் மோடி, உடுப்பி நகரில் சாலை வலம் சென்று மக்களை சந்தித்தார். அப்போது சாலையின் இருபுறமும் திரண்டிருந்த மக்கள் பிரதமர் மோடிக்கு மலர்களை தூவி உற்சாக வரவேற்பு அளித்தனர்.

    பின்னர், உடுப்பி நகரில் உள்ள கிருஷ்ணர் கோயிலுக்கு சென்ற பிரதமர் மோடிக்கு கோயில் நிர்வாகம் சார்பில் பூர்ண கும்ப மரியாதை வழங்கப்பட்டது. தொடர்ந்து மடத்தில் நடந்த லட்சகாண்ட கீதை பாராயண நிகழ்ச்சியில் பிரதமர் கலந்து கொண்டார். பின்னர், கோயில் வளாகத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள சுவர்ண தீர்த்த மண்டபத்தை திறந்து வைத்த பிரதமர் மோடி, ஸ்ரீபுட்டிகே மடத்தின் தலைவர் ஸ்ரீசுகுணேந்திரதீர்த்த சுவாமியை சந்தித்து ஆசி பெற்றார்.

    பின்னர் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, சில நாட்களுக்கு முன்பு கீதை பிறந்த குருசேத்திரத்தின் புனித பூமியில் இருந்ததாகவும், தற்போது பகவான் ஸ்ரீகிருஷ்ணர் மற்றும் ஜகத்குரு ஸ்ரீமத்வாச்சாரியார் ஆகியோரின் ஆசிர்வதிக்கப்பட்ட பூமியில் இருப்பது மிகுந்த திருப்தியை தருவதாகவும் தெரிவித்தார்.  அராஜகம் செய்பவர்களை அழிக்க வேண்டியதன் அவசியத்தை கீதை நமக்கு கற்பிப்பதாக பிரதமர் மோடி குறிப்பிட்டார்.

    ஏழைகளுக்கு உதவ வேண்டும் என்ற கீதையின் செய்தியே பல்வேறு திட்டங்களுக்கு அடிப்படையாகும் என்றார். பயங்கரவாத தாக்குதலின் போது முந்தைய அரசுகள் செயல்படாமல்  இருந்ததாக குற்றம்சாட்டிய பிரதமர் மோடி, புதிய இந்தியா தனது மக்களைப் பாதுகாக்க தயங்காது என்றும் யாருக்கும் தலைவணங்காது என்றும் தெரிவித்தார்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleடிச.4-ல் இந்தியா வருகிறார் ரஷ்ய அதிபர் புதின்
    Next Article கோவா: பிரம்மாண்ட வெண்கல ராமர் சிலையை திறந்து வைத்தார் பிரதமர் மோடி!
    Editor TN Talks

    Related Posts

    காதல் திருமணம் செய்த மகள்..! அரக்கனாக மாறிய தந்தை..! உ.பி-யில் நடந்த அதிர்ச்சி சம்பவம்..!

    June 14, 2026

    பிரான்ஸ் மண்ணில் இந்தியாவின் ஸ்டார்ட்அப் திருவிழா: நெகிழ்ந்த அதிபர் இமானுவேல் மேக்ரான்!

    June 14, 2026

    பெங்களூரு: கையில் துடைப்பதுடன்.. துய்மைப் பணியில் இறங்கிய மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன்..!!

    June 14, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    முதல்வர் விஜய் – சங்கீதா விவாகரத்து வழக்கு..! நாளை விசாரணை..!

    “எல்லாரும் நல்லா இருப்போம்” என்பது இதுதானா? தவெகவினரின் குற்றச்சம்பவங்களை சுட்டிக்காட்டி இபிஎஸ் கேள்வி!

    மீன்பிடி தடைக்காலம் நிறைவு..! மீன்பிடிக்க புறப்பட்ட மீனவர்கள்..!

    மனித குலத்தின் முன்னேற்றத்துக்கு அடித்தளம் அமைத்தது இந்தியா!- பிரதமர் மோடி

    காதல் திருமணம் செய்த மகள்..! அரக்கனாக மாறிய தந்தை..! உ.பி-யில் நடந்த அதிர்ச்சி சம்பவம்..!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.