Close Menu
    What's Hot

    தேர்தல் அறிக்கை தயாரிக்க A.I. தொழில்நுட்பம்! திமுக புது வியூகம்

    உத்தர பிரதேச அரசு பள்ளிகளில் செய்தித் தாள்கள் வாசிப்பது கட்டாயம்! தினமும் 10 நிமிடம் ஒதுக்கீடு

    தட்கல் டிக்கெட்: மேலும் 5 ரயில்களில் ஓடிபி கட்டாயம்!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»தமிழ்நாடு»முழு கொள்ளளவை எட்டும் செம்பரம்பாக்கம் ஏரி; பூண்டி ஏரியில் 4,000 கனஅடி நீர் வெளியேற்றம்
    தமிழ்நாடு

    முழு கொள்ளளவை எட்டும் செம்பரம்பாக்கம் ஏரி; பூண்டி ஏரியில் 4,000 கனஅடி நீர் வெளியேற்றம்

    Editor TN TalksBy Editor TN TalksNovember 30, 2025Updated:November 30, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    lake
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    புயல் எச்சரிக்கையையொட்டி ஏற்கெனவே முழு கொள்ளளவை எட்டும் நிலையில் உள்ள செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து விநாடிக்கு 2,000 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது. பூண்டி ஏரியிலிருந்து 4,000 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது.

    புயல் எச்சரிக்கையையொட்டி, சென்னைக்குக் குடிநீர் வழங்கும் முக்கிய ஆதாரங்களில் ஒன்றான செம்பரம்பாக்கம் ஏரி கிட்டத்தட்ட முழு கொள்ளளவை எட்டியுள்ள நிலையில், பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகத் தொடர்ந்து உபரிநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. நேற்று காலை நிலவரப்படி, செம்பரம்பாக்கம் ஏரியின் மொத்த நீர்மட்டம் 24 அடியில் 21.73 அடியாக உள்ளது. மொத்த கொள்ளளவான 3.645 டி.எம்.சி. அளவில், தற்போது 3.048 டி.எம்.சி. நீர் இருப்பு உள்ளது.

    ஏரிக்கு தற்போது நீர்வரத்து விநாடிக்கு 100 கன அடியாக மட்டுமே இருக்கும் நிலையில், பாதுகாப்பு கருதி ஏரியிலிருந்து வெளியேற்றப்படும் நீரின் அளவு அதிகப்படுத்தப்பட்டது. காலையில் மொத்தமாக 1,394 கன அடி நீர் வெளியேற்றப்பட்டது. இதில், உபரிநீராக 1,200 கனஅடி நீர் தொடர்ந்து வெளியேற்றப்பட்டது. சென்னை குடிநீர்த் தேவைக்காக 165 கன அடியும், சிப்காட் பயன்பாட்டுக்கு 4 கனஅடியும் நீர் திறந்துவிடப்படுகிறது. இந்த 1,200 கனஅடி நீர் இரவு 2 ஆயிரம் கனஅடியாக அதிகரிக்கப்பட்டது.

    கடந்த 24 மணி நேரத்தில் (காலை 6 மணி வரை) ஏரிப் பகுதியில் மழைப்பொழிவு எது வும் இல்லை. இருப்பினும், கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கையைக் கருத்தில் கொண்டு, நீர்பாசனத் துறையினர் ஏரியின் நீர் இருப்பை உன்னிப்பாகக் கண்காணித்து வருகின்றனர்.

    காஞ்சிபுரம் மாவட்டத்தில் நவ.29,30 ஆகிய தேதிகளில் மாவட்டத்தில் மிகக் கனமழை பெய்யக்கூடும் என எதிர்பார்க்கப்படுவதால், பேரிடரை எதிர்கொள்ள மாவட்ட நிர்வாகமும், நெடுஞ்சாலைத் துறையும் தீவிர முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளன.

    நெடுஞ்சாலைத் துறை ஊழியர்கள் 24 மணி நேரமும் தயார் நிலையில் உள்ளனர். இதற்காக, 4 ஜே.சி.பி. இயந் திரங்கள், 10 மரம் அறுக்கும் கருவிகள், மண்வெட்டிகள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் அனைத்தும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

    வடகிழக்கு பருவமழை தொடங்கியது முதல் திருவள்ளூர் மாவட்டத்தில் பரவலாக விட்டுவிட்டு மழை பெய்து வருகிறது. டிட்வா புயல் காரணமாக இன்று திருவள்ளூர் மாவட்டத்தில் மிக கனமழைக் கான ஆரஞ்சு எச்சரிக்கையும், ஒரு சில பகுதிகளில் அதிக னமழைக்கான சிவப்பு எச்சரிக்கையும் விடுத்துள்ளதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நீர்த்தேக்கங்களில் இருந்து உபரிநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

    நேற்று மாலை நிலவரப்படி பூண்டி நீர்த்தேக்கத்தில் இருந்து விநாடிக்கு 4,000 கன அடி வீதம் உபரிநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. மேலும் புழல் ஏரியிலிருந்து வினாடிக்கு 1,500 கன அடி, வீதம் உபரி நீர் வெளி யேற்றப்பட்டு வருகிறது.

    பூண்டி நீர்த்தேக்கத்திலிருந்து உபரிநீர் வெளியேறும் கொசஸ்தலையாறு செல்லும் கிராமங்களான நம்பாக்கம், கிருஷ்ணாபுரம், ஆட்ரம்பாக்கம், ஒதப்பை, நெய்வேலி, எறையூர், பீமன்தோப்பு. கொரக்கந்தண்டலம், சோமதேவன்பட்டு, மெய்யூர், வெள்ளியூர், தாமரைப்பாக்கம். திருக்கண்டலம், ஆத்தூர். பண்டிக்காவனுர், ஜெகநாதபுரம். புதுகுப்பம். கன்னிப்பாளையம், வன்னிப்பாக்கம், அசூவன் பாளையம், மடியூர். சீமாவரம். வெள்ளிவாயல்சாவடி, நாப்பாளையம், இடையான்சாவடி. மணலி, மணலி புதுநகர் சடை யான்குப்பம். எண்ணூர் பகுதிகளில் வசிப்பவர்கள் பாதுகாப்பாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleடிட்வா புயல் தாக்கம்: சென்னையில் 2-வது நாளாக 47 விமானங்கள் ரத்து
    Next Article புதுச்சேரியில் 3-வது நாளாக கடல் சீற்றம்: கடல் அரிப்பால் சின்ன காலாப்பட்டு துண்டிப்பு!
    Editor TN Talks

    Related Posts

    தட்கல் டிக்கெட்: மேலும் 5 ரயில்களில் ஓடிபி கட்டாயம்!

    December 26, 2025

    சமூகவலைதளங்களை பயன்படுத்த சிறுவர்களுக்குத் தடை! மத்திய அரசுக்கு ஐகோர்ட் கிளை உத்தரவு

    December 26, 2025

    சுனாமி நினைவு தினம்: கடலோர மாவட்டங்களில் கண்ணீர் அஞ்சலி

    December 26, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    தேர்தல் அறிக்கை தயாரிக்க A.I. தொழில்நுட்பம்! திமுக புது வியூகம்

    உத்தர பிரதேச அரசு பள்ளிகளில் செய்தித் தாள்கள் வாசிப்பது கட்டாயம்! தினமும் 10 நிமிடம் ஒதுக்கீடு

    தட்கல் டிக்கெட்: மேலும் 5 ரயில்களில் ஓடிபி கட்டாயம்!

    அதிமுகவில் டிச.31 வரை விருப்ப மனு அளிக்கலாம்! இபிஎஸ் அறிவிப்பு

    தேர்தல் நேரத்தில் கோயில், பக்தி ! திருமா. மீது குஷ்பு தாக்கு

    Trending Posts

    வரிவிதிப்பால் பாதிக்கப்பட்ட தொழில்களுக்கு தமிழகம் துணை நிற்கும்; முதல்வர் ஸ்டாலின்

    December 26, 2025

    தேமுதிகவுக்கு 6 தொகுதிகள் ஒதுக்கீடா? ஜெயக்குமார் சொன்ன பதில் இதுதான்

    December 26, 2025

    சுனாமி நினைவு தினம்: கடலோர மாவட்டங்களில் கண்ணீர் அஞ்சலி

    December 26, 2025

    இந்தியாவிலேயே தமிழகம் தனிகாட்டு ராஜா: சொல்கிறார் முதல்வர் ஸ்டாலின்

    December 26, 2025

    தேர்தல் அறிக்கை தயாரிக்க A.I. தொழில்நுட்பம்! திமுக புது வியூகம்

    December 26, 2025
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2025 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.