Close Menu
    What's Hot

    ஜெலென்ஸ்கி – டிரம்ப் சந்திப்பு!. கீவில் பலத்த வெடி சத்தம்!. அலெர்ட் கொடுத்த அதிகாரிகள்!.

    தங்கம், வெள்ளி விலை வரலாறு காணாத புதிய உச்சம்!. எவ்வளவு தெரியுமா?

    மல்லையா, லலித் மோடியை நாடு கடத்த அரசு தீவிரம்!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»விளையாட்டு»தெ.ஆப்பிரிக்காவுக்கு இந்திய அணி 350 ரன்கள் இலக்கு
    விளையாட்டு

    தெ.ஆப்பிரிக்காவுக்கு இந்திய அணி 350 ரன்கள் இலக்கு

    Editor TN TalksBy Editor TN TalksNovember 30, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    indi
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    ராஞ்சியில் இன்று நடைபெற்று வரும் முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில், தென்னாப்பிரிக்க அணிக்கு 350 ரன்களை இந்திய அணி வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது.

    தென்னாப்பிரிக்க அணி, இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து டெஸ்ட், ஒருநாள், டி20 கிரிக்கெட் தொடர்களில் விளையாடி வருகிறது.

    இதில் முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி, ராஞ்சியில் இன்று நடக்கிறது. இதில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து, இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது.

    ஜெய்ஸ்வால் 18, ரோஹித் சர்மா 57, கெய்க்வாட் 8, வாசிங்டன் சுந்தர் 13 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தனர். இருப்பினும் விராட் கோலி சிறப்பாக விளையாடினார். தொடர்ந்து சீரான ஆட்டத்தை வெளிப்படுத்திய அவர், ஒருநாள் கிரிக்கெட்டில் 52வது  சதத்தை பதிவு செய்தார். 102 பந்துகளில் 103 ரன்களை கோலி அடித்தார். இதில் 7 பவுண்டரிகள், 5 சிக்சர்கள் ஆகியவையும் அடங்கும்.

    சதத்தை பதிவு செய்தபிறகு அதிரடியாக கோலி விளையாடினார். அடுத்தடுத்து பவுண்டரிகள், சிக்சரை விளாசிய அவர், 120 பந்துகளில் 135 ரன்களை எடுத்த நிலையில் ஆட்டமிழந்து வெளியேறி அதிர்ச்சியளித்தார்.

    பின்னர் அதிரடியாக விளையாடிய கேப்டன் கே.எல். ராகுல், 60 ரன்களை விளாசிய நிலையில் ஆட்டமிழந்தார். ரவீந்திர ஜடேஜா 32 ரன்களிலும், அர்ஸ்தீப் ரன் எடுக்காமலும் அவுட்டாகினர். முடிவில் 50 ஓவர்களில் இந்திய அணி 8 விக்கெட்டுகளை இழந்து 349 ரன்களை எடுத்தது.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous ArticleBREAKING: தொடர் ரன்மழை… 52வது சதம் விளாசினார் கோலி
    Next Article ஐபிஎல்-லில் இருந்து ரஸல் ஓய்வு.. இனி புது அவதாரம்
    Editor TN Talks

    Related Posts

    பிரதமரின் ராஷ்ட்ரிய பால புரஸ்கார் விருதை பெற்றார் வைபவ் சூர்யவன்ஷி

    December 26, 2025

    இங்கிலாந்து அணி பயிற்சியாளராக ரவி சாஸ்திரியை நியமிக்க மான்டி பனேசர் கோரிக்கை

    December 26, 2025

    பாட்மிண்டன் சம்மேளன ஆணைய தலைவராக பி.வி.சிந்து தேர்வு

    December 26, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    ஜெலென்ஸ்கி – டிரம்ப் சந்திப்பு!. கீவில் பலத்த வெடி சத்தம்!. அலெர்ட் கொடுத்த அதிகாரிகள்!.

    தங்கம், வெள்ளி விலை வரலாறு காணாத புதிய உச்சம்!. எவ்வளவு தெரியுமா?

    மல்லையா, லலித் மோடியை நாடு கடத்த அரசு தீவிரம்!

    தவெகவே எல்லா தொகுதியிலும் வெல்லும்; செங்கோட்டையன் நம்பிக்கை

    தமிழகத்தின் மிகப்பெரிய வரலாற்றுப் பிழை: நயினார் நாகேந்திரன்

    Trending Posts

    தங்கம் விலை மீண்டும் உயர்வு… எவ்வளவு தெரியுமா?

    December 20, 2025

    ‘பராசக்தி’ திருடப்பட்ட கதை? படம் வெளியாவதில் சிக்கல்!

    December 27, 2025

    பாஜகவுக்கு ‘செக்’ வைக்கும் பழனிசாமி..! டென்ஷனில் சூடாகும் டெல்லி..!!

    December 27, 2025

    ஜெலென்ஸ்கி – டிரம்ப் சந்திப்பு!. கீவில் பலத்த வெடி சத்தம்!. அலெர்ட் கொடுத்த அதிகாரிகள்!.

    December 27, 2025

    தங்கம், வெள்ளி விலை வரலாறு காணாத புதிய உச்சம்!. எவ்வளவு தெரியுமா?

    December 27, 2025
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2025 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.