Close Menu
    What's Hot

    ஆலியா பட்டின் “ஆல்பா” ரிலீஸ் மீண்டும் ஒத்திவைப்பு

    “தமிழர்கள் ஓட்டு போதும்; திராவிடர்கள் ஓட்டு வேண்டாம்!” – நாதக பொதுக் குழுவில் சீமான் பேச்சு

    சினிமா ஜனநாயகன்’ இசை விழா… ரசிகர்களுக்காக.. கடைசி மேடையில் விஜய் தரும் பெரிய சர்ப்ரைஸ் – என்ன தெரியுமா?

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»தமிழ்நாடு»வலுவிழந்து தென் ஆந்திர கரையை நோக்கி நகரும் டிட்வா புயல்
    தமிழ்நாடு

    வலுவிழந்து தென் ஆந்திர கரையை நோக்கி நகரும் டிட்வா புயல்

    Editor TN TalksBy Editor TN TalksNovember 30, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    TN rain
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    டிட்வா புயல் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுமண்டலமாக மாற வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தென் மண்டலத் தலைவர் அமுதா தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் தென் மண்டலத் தலைவர் அமுதா செய்தியாளர்களை சந்தித்து கூறுகையில், ”புதுச்சேரி தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதை ஒட்டிய வடதமிழக கடலோர பகுதிகளில் நிலவிய ‘டிட்வா’ புயல் வடதிசையில் நகர்ந்து, இன்று காலை 11.30 மணி அளவில் கடலூருக்கு கிழக்கு-தென்கிழக்கே 100 கிமீ தொலைவிலும், காரைக்காலுக்கு வடகிழக்கே 110 கிமீ தொலைவிலும், புதுச்சேரிக்கு கிழக்கு-தென்கிழக்கே 100 கிமீ தொலைவிலும், சென்னைக்கு தெற்கு-தென்கிழக்கே 170 கிமீ தொலைவிலும் நிலை கொண்டிருந்தது.

    அப்போது புயலுக்கும், வடதமிழக-புதுச்சேரி கடற்கரைக்குமான குறைந்தபட்ச தூரம் 80 கிமீ ஆக இருந்தது. டிட்வா புயலானது அடுத்த 24 மணி நேரத்தில் வடதமிழகம் புதுச்சேரி கடலோர பகுதிகளுக்கு இணையாக வடதிசையில் நகரக்கூடும். அவ்வாறு நகரும்போது டிட்வா புயலின் மைய பகுதி வடதமிழகம்-புதுச்சேரி கடற்கரையிலிருந்து குறைந்தபட்ச தூரம் இன்று 30ம் தேதி நவம்பர், மாலை, 30 கி. மீ. -ஆக இருக்க வாய்ப்புள்ளது.

    டிட்வா புயலானது இன்று மாலை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்மண்டலமாக மாற வாய்ப்புள்ளது. வலுகுறைந்து வடக்கு நோக்கி நகர்ந்து தென் ஆந்திர கரையை நோக்கி நகரக்கூடும். டிட்வா புயல் தாக்கத்தினால் திருவள்ளூர், ராணிப்பேட்டை 2 மாவட்டங்களில் கனமழை முதல் அதி கனமழை பெய்ய வாய்ப்புள்ளதால் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. சென்னை, காஞ்சிபுரம் செங்கல்பட்டு, வேலூர் ஆகிய நான்கு மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. அங்கு கனமழை முதல் மிக கனமழை பெய்யக்கூடும்.

    திருப்பத்தூர், திருவண்ணாமலை, விழுப்புரம் மற்றும் புதுச்சேரியில் கனமழை வாய்ப்புள்ளது. நாளை மழையின் தாக்கம் குறைந்து விடும். வருகிற 6 ஆம் தேதி வரை தமிழகம் புதுவை காரைக்கால் பகுதிகளில் லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. வட தமிழக கடலோர மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் பலத்த தரைக்காற்று மணிக்கு 60 முதல் 70 கிலோமீட்டர் வேகத்திலும் இடையிடையே 80 கிலோமீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

    இன்று வங்கக்கடலில் அதிகபட்சமாக 60 முதல் 80 கிலோமீட்டர் வேகத்திலும் சூறாவளி காற்று 90 கிமீ வேகத்திலும் வீசக்கூடும். மீனவர்கள் மத்திய மேற்கு வங்க கடல் பகுதிகள், தென் ஆந்திர கடலோரப் பகுதிகள், புதுவை மன்னார் வளைகுடா பகுதிகள், தமிழக கடலோர மற்றும் குமரிக்கடல் பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளார்கள்.

    நாளை காலை காற்றின் வேகம் படிப்படியாக குறைந்து 45 முதல் 55 கிலோமீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோமீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

    நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மிக கனமழை 17 இடங்கள், கனமழை 65 இடங்களில் பெய்துள்ளது” என கூறினார்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Article“சிந்தனை மாற்றமே தேவை” – ஆளுநர் மாளிகை பெயர் மாற்றம் குறித்து முதல்வர் ஸ்டாலின் கருத்து!
    Next Article தயாராகும் ‘அவதார் 3’-ம் பாகம்… படம் பார்க்க 10 லட்சம் இந்தியர்கள் ஆர்வம்
    Editor TN Talks

    Related Posts

    என்னையும் விஜய்யையும் பாஜக பெற்றெடுத்தபோது திருமா தான் பிரசவம் பார்த்தார்!. சீமான் பதிலடி!.

    December 27, 2025

    என்னோடு நேருக்கு நேர் விவாதிக்க தயாரா? முதல்வருக்கு இபிஎஸ் சவால்

    December 27, 2025

    விவசாயி வேடத்தில் நடக்கும் அரசியல்; முதல்வர் ஸ்டாலின் விமர்சனம்

    December 27, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    ஆலியா பட்டின் “ஆல்பா” ரிலீஸ் மீண்டும் ஒத்திவைப்பு

    “தமிழர்கள் ஓட்டு போதும்; திராவிடர்கள் ஓட்டு வேண்டாம்!” – நாதக பொதுக் குழுவில் சீமான் பேச்சு

    சினிமா ஜனநாயகன்’ இசை விழா… ரசிகர்களுக்காக.. கடைசி மேடையில் விஜய் தரும் பெரிய சர்ப்ரைஸ் – என்ன தெரியுமா?

    2 விநாடிகளில் மணிக்கு 750 கி.மீ. வேகம்… சீனா ரயில் சாதனை

    பாஜக வலுவடைந்தால் அதிமுக காணாமல் போய்டும்! திருமா எச்சரிக்கை

    Trending Posts

    ‘பராசக்தி’ திருடப்பட்ட கதை? படம் வெளியாவதில் சிக்கல்!

    December 27, 2025

    பாஜகவுக்கு ‘செக்’ வைக்கும் பழனிசாமி..! டென்ஷனில் சூடாகும் டெல்லி..!!

    December 27, 2025

    தங்கம் விலை மீண்டும் உயர்வு… எவ்வளவு தெரியுமா?

    December 20, 2025

    2 விநாடிகளில் மணிக்கு 750 கி.மீ. வேகம்… சீனா ரயில் சாதனை

    December 27, 2025

    ஆஷஸ் 4வது டெஸ்ட்!. 15 ஆண்டுகால சோகத்திற்கு முடிவு!. இங்கிலாந்து வெற்றி!.

    December 27, 2025
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2025 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.