Close Menu
    What's Hot

    தங்கம் வெள்ளி விலையில் இன்று எந்த மாற்றமும் இல்லை

    அதிவேக 3,000 ரன்கள்! இங்கிலாந்து வீரர் புதிய உலக சாதனை

    நோட்!. ஜன.1 முதல் இந்த விதிகளில் மாற்றம்!. என்னென்ன தெரியுமா?

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»இந்தியா»SIR உள்பட எந்த விவாதத்திற்கும் தயார்!: மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூ
    இந்தியா

    SIR உள்பட எந்த விவாதத்திற்கும் தயார்!: மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூ

    Editor TN TalksBy Editor TN TalksDecember 1, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    Kiran
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தம் உள்ளிட்ட விவகாரத்தை எழுப்பி எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தொடர் அமளியில் ஈடுபட்டதால், மக்களவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது. இதே பிரச்சனையை எழுப்பி மாநிலங்களவையில் இருந்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.

    பரபரப்பான அரசியல் சூழலில் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்று (டிச. 01) தொடங்கியது. வரும் 19ம் தேதி வரை 15 அமர்வுகளாக நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்தநிலையில், மக்களவை மற்றும் மாநிலங்களவை காலை 11 மணிக்கு தொடங்கியது.  மாநிலங்களவையில் குடியரசு துணைத் தலைவர் மற்றும் மாநிலங்களவை தலைவர் சி.பி ராதாகிருஷ்ணனை வரவேற்று பிரதமர் மோடி மற்றும் நாடாளுமன்ற மாநிலங்களவை மூத்த உறுப்பினர்கள் உரையாற்றினர். மக்களவையில் மறைந்த 5 உறுப்பினர்களுக்கு இரங்கல் தெரிவித்து, இரங்கல் தீர்மானம் வாசிக்கப்பட்டு, சில நொடிகள் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.

    தொடர்ந்து கேள்வி நேரத்தை மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா தொடங்கினார். ஆனால் SIR உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து விவாதிக்கக்கோரி எதிர்க்கட்சி எம்.பி-க்கள் ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ் வழங்கினர். இதுகுறித்து விவாதிக்க வேண்டுமென வலியுறுத்தி அமளியில் ஈடுபட்டனர். கடும் அமளியையடுத்து, மக்களவை நண்பகல் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. பின்னர், மீண்டும் அவை கூடிய போதும், அதே கோரிக்கையை வலியுறுத்தி எதிர்க்கட்சி எம்.பி.க்கள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டதால், மக்களவை பிற்பகல் 2 மணி வரை ஒத்தி வைக்கப்பட்டது. மீண்டும் அவை கூடிய போதும், எதிர்க்கட்சி உறுப்பினர்களின் அமளி காரணமாக மக்களவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது. மாநிலங்களவையிலும், இதே கோரிக்கையை வலியுறுத்தி எதிர்க்கட்சி உறுப்பினர்கள் விவாதங்களில் கலந்து கொள்ளாமல், வெளிநடப்பு செய்தனர்.

    இதனிடையே SIR மீதான எதிர்க்கட்சிகளின் கோரிக்கை நிராகரிக்கப்படவில்லை என்று நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ தெரிவித்தார். தங்களுக்கு  பதிலளிக்க அவகாசம் தரப்பட வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார். எந்தவொரு விஷயத்திலும் விவாதத்திற்கு மத்திய அரசு தயாராக இருப்பதாகவும் கிரண் ரிஜிஜூ குறிப்பிட்டார்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleதிருப்பரங்குன்றம் மலை மீது தீபம் ஏற்றலாம்! ஐகோர்ட் கிளை அனுமதி
    Next Article இலங்கைக்கு இந்தியா துணை நிற்கும்!- பிரதமர்மோடி
    Editor TN Talks

    Related Posts

    நோட்!. ஜன.1 முதல் இந்த விதிகளில் மாற்றம்!. என்னென்ன தெரியுமா?

    December 28, 2025

    இன்ஸ்டா ரீல்ஸ்க்கு ஆசைப்பட்டு இப்படியா மாட்டுறது? மதுரை பேராசிரியைக்கு புதுவையில் கிடைத்த பாடம்

    December 28, 2025

    சத்தீஸ்கரில் நிலக்கரி சுரங்கத்துக்கு எதிரான போராட்டத்தில் வன்முறை: போலீஸார் காயம்; வாகனங்கள் எரிப்பு

    December 28, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    தங்கம் வெள்ளி விலையில் இன்று எந்த மாற்றமும் இல்லை

    அதிவேக 3,000 ரன்கள்! இங்கிலாந்து வீரர் புதிய உலக சாதனை

    நோட்!. ஜன.1 முதல் இந்த விதிகளில் மாற்றம்!. என்னென்ன தெரியுமா?

    இன்ஸ்டா ரீல்ஸ்க்கு ஆசைப்பட்டு இப்படியா மாட்டுறது? மதுரை பேராசிரியைக்கு புதுவையில் கிடைத்த பாடம்

    சொத்து வரி பெயர் மாற்ற கட்டணம்.. அதிரடியாக அறிவித்த தமிழக அரசு! நகராட்சி, மாநகராட்சிகளில் எவ்வளவு?

    Trending Posts

    பாலத்தில் தடம் புரண்ட ரயில்!. ஆற்றில் கவிழ்ந்த 10 பெட்டிகள்!. பீகாரில் பரபரப்பு!

    December 28, 2025

    விஜயகாந்த் நினைவு தினம்: உதயநிதி, செல்வ பெருந்தகை அஞ்சலி

    December 28, 2025

    தைவானை உலுக்கிய பயங்கர நிலநடுக்கம்!. ரிக்டர் அளவில் 7.0 ஆக பதிவு!. 

    December 28, 2025

    கேப்டன் விஜயகாந்த் நினைவுநாள்!. முதல்வர் ஸ்டாலின் போட்ட ட்வீட்!

    December 28, 2025

    141-ம் ஆண்டு ஸ்தாபன நாள்: காங்கிரஸ் தலைமையகத்தில் கொண்டாட்டம்

    December 28, 2025
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2025 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.