Close Menu
    What's Hot

    “புரட்சிக் கலைஞருக்கு என் புகழஞ்சலி”!. தவெக தலைவர் விஜய்!

    இனி ஒரு சிகரெட் விலை ரூ.72?. மசோதா கொண்டுவர திட்டம்!.

    உலகின் பாதி தங்கம் பிரிக்ஸ் நாடுகளிடம் மட்டுமே உள்ளது!. பதற்றத்தில் டிரம்ப்!.

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»இந்தியா»இலங்கைக்கு இந்தியா துணை நிற்கும்!- பிரதமர்மோடி
    இந்தியா

    இலங்கைக்கு இந்தியா துணை நிற்கும்!- பிரதமர்மோடி

    Editor TN TalksBy Editor TN TalksDecember 1, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    IND SL
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    ‘டிட்வா’ புயலால் கடும் சேதத்தை சந்தித்துள்ள இலங்கைக்கு இந்தியா துணை நிற்கும் என அந்நாட்டு அதிபர் அநுர குமார திசநாயகேவுடன் தொலைபேசியில் பேசிய பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

    இலங்கை அருகே உருவான ‘டிட்வா’ புயல் அந்நாட்டில் கடுமையாக சேதத்தை ஏற்படுத்தி உள்ளது. கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளம், நிலச்சரிவு போன்ற பேரிடர்களால் இலங்கையின் சூழல் தலைகீழாக மாறி உள்ளது. வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 400ஐ கடந்துள்ளது. மாயமானவர்களின் எண்ணிக்கையும் 370ஐ கடந்துள்ளது. பல மாகாணங்கள் வெள்ளத்தால் சூழ்ந்து, மிதக்கின்றன. மீட்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. கடுமையான பாதிப்பு ஏற்பட்டுள்ளநிலையில், அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

    இதனிடையே புயல் பாதித்த இலங்கைக்கு உடனடியாக நிவாரண உதவிகளை இந்தியா அனுப்பியது. 21 டன் நிவாரணப் பொருட்களையும், 80 தேசிய பேரிடர் மீட்பு படை வீரர்களையும் அனுப்பி வைத்து, மீட்பு பணிகளில் இந்தியாவும் பங்கேற்றுள்ளது.

    இந்தநிலையில், இயற்கை பேரிடர் பாதிப்பு குறித்து இலங்கை அதிபர் அநுர குமார திசநாயகேவுடன் பிரதமர் மோடி தொலைபேசியில் கேட்டறிந்தார். அப்போது, வெள்ளத்தால் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தனது இரங்கலை தெரிவித்துக் கொண்ட பிரதமர் மோடி, ‘ஆப்பரேஷன் சாகர் பந்து’ மூலம் இலங்கைக்கு தேவையான அனைத்து உதவிகளையும் இந்தியா செய்து தர தயாராக இருப்பதாக உறுதியளித்தார். நிவாரணப் பொருட்கள் மற்றும் மீட்பு படையினரை அனுப்பி உதவிய பிரதமர் மோடிக்கு, இலங்கை மக்களின் சார்பில் நன்றியை தெரிவிப்பதாக இலங்கை அதிபர் அநுர குமார திசநாயகே குறிப்பிட்டார்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous ArticleSIR உள்பட எந்த விவாதத்திற்கும் தயார்!: மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூ
    Next Article கேரள முதல்வருக்கு ED சம்மன்! அன்னிய செலவாணி விதிமீறல் புகார்
    Editor TN Talks

    Related Posts

    இனி ஒரு சிகரெட் விலை ரூ.72?. மசோதா கொண்டுவர திட்டம்!.

    December 28, 2025

    உலகின் பாதி தங்கம் பிரிக்ஸ் நாடுகளிடம் மட்டுமே உள்ளது!. பதற்றத்தில் டிரம்ப்!.

    December 28, 2025

    அசாமில் வங்கதேசத்தினர் 40% பேர் வந்துவிட்டனர்!. எச்சரித்த முதல்வர் ஹிமந்த பிஸ்வா!

    December 28, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    “புரட்சிக் கலைஞருக்கு என் புகழஞ்சலி”!. தவெக தலைவர் விஜய்!

    இனி ஒரு சிகரெட் விலை ரூ.72?. மசோதா கொண்டுவர திட்டம்!.

    உலகின் பாதி தங்கம் பிரிக்ஸ் நாடுகளிடம் மட்டுமே உள்ளது!. பதற்றத்தில் டிரம்ப்!.

    ‘தி ராஜா சாப்’ மாளவிகா மோகனன் தோற்றம் வெளியீடு

    ‘ரஜினியை வைத்து காதல் படம்’ – இயக்குநர் சுதா கொங்காரா ஆசை

    Trending Posts

    பாலத்தில் தடம் புரண்ட ரயில்!. ஆற்றில் கவிழ்ந்த 10 பெட்டிகள்!. பீகாரில் பரபரப்பு!

    December 28, 2025

    விஜயகாந்த் நினைவு தினம்: உதயநிதி, செல்வ பெருந்தகை அஞ்சலி

    December 28, 2025

    தைவானை உலுக்கிய பயங்கர நிலநடுக்கம்!. ரிக்டர் அளவில் 7.0 ஆக பதிவு!. 

    December 28, 2025

    தங்கம், வெள்ளி இன்றைய விலை நிலவரம்!

    December 28, 2025

    கேப்டன் விஜயகாந்த் நினைவுநாள்!. முதல்வர் ஸ்டாலின் போட்ட ட்வீட்!

    December 28, 2025
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2025 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.