Close Menu
    What's Hot

    ஜேசன் சஞ்சய் இயக்கிய ‘சிக்மா’ படத்தின் டீசர் வெளியீடு!

    ‘ஜனநாயகன்’ வெளியாவதில் சிக்கல்..? காரணம் என்ன?

    பாஜக கூட்டணிக்கு விஜய் வர வேண்டும்: தமிழிசை

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»இந்தியா»உலக சாதனைப் புத்தகத்தில் இடம்பிடித்தார் நிதிஷ்குமார்! 10வது முறை முதல்வரான ஒரே நபர்!
    இந்தியா

    உலக சாதனைப் புத்தகத்தில் இடம்பிடித்தார் நிதிஷ்குமார்! 10வது முறை முதல்வரான ஒரே நபர்!

    Editor web1By Editor web1December 7, 2025Updated:December 7, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    NITISH 1
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    இந்தியாவில் ஒரு மாநிலத்தின் முதலமைச்சவராக 10வது முறையாக பதவியேற்ற ஒரே நபர் என்ற சாதனை படைத்த பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்துள்ளார்.

    பீகார் சட்டப்பேரவைத் தேர்தலில் அமோக வெற்றி பெற்ற தேசிய ஜனநாயக கூ.ட்டணி, மீண்டும் ஆட்சி அமைத்தது. அந்த கூட்டணியில் இடம்பெற்றிருந்த ஐக்கிய ஜனதா தளம் கட்சித் தலைவர் நிதிஷ்குமார் மீண்டும் முதலமைச்சராக பதவியேற்றார். இதன் மூலம் பீகார் மாநிலத்தின் முதலமைச்சராக 10வது முறையாக நிதிஷ்குமார் பதவியேற்றார். நாட்டில் உள்ள ஒரு மாநிலத்தின் முதலமைச்சராக அதிக முறை பதவியேற்ற, அவரின் சாதனை நிகழ்வை லண்டனில் உள்ள உலக சாதனை புத்தகம் அதிகாரப்பூர்வமாக அங்கீகரித்துள்ளது.

    இதனை ஐக்கிய ஜனதா தளம் தேசிய செயல் தலைவர் சஞ்சய்குமார் தெரிவித்துள்ளார். பீகாரின் 10வது முறையாக முதலமைச்சராக பதவியேற்றுள்ள நிதிஷ்குமார் அடைந்த அசாதாரண மைல் கல்லை லண்டனில் உள்ள உலக சாதனை புத்தகம் (World book of Records) அங்கீகரித்துள்ளது மிகுந்த மகிழ்ச்சியையும், பெருமையையும் அளிப்பதாக  தனது X தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் அவர் குறிப்பிட்டுள்ளார். நாட்டின் ஜனநாயக பயணத்தில் இது உண்மையிலேயே அரிய சாதனை என்று கூறியுள்ளார். நிதிஷ்குமாரின் அசைக்க முடியாத பொது சேவை, நிலையான நிர்வாகம் மற்றும் பீகார் மக்கள் அவர் மீது வைத்த நம்பிக்கையின் பிரதிபலிப்பாகும் என்று சஞ்சய்குமார் தெரிவித்துள்ளார்.

    அதிக நாட்கள் முதலமைச்சராக பதவி வகித்தவர்கள் பட்டியலில், நிதிஷ் குமார் 8வது இடத்தில் உள்ளார். அவர், 19 ஆண்டுகளை கடந்து முதலமைச்சராக பதவி வகிக்கிறார். இந்த பட்டியலின் முதல் இடத்தில் இருப்பவர் சிக்கிம் மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சர் பவன் குமார் சாம்லிங். இவர் 24 ஆண்டுகள் 165 நாட்கள் முதலமைச்சராக இருந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Article‘வந்தே மாதரம்’ பாடலின் 150வது ஆண்டு நிறைவு: மக்களவையில் நாளை (டிச. 8) சிறப்பு விவாதம்!
    Next Article ‘டிட்வா’ கோர தாண்டவத்தில் இலங்கையில் பலி எண்ணிக்கை 627ஐ தாண்டியது!
    Editor web1
    • Website

    Related Posts

    புயலால் பாதித்த இலங்கைக்கு இந்தியா ரூ.4 ஆயிரம் கோடி நிதியுதவி!

    December 23, 2025

    டெல்லியில் எதிரொலித்த வங்கதேச வன்முறை!. யூனுஸ் உருவ பொம்மை எரித்து போராட்டம்!.

    December 23, 2025

    ராகுல் காந்தி பொய் பிரசாரங்களின் தலைவர்; நாட்டை அவமதிக்கும் கலையில் கைதேர்ந்தவர்!. கடும் விமர்சனம்!

    December 23, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    ஜேசன் சஞ்சய் இயக்கிய ‘சிக்மா’ படத்தின் டீசர் வெளியீடு!

    ‘ஜனநாயகன்’ வெளியாவதில் சிக்கல்..? காரணம் என்ன?

    பாஜக கூட்டணிக்கு விஜய் வர வேண்டும்: தமிழிசை

    ‘ஜனநாயகன்’ ஆடியோ விழாவில் அரசியல் பேசத் தடை?

    குளிர்கால ஒலிம்பிக் விழாவின் ஜோதியை ஏந்திச் சென்றார் ஜாக்கி சான்!

    Trending Posts

    ஜேசன் சஞ்சய் இயக்கிய ‘சிக்மா’ படத்தின் டீசர் வெளியீடு!

    December 23, 2025

    ‘ஜனநாயகன்’ வெளியாவதில் சிக்கல்..? காரணம் என்ன?

    December 23, 2025

    பாஜக கூட்டணிக்கு விஜய் வர வேண்டும்: தமிழிசை

    December 23, 2025

    ‘ஜனநாயகன்’ ஆடியோ விழாவில் அரசியல் பேசத் தடை?

    December 23, 2025

    குளிர்கால ஒலிம்பிக் விழாவின் ஜோதியை ஏந்திச் சென்றார் ஜாக்கி சான்!

    December 23, 2025
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2025 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.