Close Menu
    What's Hot

    ஒரு கணக்கு பாக்கி இருக்கு.. ஆவேசமாக பேசிய ஆதவ் அர்ஜுனா..!! சுப்ரீம் கோர்ட்டை நாட திமுக முடிவு..!!

    சி.வி.சண்முகத்திற்கு ஆயுதம் ஏந்திய பாதுகாப்பு..! சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு..!

    கோவில்களில் முறைகேடா? மக்களே.. இனி இதை செய்ங்க..!! அமைச்சர் ரமேஷ் அதிரடி அறிவிப்பு..!!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»அரசியல்»புதுச்சேரிக்காகவும் நான் குரல் கொடுப்பேன்… விஜய் பரபரப்பு பேச்சு
    அரசியல்

    புதுச்சேரிக்காகவும் நான் குரல் கொடுப்பேன்… விஜய் பரபரப்பு பேச்சு

    Editor TN TalksBy Editor TN TalksDecember 9, 2025Updated:December 9, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    TVKVijayTour10 2025 09 357530ed7beb459a0b88cee68bf9858b
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    தமிழகத்திற்கு மட்டுமில்லை, புதுச்சேரிக்கும் குரல் கொடுப்பேன், துணை நிற்பேன் என தவெக  தலைவர் விஜய் உறுதிபடத் தெரிவித்துள்ளார்.

    புதுச்சேரியில் இன்று நடைபெற்ற பொதுக் கூட்டத்தில், இதுகுறித்து தவெக தலைவர் விஜய் பேசியதாவது:

    ஒன்றிய அரசுக்குதான், புதுச்சேரி, தமிழகம் வேறு வேறு. ஆனால் நமக்கு அனைத்தும் ஒன்றுதான். தமிழர்கள் வாழும் பகுதி அனைத்தும் நமக்கு ஒன்றுதான். வேறு வேறு கிடையாது. தமிழகம், புதுச்சேரி வேறு வேறாக இருந்தாலும், நாம் அனைவரும் ஒன்றுதான். சொந்தங்கள்தான்.

    உலகின் எந்த மூலையில் தமிழர்கள் இருந்தாலும், அவர்கள் நமது உயிர்தான். நமது உறவுதான். தமிழகத்திற்கு முன்பே, புதுச்சேரியில் 1974-ல் அதிமுக ஆட்சியமைந்தது. தமிழகத்திற்கு அலர்ட் கொடுத்ததே புதுச்சேரிதான். தமிழகத்தை போலவே புதுச்சேரி மக்கள், என்னை 30 ஆண்டுகளாக தாங்கி பிடித்துள்ளனர்.

    இந்த விஜய், தமிழகத்திற்கு மட்டும் குரல் கொடுக்க மாட்டேன். புதுச்சேரிக்கும் குரல் கொடுப்பேன். அது எனது கடமையாகும். இந்த புதுச்சேரி அரசு குறித்து பேசியே ஆக வேண்டும். இது தமிழகத்தில் இருக்கும் ஆளும் திமுக அரசு போல கிடையவே கிடையாது. ஏனெனில், வேறு கட்சியின் அரசியல் கூட்டமாகவே இருந்தாலும் புதுச்சேரி அரசு இன்று சிறப்பான பாதுகாப்பு கொடுத்துள்ளது. இந்த கூட்டத்திற்கு பாரபட்சமே புதுச்சேரி அரசு காட்டவில்லை.

    அப்படிப்பட்ட புதுச்சேரி அரசுக்கும், நம்ம புதுச்சேரி முதல்வருக்கும் இந்த நேரத்தில் எனது நன்றியை மனப்பூர்வமாக தெரிவித்து கொள்கிறேன். இதை பார்த்தாவது, தமிழகத்தை ஆளும் திமுக கற்றுக் கொள்ள வேண்டும். ஆனால் அவர்கள் பாடம் கற்க மாட்டார்கள். அவர்களுக்கு 2026 தேர்தலில் மக்கள் பாடம் 100 சதவீதம் கற்று கொடுப்பார்கள்.

    புதுச்சேரியில் ஆளும் கூட்டணி அரசில் பாஜக இருந்தாலும், மக்கள் கோரிக்கையை அது கண்டுகொள்ளவில்லை. புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து இன்னும் கொடுக்கவில்லை மத்திய பாஜக அரசு. இதுதொடர்பாக புதுச்சேரி சட்டப்பேரவையில் 16 தீர்மானம் நிறைவேற்றி அனுப்பியும், மத்திய அரசு கண்டுகொள்ளவில்லை.

    புதுச்சேரியில் மூடப்பட்ட ஆலைகளை திறக்கவோ, தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தை தொடங்கவோ எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

    ஊழல் குற்றச்சாட்டில் நீக்கப்பட்ட அமைச்சருக்கு பதில் வேறு ஒருவருக்கு பதவி தரப்பட்டும். அவருக்கு 300 நாள்களுக்கும் மேலாகியும் இலாகா தரப்படவில்லை. இது சிறுபான்மையினருக்கு இழைக்கப்பட்ட அநீதி.

    திமுகவை நம்பாதீர்கள்: திமுகவை புதுச்சேரி மக்களே நம்பாதீர்கள். அவர்கள் நம்ப வைத்து ஏமாற்றி விடுவார்கள். இதுதான் திமுகவின் வேலை ஆகும்.

    20 லட்சம் பேர் வாழும் புதுச்சேரி யூனியன் பிரதேசம், மத்திய நிதிக்குழுவில் இடம்பெறவில்லை. ஆதலால் கிடைக்க வேண்டிய நிதி, புதுச்சேரிக்கு கிடைப்பதில்லை. இந்த நிலை மாற வேண்டும் எனில் புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து கிடைப்பது அவசியம்.

    ரேசன் கடைகள் இல்லாத மாநிலம், புதுச்சேரிதான். மற்ற மாநிலங்களை போல இங்கும் அவை கொண்டு வரப்பட வேண்டும். மீன்பிடிக்க செல்லும் காரைக்கால் மீனவர்களை கைது செய்யும் இலங்கை கடற்படை, படகுகளை பறிமுதல் செய்கிறது. நீண்ட நாள்களுக்கு பிறகு மீனவர்கள் விடுவிக்கப்பட்டாலும், படகுகள் விடுவிக்கப்படுவதில்லை. இந்த நிலை மாற வேண்டும்.

    வரப்போகிற புதுச்சேரி தேர்தல் களத்தில் தவெக கொடி பட்டொளி வீசி பறக்கும். நம்பிக்கையுடன் இருங்கள். நல்லதே நடக்கும். வெற்றி நிச்சயம்.

    இவ்வாறு தவெக தலைவர் விஜய் பேசினார்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleதில் இருந்தால் தேர்தலில் மோதுங்கள்… ஸ்டாலினுக்கு ஆதவ் அர்ஜூனா சவால்
    Next Article புதுச்சேரியில் தவெக யாருடன் கூட்டணி? ஹின்ட் கொடுத்த விஜய்
    Editor TN Talks

    Related Posts

    ஒரு கணக்கு பாக்கி இருக்கு.. ஆவேசமாக பேசிய ஆதவ் அர்ஜுனா..!! சுப்ரீம் கோர்ட்டை நாட திமுக முடிவு..!!

    July 3, 2026

    சி.வி.சண்முகத்திற்கு ஆயுதம் ஏந்திய பாதுகாப்பு..! சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு..!

    July 3, 2026

    கோவில்களில் முறைகேடா? மக்களே.. இனி இதை செய்ங்க..!! அமைச்சர் ரமேஷ் அதிரடி அறிவிப்பு..!!

    July 3, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    ஒரு கணக்கு பாக்கி இருக்கு.. ஆவேசமாக பேசிய ஆதவ் அர்ஜுனா..!! சுப்ரீம் கோர்ட்டை நாட திமுக முடிவு..!!

    சி.வி.சண்முகத்திற்கு ஆயுதம் ஏந்திய பாதுகாப்பு..! சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு..!

    கோவில்களில் முறைகேடா? மக்களே.. இனி இதை செய்ங்க..!! அமைச்சர் ரமேஷ் அதிரடி அறிவிப்பு..!!

    பொறுப்பு ஆளுநருக்கு உண்மையில் பொறுப்பு இருக்கிறதா..?? அமைச்சர் வன்னிஅரசு சரமாரி கேள்வி..!!

    கட்சியை எப்படியாவது காப்பாத்தணும்…!! களத்தில் இறங்கிய இபிஎஸ்..!! முக்கிய ஆலோசனை..!!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.