Close Menu
    What's Hot

    ஜனநாயகன் லீக் விவகாரம்!. நடிகை பூஜா ஹெக்டே வருத்தம்!. 

    மத்திய கிழக்கில் ஓயாத போர்!. இதுவரை 2,000 பேர் மரணம்!. சிதைந்து கிடக்கும் நகரங்கள்!

    6 மாதங்களில் அண்ணாமலைக்கு முதல்வர் பதவி; இதுதான் பாஜகவின் திட்டம்!. திருமா பேச்சு!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»தமிழ்நாடு»வாக்குக்கு பணம் – தவெக வழக்கில் மத்திய தகவல் ஆணையத்திற்கு உத்தரவு!
    தமிழ்நாடு

    வாக்குக்கு பணம் – தவெக வழக்கில் மத்திய தகவல் ஆணையத்திற்கு உத்தரவு!

    Editor TN TalksBy Editor TN TalksDecember 9, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    court
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    வாக்குக்கு பணம் கொடுப்பதைத் தடுக்க எடுக்க உள்ள நடவடிக்கை குறித்து தவெகவிற்கு தெரிவிக்க மத்திய தகவல் ஆணையத்திற்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    எதிர் வரும் சட்டப் பேரவை தேர்தலில் வாக்குக்கு பணம் கொடுப்பதை தடுக்க தேர்தல் ஆணையம் எடுக்க உள்ள நடவடிக்கை குறித்து தகவலை தெரிவிக்க தகவல் ஆணையத்துக்கு உத்தரவிடக் கோரி த.வெ.க வழக்கறிஞர் அணி சென்னை மண்டல இணை ஒருங்கிணைப்பாளர் ஆதித்ய சோழன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

    ஆதித்ய சோழன் தாக்கல் செய்த மனுவில், எதிர் வரும் 2026 ஆம் ஆண்டு சட்டப் பேரவை தேர்தலின் போது, பணப் பட்டுவாடா குறித்து புகார் அளிக்க கட்டணமில்லா தொலைப்பேசி எண் வசதி செய்யப்பட்டுள்ளதா? இதற்கு முன் வாக்காளர்களுக்கு பணப் பட்டுவாடா செய்த கட்சிகள், வேட்பாளர்கள் மீது எடுத்த நடவடிக்கைகள் என்ன? பணப் பட்டுவாடா குறித்து புகார் தெரிவிக்க மொபைல் ஆப் மற்றும் இணையதள வசதிகள் ஏற்படுத்தப்பட உள்ளதா? பணப் பட்டுவாடா தொடர்பாக கடந்த 50 ஆண்டுகளில் எத்தனை புகார்கள் பெறப்பட்டன? என்பன உள்ளிட்ட கேள்விகளை தகவல் உரிமைச் சட்டத்தின் கீழ் கேட்கப்பட்டது.

    இதில் இரு கேள்விகளுக்கு மட்டுமே தேர்தல் ஆணைய பொது தகவல் அதிகாரி பதிலளித்தார். இது சம்பந்தமான உத்தரவை எதிர்த்து, மத்திய தகவல் ஆணையத்தில் கடந்த ஆகஸ்ட் மாதம் இரண்டாவது மேல் முறையீட்டு விண்ணப்பத்தை தாக்கல் செய்தும், இதுவரை பரிசீலிக்கப்படவில்லை. அந்த மேல் முறையீட்டு விண்ணப்பத்தை பரிசீலித்து தகவல் அளிக்கும் படி, மத்திய தகவல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும் என மனுவில் கோரிக்கை வைத்திருந்தார்.

    இந்த மனு சென்னை உயர் நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி எம்.எம். ஸ்ரீவஸ்தவா மற்றும் நீதிபதி ஜி. அருள் முருகன் அமர்வு முன் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், மனுதாரரின் மேல் முறையீட்டு மனு மீது விரைந்து முடிவெடுக்க வேண்டும். இரண்டு மாதங்களில் முடிவெடுக்காவிட்டால், மனுதாரர் இந்த வழக்கை புதுப்பித்துக் கொள்ளலாம் என மத்திய தகவல் ஆணையத்திற்கு உத்தரவிட்டனர்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleஜனவரி 16 முதல் 18 வரை சென்னையில் பன்னாட்டு புத்தக கண்காட்சி – அமைச்சர் அன்பில் மகேஸ் தகவல்
    Next Article “விமான நிலையங்கள் இயல்பு நிலைக்கு திரும்புகின்றன” – மக்களவையில் மத்திய அமைச்சர் தகவல்
    Editor TN Talks

    Related Posts

    6 மாதங்களில் அண்ணாமலைக்கு முதல்வர் பதவி; இதுதான் பாஜகவின் திட்டம்!. திருமா பேச்சு!

    April 11, 2026

    தேர்தல் முடிந்தவுடன் தான், திமுகவினர் தங்கள் சுயரூபத்தை காட்டுவார்கள்!. அண்ணாமலை அட்டாக்!

    April 11, 2026

    அடுத்தடுத்து ரத்தாகும் விஜய்யின் பிரசாரம்!. கவரப்பேட்டை கூட்டமும் ரத்து!. தொண்டர்கள் ஏமாற்றம்!

    April 11, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    ஜனநாயகன் லீக் விவகாரம்!. நடிகை பூஜா ஹெக்டே வருத்தம்!. 

    மத்திய கிழக்கில் ஓயாத போர்!. இதுவரை 2,000 பேர் மரணம்!. சிதைந்து கிடக்கும் நகரங்கள்!

    6 மாதங்களில் அண்ணாமலைக்கு முதல்வர் பதவி; இதுதான் பாஜகவின் திட்டம்!. திருமா பேச்சு!

    தேர்தல் முடிந்தவுடன் தான், திமுகவினர் தங்கள் சுயரூபத்தை காட்டுவார்கள்!. அண்ணாமலை அட்டாக்!

    அடுத்தடுத்து ரத்தாகும் விஜய்யின் பிரசாரம்!. கவரப்பேட்டை கூட்டமும் ரத்து!. தொண்டர்கள் ஏமாற்றம்!

    Trending Posts

    அடுத்த அதிரடி!. தலைமைச் செயலர், உள்துறை செயலாளர் மாற்றம்!. தேர்தல் ஆணையம் உத்தரவு!

    April 11, 2026

    தலைமைச் செயலர் மாற்றத்திற்கு கடும் எதிர்ப்பு!. தேர்தல் ஆணையத்திற்கு டி.ஆர்.பாலு கடிதம்!

    April 11, 2026

    மத்திய கிழக்கில் ஓயாத போர்!. இதுவரை 2,000 பேர் மரணம்!. சிதைந்து கிடக்கும் நகரங்கள்!

    April 11, 2026

    6 மாதங்களில் அண்ணாமலைக்கு முதல்வர் பதவி; இதுதான் பாஜகவின் திட்டம்!. திருமா பேச்சு!

    April 11, 2026

    தேர்தல் முடிந்தவுடன் தான், திமுகவினர் தங்கள் சுயரூபத்தை காட்டுவார்கள்!. அண்ணாமலை அட்டாக்!

    April 11, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.