Close Menu
    What's Hot

    தண்டவாளம் நடுவில் நின்ற ஆட்டோ! வந்தே பாரத் ரயில் தப்பியது

    டெல்லி தேவாலயத்தில் மோடி பிரார்த்தனை! கிறிஸ்துமஸை முன்னிட்டு வழிபாடு

    தவெக கூட்டணியில் டிடிவி, ஓபிஎஸ்? செங்கோட்டையன் சொன்ன பதில்

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»தமிழ்நாடு»தமிழகம் முழுவதும் இன்றுமுதல் லாரி உரிமையாளர்கள் ஸ்டிரைக்!. அத்தியாவசிய பொருட்களின் விலை உயரும் அபாயம்!
    தமிழ்நாடு

    தமிழகம் முழுவதும் இன்றுமுதல் லாரி உரிமையாளர்கள் ஸ்டிரைக்!. அத்தியாவசிய பொருட்களின் விலை உயரும் அபாயம்!

    Editor web3By Editor web3December 11, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    lorry strike
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    தமிழ்நாடு முழுவதும் இன்று முதல் லாரி உரிமையாளர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுவதாக அறிவித்துள்ளனர்.

    மத்திய மற்றும் மாநில அரசுகள் சமீபத்தில் லாரிகளுக்கான எப்.சி. கட்டணத்தை அதிரடியாக உயர்த்தின. இதற்கு முன் ரூ.850 ஆக இருந்த எப்.சி. கட்டணம் தற்போது ரூ.33,040ஆக உயர்த்தப்பட்டுள்ளது. ஏற்கனவே டீசல் விலை உயர்வு, சுங்கக் கட்டண உயர்வு, உதிரி பாகங்களின் விலை உயர்வு போன்ற காரணங்களால் லாரி உரிமையாளர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், இந்தக் கட்டண உயர்வு அவர்களுக்கு மேலும் சுமையாக அமைந்தது.

    இதன்காரணமாக் லாரிகளுக்கான எப்.சி. (FC – Fitness Certificate) கட்டண உயர்வை திரும்ப பெறவேண்டும், லாரிகளுக்கு விதிக்கப்படும் ஆன்லைன் அபராதம் விதிக்கப்படும் நடைமுறையை நிறுத்தவேண்டும், மோட்டார் தொழிலில் உள்ள குறைகளை சரி செய்ய மோட்டார் வாரியம் அமைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட, ஒன்பது கோரிக்கைகளை, பல்வேறு சங்கங்கள் வலியுறுத்தி வருகின்றன.

    இந்தநிலையில், இந்த ஒன்பது அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு முழுவதும் லாரி உரிமையாளர்கள் இன்றுமுதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதன் காரணமாக காய்கறிகள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலை அதிகரிக்க வாய்ப்புள்ளது.

    முன்னதாக, சென்னை துறைமுகத்தை சேர்ந்த சங்கத்தினர் மற்றும் கனரக வாகனங்களை சேர்ந்த சங்கத்தினர் என 80க்கும் மேற்பட்ட சங்கத்தினர் ஒன்றிணைந்து நேற்று நள்ளிரவு முதல் வேலை நிறுத்தப்போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

     

    essential commodity Lorry owners prices rising strike starting today
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Article12 ராசிகளுக்கான வார பலன்கள் @ டிச.11 – 17
    Next Article ஜோதிட நாள்காட்டி 11.12.2025 | கார்த்திகை 25
    Editor web3
    • Website

    Related Posts

    ஒரு பவுன் தங்கம் : இன்றைய நிலவரம் என்ன?

    December 25, 2025

    கிரிக்கெட்டில் நான் ஒரு ‘ஆப் ஸ்பின்னர்’ – முதல்வர் ஸ்டாலின் கலகல பேச்சு

    December 25, 2025

    இயேசுபிரான் காட்டிய அன்பு, சகோதரத்துவத்தை பின்பற்றுவோம்: தலைவர்கள் கிறிஸ்துமஸ் வாழ்த்து

    December 25, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    தண்டவாளம் நடுவில் நின்ற ஆட்டோ! வந்தே பாரத் ரயில் தப்பியது

    டெல்லி தேவாலயத்தில் மோடி பிரார்த்தனை! கிறிஸ்துமஸை முன்னிட்டு வழிபாடு

    தவெக கூட்டணியில் டிடிவி, ஓபிஎஸ்? செங்கோட்டையன் சொன்ன பதில்

    ஒரு பவுன் தங்கம் : இன்றைய நிலவரம் என்ன?

    அமெரிக்காவில் சட்டவிரோதமாக தங்கியிருந்த 30 இந்தியர் கைது

    Trending Posts

    மும்பையில் டிஜிட்டல் அரெஸ்ட்- ரூ.9 கோடியை இழந்து தவிக்கும் 85 வயது முதியவர்

    December 25, 2025

    தேசிய சீனியர் பாட்மிண்டன்: உன்னதி, தன்வி முன்னேற்றம்

    December 25, 2025

    கிரிக்கெட்டில் நான் ஒரு ‘ஆப் ஸ்பின்னர்’ – முதல்வர் ஸ்டாலின் கலகல பேச்சு

    December 25, 2025

    புதுச்சேரியில் சிறுவர் சீர்திருத்த பள்ளியில் இருந்து 3 மாணவர்கள் தப்பியோட்டம்

    December 25, 2025

    இஷான் கிஷனின் சாதனை சதம் வீண்: 413 ரன்களை வெற்றிகரமாக துரத்தியது கர்நாடகா அணி

    December 25, 2025
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2025 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.