Close Menu
    What's Hot

    வாழ்த்து மழையில் நனையும் இசைமழை

    ஜூன் 4ம் தேதி பள்ளிகள் திறப்பு..!! சுத்தமாகும் வகுப்பறைகள்.. பணிகள் தீவிரம்..!!

    திமுகவுக்கு ஷாக்..!! உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக MLA-க்கள் ராஜினாமா..??

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»இந்தியா»விஜய் பொதுக் கூட்டத்துக்கு சிறப்பான பாதுகாப்பு அளித்த புதுச்சேரி காவல் அதிகாரிகளுக்கு பாராட்டு!
    இந்தியா

    விஜய் பொதுக் கூட்டத்துக்கு சிறப்பான பாதுகாப்பு அளித்த புதுச்சேரி காவல் அதிகாரிகளுக்கு பாராட்டு!

    Editor TN TalksBy Editor TN TalksDecember 12, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    vijay 1
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    விஜய் பொதுக்கூட்டத்துக்கு சிறப்பான பாதுகாப்பு அளித்த புதுச்சேரி போலீஸாருக்கு பாராட்டுச் சான்றிதழ்களை அமைச்சர் நமச்சிவாயம் வழங்கினார்.

    கரூர் சம்பவத்துக்குப் பிறகு புதுச்சேரியில் விஜய் ‘ரோடு ஷோ’ நடத்த அனுமதி கோரினார்.சட்டம் – ஒழுங்கு காரணங் களால் புதுச்சேரி போலீஸார் அனுமதி தரவில்லை. அதே நேரத்தில் பொதுக்கூட்டம் நடத்த அனுமதி வழங்கினர். அதன்படி, கடந்த 9-ம் தேதி உப்பளம் மைதானத்தில் பொதுக்கூட்டம் நடந்தது.

    இந்த பொதுக்கூட்டம் தொடர்பாக நேற்று முன்தினம் பேசிய புதுச்சேரி உள்துறை அமைச்சர் நமச்சிவாயம், “திறம் பட கையாண்டு, சட்டம் – ஒழுங்கு சிக்கல் இல்லாமல் இந்தக் கூட்டத்தை நடத்தி முடித்த காவல்துறையினருக்கு எனது பாராட்டுகள்” என்று தெரிவித்திருந்தார்.

    இதைத் தொடர்ந்து நேற்று புதுவை காவல்துறை தலைமையகத்தில் உயர திகாரிகளுடன் அமைச்சர் நமச்சிவாயம் ஆலோசனை நடத்தினார்.

    டிஜிபி ஷாலினிசிங், ஐஜி அஜித்குமார் சிங்ளா, டிஐஜி சத்தியசுந்தரம், சீனியர் எஸ்பிக்கள், எஸ்பிக்கள் உள்ளிட்டோர் இக்கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

    விஜய் பொதுக்கூட்டத்துக்கு சிறப்பான பாதுகாப்பு வழங்கிய் எஸ்எஸ்பி ஈஷா சிங் உட்பட பல்வேறு வகையிலும் சிறப்பாக செயல்பட்ட காவல்துறை அதிகாரிகளை அமைச்சர் நமச் சிவாயம் சால்வை அணிவித்து, பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கினார்.

    ‘க்யூ ஆர் கோடு’ நுழைவுச் சீட்டு வைத்திருந்த 5 ஆயிரம் பேரை தாண்டி பலரையும் தவெக பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் இந்த பொதுக்கூட்ட திடலுக்குள் அனுப்பினார். அப்போது அதை கடுமையாக கண்டித்து எஸ்எஸ்பி ஈஷாசிங் அவரிடம் பேசினார். இந்தக் காட்சிகள் வலைதளங்களில் வைரலாயின.

    ‘இந்த பொதுக்கூட்டத்தில் போலீஸாரின் உத்தரவை மீறி செயல்பட்ட புஸ்ஸி ஆனந்த் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா?’ என உள்துறை அமைச்சர் நமச்சிவாயத்திடம் கேட்டதற்கு, “ஆதாரம் இருந் தால் தரலாம். இதை விசாரித்து உரிய நடவடிக்கை எடுப்போம்” என்றார்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Article‘ட்​ரம்ப் தனது போக்கை மாற்றாவிட்டால் இந்​தி​யா​வின் நட்புறவை இழக்க நேரிடும்’ – சிட்னி காம்​லாகர் எச்சரிக்கை
    Next Article தனியார் பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து… பக்தர்கள் 9 பேர் பலி
    Editor TN Talks

    Related Posts

    நீட் மறுதேர்வை ஆன்லைனில் நடத்த உச்சநீதிமன்றம் மறுப்பு

    June 1, 2026

    மே மாத ஜிஎஸ்டி வசூல் ரூ.1.94 லட்சம் கோடி… பொருளாதார வளர்ச்சியின் அறிகுறியா?

    June 1, 2026

    35 புதிய அமைச்சர்கள் பதவியேற்பு!. மே.வங்க அமைச்சரவையின் பலம் 41 ஆக உயர்வு!

    June 1, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    வாழ்த்து மழையில் நனையும் இசைமழை

    ஜூன் 4ம் தேதி பள்ளிகள் திறப்பு..!! சுத்தமாகும் வகுப்பறைகள்.. பணிகள் தீவிரம்..!!

    திமுகவுக்கு ஷாக்..!! உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக MLA-க்கள் ராஜினாமா..??

    முதலமைச்சர் விஜய் இனியும் நடிக்க வேண்டாம்: முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்

    மேகதாது திட்டத்திற்கு எதிராக போர்க்கொடி..!! சென்னையில் மதிமுக பிரம்மாண்ட ஆர்ப்பாட்டம்..!!

    Trending Posts

    திரையுலகை ஆளும் சக்ரவர்த்தி ‘இசைஞானி’ இளையராஜா!

    June 2, 2026

    எந்த இடைத்தேர்தலிலும் போட்டியிட மாட்டேன்..!! திருமாவளவன் திட்டவட்டம்..!!

    June 2, 2026

    இசைஞானி இளையராஜா பிறந்தநாள்..! வாழ்த்து தெரிவிக்க குவிந்த ரசிகர்கள்..!

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026

    தமிழக அமைச்சரவை மூப்பு நிலைப் பட்டியல் வெளியீடு: முதல் 3 இடங்களில் முதலமைச்சர் விஜய், ஆனந்த், ஆதவ் அர்ஜூனா!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.