Close Menu
    What's Hot

    இளைஞர்களே நோட்!. சென்னையில் ஆப்பிள் புதிய அலுவலகம்!. ஆட்சேர்ப்பு பணிகள் தொடக்கம்!

    மகளிர் டி20!. 3-வது போட்டியில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி தொடரை கைப்பற்றிய இந்தியா!

    காவி சிந்தனையில் எடப்பாடி பழனிசாமி!. செல்வபெருந்தகை கண்டனம்!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»அரசியல்»பாஜகவும் தேர்தல் ஆணையமும் கூட்டாக சதி செய்கின்றன!. சட்டத்தையே மாற்றிவிட்டார் மோடி!. ராகுல் காந்தி குற்றச்சாட்டு!.
    அரசியல்

    பாஜகவும் தேர்தல் ஆணையமும் கூட்டாக சதி செய்கின்றன!. சட்டத்தையே மாற்றிவிட்டார் மோடி!. ராகுல் காந்தி குற்றச்சாட்டு!.

    Editor web3By Editor web3December 14, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    rahul
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    தேர்தல் ஆணையத்தின் மீது எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாதபடி, பிரதமர் மோடி சட்டத்தை மாற்றிவிட்டதாகவும், பாஜகவும் தேர்தல் ஆணையமும் கூட்டாக சதி செய்வதாகவும் ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.

    தேர்தல் ஆணையம் ஒருதலைப்பட்சமாக நடந்து கொள்வதாகவும், நமது அரசியலமைப்பை அழிக்கும் இந்த முயற்சிகளுக்கு எதிராக காங்கிரஸ் கட்சி சார்பில் டெல்லியின் ராம்லீலா மைதானத்தில் ‘வோட் சோர் காடி சோட்’ என்ற பிரமாண்ட பேரணி நடைபெற்றது. இந்த கூட்டத்தில், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுனா கார்கே, சோனியா காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்ட தலைவர்கள் பலரும் கலந்துகொண்டனர். அப்போது பேசிய ராகுல் காந்தி, தனது கட்சி “சத்தியத்துடன்” நிற்கிறது என்று கூறி, “நரேந்திர மோடி-ஆர்.எஸ்.எஸ் அரசாங்கத்தை” அதிகாரத்தில் இருந்து அகற்றுவதாக சபதம் செய்தார்.

    தேர்தல் ஆணையத்தை கடுமையாக சாடிய ராகுல், தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார், தேர்தல் ஆணையர்கள் சுக்பீர் சிங் சந்து மற்றும் விவேக் ஜோஷி ஆகியோர் பாஜகவுக்காக வேலை செய்வதாக குற்றம் சாட்டினார். “பீகார் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி அமோக வெற்றிபெற்றது. ஆனால் அதற்கு முன்னதாக, தேர்தல் சமயத்தில் அங்குள்ள 75 லட்சம் பெண்களின் வங்கிக்கணக்குகளில் தலா ரூ. 10 ஆயிரம் அனுப்பப்பட்டது ஏன்? என்று கேள்வி எழுப்பிய ராகுல் காந்தி, தொடர்ந்து அவர்கள் தேர்தல்களில் வாக்கு திருட்டில் ஈடுபடுகிறார்கள் என்று குற்றம்சாட்டினார்.

    தேர்தலின் போது பாஜக ரூ.10,000 பரிமாற்றம் செய்ததாகவும், ஆனால் தேர்தல் குழு அவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் ராகுல் மேலும் குற்றம் சாட்டினார். “உண்மைக்கும் பொய்க்கும் இடையிலான இந்த போராட்டத்தில், தேர்தல் ஆணையம் பாஜக அரசாங்கத்துடன் இணைந்து செயல்படுகிறது,” என்று அவர் கூறினார். மோடி தேர்தல் ஆணையத்திற்கு விதிவிலக்கு அளிக்க ஒரு புதிய சட்டத்தைக் கொண்டு வந்தார்; நாங்கள் இந்தச் சட்டத்தை பின்னோக்கி மாற்றி தேர்தல் ஆணையர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்போம்” என்று ராகுல் மேலும் கூறினார்.

    இதற்கு நேரம் ஆகலாம், ஆனால் இறுதியில் உண்மை வெல்லும் என்று கூறிய அவர், “மோடி மற்றும் அமித் ஷாவை தோற்கடிக்க உண்மை மற்றும் அகிம்சையுடன் நாங்கள் செயல்படுவோம்” என்றார்.

    'Vote Chor Gaddi Chhod' rally accuses EC of aiding BJP rahul gandhi
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleவீட்டில் தூக்கிட்டு மலையாள நடிகர் தற்கொலை… கேரள திரையுலகம் அதிர்ச்சி
    Next Article ஈரோட்டில் விஜய் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிக்கு அனுமதி… என்னென்ன நிபந்தனை?
    Editor web3
    • Website

    Related Posts

    இந்தியா – பிரேசில் இடையே வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்து!. பிரதமர் மோடி புகழாரம்!.

    February 21, 2026

    அடுத்த தீவிரவாத தாக்குதல்?. டெல்லி செங்கோட்டையில் குண்டுவெடிப்பு நடத்த திட்டம்!. நாடுமுழுவதும் உஷார் நிலை!

    February 21, 2026

    புதுச்சேரியில் பாஜக – காங்கிரஸ் மோதல்!. பிரதமர் மோடியின் உருவ பொம்மை எரிப்பு!. பெரும் பதற்றம்!

    February 21, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    இளைஞர்களே நோட்!. சென்னையில் ஆப்பிள் புதிய அலுவலகம்!. ஆட்சேர்ப்பு பணிகள் தொடக்கம்!

    மகளிர் டி20!. 3-வது போட்டியில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி தொடரை கைப்பற்றிய இந்தியா!

    காவி சிந்தனையில் எடப்பாடி பழனிசாமி!. செல்வபெருந்தகை கண்டனம்!

    மெகா மூவ்!. திமுக கூட்டணியில் காங்கிரஸிற்கு 28 சீட்கள் உறுதி?.

    இந்தியா – பிரேசில் இடையே வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்து!. பிரதமர் மோடி புகழாரம்!.

    Trending Posts

    இளைஞர்களே நோட்!. சென்னையில் ஆப்பிள் புதிய அலுவலகம்!. ஆட்சேர்ப்பு பணிகள் தொடக்கம்!

    February 21, 2026

    மகளிர் டி20!. 3-வது போட்டியில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி தொடரை கைப்பற்றிய இந்தியா!

    February 21, 2026

    காவி சிந்தனையில் எடப்பாடி பழனிசாமி!. செல்வபெருந்தகை கண்டனம்!

    February 21, 2026

    மெகா மூவ்!. திமுக கூட்டணியில் காங்கிரஸிற்கு 28 சீட்கள் உறுதி?.

    February 21, 2026

    இந்தியா – பிரேசில் இடையே வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்து!. பிரதமர் மோடி புகழாரம்!.

    February 21, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.