Close Menu
    What's Hot

    பிரதமர் நரேந்திர மோடிக்கு காங்கிரஸ் எம்.பி ஜோதிமணி நன்றி – ஏன்?

    அச்சுறுத்தும் வெறிநாய்கள்!. தூய்மைப் பணியாளர் உட்பட 18 பேரை கடித்து குதறியதால் அச்சம்!

    தமிழகமே அதிர்ச்சி!. பட்டப்பகலில் 2 இளைஞர்கள் கொடூரமாக வெட்டிக்கொலை!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»LIFESTYLE»ஆண் துணை இல்லாத பெண்களுக்காக… ‘வாடகை கணவர்’… எங்கே தெரியுமா?
    LIFESTYLE

    ஆண் துணை இல்லாத பெண்களுக்காக… ‘வாடகை கணவர்’… எங்கே தெரியுமா?

    Editor TN TalksBy Editor TN TalksDecember 20, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    rent husband
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    சில பகுதிகளில் வாடகை மனைவிகள் திட்டம் சில ஆண்டுகள் முன்பு வரை இருந்திருக்கின்றன. ஆனால், ஆண்கள் வாடகை கணவர்களாக செல்லும் வழக்கம் இப்போது அதிகரித்து வருகிறது. அது எங்கே தெரியுமா?

    தாய்லாந்து போன்ற நாடுகளில் சுற்றுலா பயணிகளை கவர வாடகை மனைவிகள் என்கிற பெயரில் பெண்கள் தற்காலிக மனைவிகளாக செல்லும் வழக்கம் உள்ளது. இந்தியாவில் கூட சில பகுதிகளில் வாடகை மனைவிகள் திட்டம் சில ஆண்டுகள் முன்பு வரை இருந்திருக்கின்றன. ஆனால், ஆண்கள் வாடகை கணவர்களாக செல்லும் வழக்கம் இப்போது அதிகரித்து வருகிறது. அது எங்கே தெரியுமா?

    ஐரோப்பாவில் உள்ள சிறிய நாடான ‘லாட்வியா’ என்கிற நாட்டில் தான் இந்த வழக்கம் தற்போது அதிகரித்து வருகிறது. லாட்வியா நாட்டில் ஆண்களுக்கு ஏற்பட்டுள்ள பற்றாக்குறை தான் இப்படியான வழக்கம் உருவாக காரணம் எனச் சொல்லப்படுகிறது. உலக அளவில் ஆண்கள் அதிகமாக இருந்தாலும், சில நாடுகளில் ஆண்–பெண் விகிதாசாரத்தில் பெரிய அளவு மாறுபாடுகள் இருக்கின்றன. வட இந்தியாவில் ஆண்–பெண் விகிதாசாரத்தில் மாறுபாடுகள் இருப்பதால் அங்கே திருமணத்திற்கு பெண்கள் கிடைப்பது ஆண்கள் சிரமப்பட்டு வருகின்றனர்.

    ஆனால் இதற்கு நேர்மாறாக லாட்வியா நாட்டில் பெண்கள் எண்ணிக்கை அதிகமாகவும் ஆண்கள் எண்ணிக்கை குறைவாகவும் உள்ளது. எந்த அளவுக்கு தெரியுமா? ஆண்களை விட பெண்களின் எண்ணிக்கை சுமார் 15.5% அதிகமாக உள்ளனர். இது ஐரோப்பிய ஒன்றியத்தில் உள்ள சராசரி இடைவெளியை விட மூன்று மடங்கு அதிகம். மேலும் அங்கே 65 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்களில், ஆண்களை விட இரண்டு மடங்கு பெண்கள் இருப்பதாக கூறப்படுகிறது.

    இந்த காரணங்களால் லாட்வியன் பெண்கள் ஆண் துணை இல்லாமல் சிரமப்படுகின்றனர். இதில் இளம் பெண்கள் ஆண் துணை தேடி வெளிநாடுகளுக்கு செல்கின்றனர். இதையடுத்தே லாட்வியாவில் ‘ஒரு மணி நேர வாடகை கணவர்கள்’ என்கிற திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. தனியார் ஏஜென்சிகள் இந்த திட்டத்தின் மூலம் ஆண்கள் வாடகைக்கு விடப்படுகின்றனர். இதற்காக ஆண்களுக்கு மணிக்கு இவ்வளவு கட்டணம் என நிர்ணயிக்கப்படுகிறது.

    ஆனால், இந்த ‘வாடகை கணவர்கள்’ திட்டம் காதல் உறவுகளுக்கு என நீங்கள் நினைத்தால் அது தவறு. ஆண்கள் பற்றாக்குறையால் லாட்வியாவில் அன்றாட வீட்டு தேவைகளை பூர்த்தி செய்வதில் சிரமப்படுகின்றனர். குறிப்பாக பிளம்பிங், வயரிங், எலெக்ட்ரிக்கல் போன்ற வேலைகளை பெண்கள் செய்ய முடியாத சூழல் இருக்கிறது.

    இதையடுத்தே ‘வாடகை கணவர்கள்’ திட்டம் மூலம் இங்குள்ள பெண்கள் பிளம்பிங், வயரிங் போன்ற வீட்டு வேலைகளுக்காக ஆண்களை மணிக்கணக்கில் வாடகைக்கு எடுத்து பயன்படுத்தி வருகின்றனர். இந்த போக்கு தற்போது லாட்வியாவில் அதிகரித்து வருவதாகவும் செய்திகள் வெளியாகின்றன. வாடகை கணவர் திட்டம் என்பது லாட்வியாவில் மட்டுமல்ல, இங்கிலாந்து போன்ற சில நாடுகளிலும் வழக்கத்தில் இருந்து வருகிறது. இதற்காக ஏஜென்சிகளும் உள்ளன. ஆன்லைன் மூலமாகவும் வாடகை கணவர்கள் செயல்பட்டு வருகின்றனர்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleவிஜய் அப்டேட் ஆகணும்!. மாணவர்கள் Dropout விவகாரத்தில் அன்பில் மகேஷ் பதிலடி!
    Next Article “மலையாள கவுண்டமணி” என்று அழைக்கப்படும் பிரபல நடிகர் காலமானார்!. ரசிகர்கள் இரங்கல்!
    Editor TN Talks

    Related Posts

    ப்ளூடூத் இயர்பட்ஸ் பயன்படுத்துவதால் புற்றுநோய் ஏற்படுமா?. எச்சரிக்கும் மருத்துவ நிபுணர்கள்!

    May 16, 2026

    சுட்டெரிக்கும் வெயில்!. தாகத்தை தணிக்க ஐஸ் வாட்டர் குடிக்கிறீர்களா?.  உஷார்!

    April 29, 2026

    காலையில் எழுந்ததும் போன் பார்க்கிறீர்களா?. மூளைக்கு வரப்போகும் ஆபத்து!. நிபுணர்கள் வார்னிங்!

    April 26, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    பிரதமர் நரேந்திர மோடிக்கு காங்கிரஸ் எம்.பி ஜோதிமணி நன்றி – ஏன்?

    அச்சுறுத்தும் வெறிநாய்கள்!. தூய்மைப் பணியாளர் உட்பட 18 பேரை கடித்து குதறியதால் அச்சம்!

    தமிழகமே அதிர்ச்சி!. பட்டப்பகலில் 2 இளைஞர்கள் கொடூரமாக வெட்டிக்கொலை!

    முள்ளிவாய்க்கால் பேரவலத்துக்கு இவர்கள்தான் காரணம் –வழக்கறிஞர் கே.எஸ்.ராதாகிருஷ்ணன்

    திருச்செந்தூரில் அதிர்ச்சி!. திடீரென 80 அடி தூரம் உள்வாங்கிய கடல்!. பக்தர்கள் அச்சம்!

    Trending Posts

     புதுச்சேரி : இருசக்கர வாகனத்தில் மோதிய அரசுப் பேருந்து..! ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் பலி..!

    May 17, 2026

    அச்சுறுத்தும் வெறிநாய்கள்!. தூய்மைப் பணியாளர் உட்பட 18 பேரை கடித்து குதறியதால் அச்சம்!

    May 17, 2026

    தவெக அமைச்சரவையில் காங்கிரஸுக்கு 2 இடங்கள்?. வெளியான தகவல்!

    May 17, 2026

    பிரதமர் நரேந்திர மோடிக்கு காங்கிரஸ் எம்.பி ஜோதிமணி நன்றி – ஏன்?

    May 17, 2026

    தமிழகமே அதிர்ச்சி!. பட்டப்பகலில் 2 இளைஞர்கள் கொடூரமாக வெட்டிக்கொலை!

    May 17, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.