Close Menu
    What's Hot

    இந்தியாவுக்கு வந்த கப்பல் சீனா திரும்பியது ஏன்?. மத்திய அரசு விளக்கம்!

    இந்தியாவுக்கு கூடுதல் கச்சா எண்ணெய் விநியோகிக்க தயார்!. ரஷ்யா உறுதி!

    சுங்கச்சாவடிகளில் இனி ‘நோ கேஷ்’!. ஏப்ரல் 10 முதல் அதிரடி மாற்றம்!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»இந்தியா»VB-G RAM G மசோதா ஒரு “கருப்பு சட்டம்”!. ஏழைகள் மற்றும் விவசாயிகளின் உரிமைகள் மீதான தாக்குதல்!. சோனியா காந்தி கண்டனம்!.
    இந்தியா

    VB-G RAM G மசோதா ஒரு “கருப்பு சட்டம்”!. ஏழைகள் மற்றும் விவசாயிகளின் உரிமைகள் மீதான தாக்குதல்!. சோனியா காந்தி கண்டனம்!.

    Editor web3By Editor web3December 20, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    sonia gandhi
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    VB-G RAM G மசோதாவை ஒரு “கருப்பு சட்டம்” என்றும் MNREGA-வை பலவீனப்படுத்துவது ஏழைகள் மற்றும் விவசாயிகளின் உரிமைகள் மீதான தாக்குதல் என்றும் சோனியா காந்தி விமர்சித்துள்ளார்.

    இதுதொடர்பாக, வீடியோ வெளியிட்டுள்ள சோனியா காந்தி, இந்தச் சட்டம் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தின் (MNREGA) அடிப்படைக் நோக்கத்தையே பாதிக்கும் என்று குறிப்பிட்டுள்ளார். மேலும், புதிய VB-G RAM G மசோதையின் கீழ், யாருக்கு எவ்வளவு வேலை வழங்கப்பட வேண்டும், அது எங்கு வழங்கப்பட வேண்டும் என்பதனை முழுமையாக மத்திய அரசே தீர்மானிக்கும். இது தரைமட்ட யதார்த்தங்களைப் புரிந்துகொள்ளாத, அவற்றுடன் தொடர்பற்ற அணுகுமுறையாகும் என அவர் விமர்சித்தார்.

    கடந்த 20 ஆண்டுகளாக (MNREGA) திட்டம் கிராமப்புறங்களில் வேலைவாய்ப்பை உறுதி செய்து வந்த நிலையில், இந்த நடவடிக்கை ஏழைகள் மற்றும் விவசாயிகளின் சட்டபூர்வ உரிமைகள்மீதான தாக்குதலாகும் என்று சோனியா காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.

    மசோதாவில் இருந்து மகாத்மா காந்தியின் பெயரை நீக்கியதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த சோனியா, இது ஒரு குறியீட்டுச் செயல் மட்டுமல்ல, நெறிமுறையிலும் தவறான நடவடிக்கை என அவர் கூறினார். மகாத்மா காந்தியின் கிராம சுயராஜ்யக் கனவை நனவாக்குவதற்கான ஒரு திட்டமாகவே மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டம் (MNREGA) இருந்தது என்றும், இந்த நீக்கம் கிராமங்கள் மற்றும் ஏழைகளின் நலன்களுக்குப் பாதகமானது என்றும் கூறினார்.

    சோனியா காந்தியின் கருத்துப்படி, புதிய மசோதா கிராமப்புறங்களில் உள்ள வேலைவாய்ப்பு உத்தரவாதத்தை பலவீனப்படுத்தக்கூடும். பழைய MNREGA சட்டத்தின் கீழ், கிராமப்புற தொழிலாளர்களுக்கு ஆண்டுக்கு 100–125 நாட்கள் வரை வேலை பெறும் உரிமை இருந்தது.

    புதிய மாற்றங்கள் இந்த உரிமையை பாதிக்கும் என்பதுடன், ஏழைகளின் வாழ்வாதாரத்திற்கே அச்சுறுத்தலாக அமையக்கூடும் என்றும் அவர் எச்சரித்தார். எதிர்க்கட்சிகளுடன் எந்த ஆலோசனையும், ஒப்புதலும் பெறாமல் அரசாங்கம் மசோதாவில் மாற்றங்களைச் செய்துள்ளதாக குற்றம்சாட்டிய அவர், இது ஒருதலைப்பட்சமாக எடுக்கப்பட்ட முடிவாகும்; மேலும் கிராமப்புறங்களில் உள்ள உண்மையான தேவைகள் மற்றும் பிரச்சினைகளை முற்றிலும் புறக்கணித்த நடவடிக்கையாகும் என்றும்  தெரிவித்தார்.

    இந்த கடுமையான (அடக்குமுறையான) சட்டத்திற்கு எதிராக காங்கிரஸ் கட்சியின் தொண்டர்களும் தலைவர்களும் முழு பலத்துடன் போராடுவார்கள் என அவர் தெரிவித்தார்.  MNREGA  உரிமைகளை பாதுகாக்க கிராமவாசிகளும் அனைத்து குடிமக்களும் தங்களின் குரலை உயர்த்த வேண்டும் எனவும் அவர் அழைப்பு விடுத்தார்.

    இது ஒரு கட்சி சார்ந்த பிரச்சினை மட்டுமல்ல; நாட்டின் ஏழைகள் மற்றும் விவசாயிகளின் உரிமை தொடர்பான விஷயம் எனவும் சோனியா காந்தி கூறினார்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleபுதிய வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லையா.? – நாளையும் சிறப்பு முகாம் உண்டு
    Next Article மேற்கு வங்கத்தில் பாஜக கூட்டணியின் வெற்றிக்கான கதவுகள் திறக்கப்பட்டுள்ளன- பிரதமர் மோடி
    Editor web3
    • Website

    Related Posts

    இந்தியாவுக்கு வந்த கப்பல் சீனா திரும்பியது ஏன்?. மத்திய அரசு விளக்கம்!

    April 4, 2026

    இந்தியாவுக்கு கூடுதல் கச்சா எண்ணெய் விநியோகிக்க தயார்!. ரஷ்யா உறுதி!

    April 4, 2026

    சுங்கச்சாவடிகளில் இனி ‘நோ கேஷ்’!. ஏப்ரல் 10 முதல் அதிரடி மாற்றம்!

    April 4, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    இந்தியாவுக்கு வந்த கப்பல் சீனா திரும்பியது ஏன்?. மத்திய அரசு விளக்கம்!

    இந்தியாவுக்கு கூடுதல் கச்சா எண்ணெய் விநியோகிக்க தயார்!. ரஷ்யா உறுதி!

    சுங்கச்சாவடிகளில் இனி ‘நோ கேஷ்’!. ஏப்ரல் 10 முதல் அதிரடி மாற்றம்!

    மோடி முதல் யோகி வரை!. தமிழகம் வரும் தலைவர்கள்!. அண்ணாமலைக்கும் வாய்ப்பு!.

    ஈரான் போர் எதிரொலி!. இந்தியாவில் தாறுமாறாக உயரும் குடிநீர் பாட்டில் விலை!

    Trending Posts

    இந்தியாவுக்கு வந்த கப்பல் சீனா திரும்பியது ஏன்?. மத்திய அரசு விளக்கம்!

    April 4, 2026

    இந்தியாவுக்கு கூடுதல் கச்சா எண்ணெய் விநியோகிக்க தயார்!. ரஷ்யா உறுதி!

    April 4, 2026

    சுங்கச்சாவடிகளில் இனி ‘நோ கேஷ்’!. ஏப்ரல் 10 முதல் அதிரடி மாற்றம்!

    April 4, 2026

    மோடி முதல் யோகி வரை!. தமிழகம் வரும் தலைவர்கள்!. அண்ணாமலைக்கும் வாய்ப்பு!.

    April 4, 2026

    ஈரான் போர் எதிரொலி!. இந்தியாவில் தாறுமாறாக உயரும் குடிநீர் பாட்டில் விலை!

    April 4, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.