Close Menu
    What's Hot

    ‘பராசக்தி’ திருடப்பட்ட கதை? படம் வெளியாவதில் சிக்கல்!

    பாஜகவுக்கு ‘செக்’ வைக்கும் பழனிசாமி..! டென்ஷனில் சூடாகும் டெல்லி..!!

    தேர்தல் அறிக்கை தயாரிக்க A.I. தொழில்நுட்பம்! திமுக புது வியூகம்

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»Featured»‘பராசக்தி’ திருடப்பட்ட கதை? படம் வெளியாவதில் சிக்கல்!
    Featured

    ‘பராசக்தி’ திருடப்பட்ட கதை? படம் வெளியாவதில் சிக்கல்!

    Editor TN TalksBy Editor TN TalksDecember 27, 2025Updated:December 27, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    WhatsApp Image 2025 12 26 at 6.18.15 PM
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    தமிழ்நாட்டில் நடந்த இந்தி திணிப்பு எதிர்ப்பு போராட்டத்தை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் ‘பராசக்தி’ படக்கதை திருடப்பட்டது என ஐகோர்ட்டில் வழக்கு தொடுக்கப்பட்டிருப்பது பேசுபொருளாகியுள்ளது.

    டான் பிக்சர்ஸ் ஆகாஷ் பாஸ்கரன் தயாரிப்பில் சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 10-ம் தேதி திரைக்கு வரவிருக்கும் படம் ‘பராசக்தி’.

    இந்தப் படத்தில் ரவிமோகன், அதர்வா, ஸ்ரீலீலா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஜி.வி.பிரகாஷ் படத்துக்கு இசையமைத்துள்ளார். தமிழ்நாட்டில் இந்திமொழி திணிப்பை எதிர்த்து நடத்தப்பட்ட மொழிப்போராட்டத்தை மையப்படுத்தியதான கதையை மையக்கருவாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இப்படத்தை வெளியிட தடை விதிக்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் தற்போது வழக்கு தொடரப்பட்டுள்ளது. தனது ‘செம்மொழி’ என்ற கதையை திருடி உருவாக்கப்பட்டுள்ள இந்த படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும் என உதவி இயக்குனர் ராஜேந்திரன் என்பவர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். மொழிப்போரை மையமாக வைத்து எழுதிய கதைக்கருவை மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியே பாராட்டியுள்ளதாக ராஜேந்திரன் தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

    தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தில் கடந்த 2010 ஆம் ஆண்டு பதிவு செய்திருந்த இந்த கதையை தயாரிப்பாளர் சேலம் தனசேகரனிடம் கொடுத்ததாகவும், அதை நடிகர் சூர்யா இயக்குனர் சுதா கொங்கராவிடம் கொடுத்துள்ளதாக குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார்.

    இவ்வழக்கின் முதற்கட்ட விசாரணையின் முடிவில், “கதை திருட்டு புகார் தொடர்பாக அனைத்து தரப்பினரையும் விசாரித்து ஜனவரி 2ல் அறிக்கை தருமாறு” தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்கத்துக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    “ஏற்கனவே சென்சார் போர்டில் கெடுபிடிகள், தற்போது இந்த பிரச்சனை. இதையடுத்து ‘பராசக்தி’ திரைப்படம் குறிப்பிட்ட நாளில் திரையரங்குகளில் வெளியாகுமா?” என்ற கேள்வி ஒருபுறம் எழுந்துள்ள நிலையில், “இது எல்லாம் படத்திற்கான கடைசி கட்ட புரொமோஷன் வேலைகள்” என ஒரு தரப்பினர் முணுமுணுத்து வருகின்றனர்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleபாஜகவுக்கு ‘செக்’ வைக்கும் பழனிசாமி..! டென்ஷனில் சூடாகும் டெல்லி..!!
    Editor TN Talks

    Related Posts

    பாஜகவுக்கு ‘செக்’ வைக்கும் பழனிசாமி..! டென்ஷனில் சூடாகும் டெல்லி..!!

    December 27, 2025

    தேர்தல் அறிக்கை தயாரிக்க A.I. தொழில்நுட்பம்! திமுக புது வியூகம்

    December 26, 2025

    அதிமுகவில் டிச.31 வரை விருப்ப மனு அளிக்கலாம்! இபிஎஸ் அறிவிப்பு

    December 26, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    ‘பராசக்தி’ திருடப்பட்ட கதை? படம் வெளியாவதில் சிக்கல்!

    பாஜகவுக்கு ‘செக்’ வைக்கும் பழனிசாமி..! டென்ஷனில் சூடாகும் டெல்லி..!!

    தேர்தல் அறிக்கை தயாரிக்க A.I. தொழில்நுட்பம்! திமுக புது வியூகம்

    உத்தர பிரதேச அரசு பள்ளிகளில் செய்தித் தாள்கள் வாசிப்பது கட்டாயம்! தினமும் 10 நிமிடம் ஒதுக்கீடு

    தட்கல் டிக்கெட்: மேலும் 5 ரயில்களில் ஓடிபி கட்டாயம்!

    Trending Posts

    பாஜகவுக்கு ‘செக்’ வைக்கும் பழனிசாமி..! டென்ஷனில் சூடாகும் டெல்லி..!!

    December 27, 2025

    தேர்தல் அறிக்கை தயாரிக்க A.I. தொழில்நுட்பம்! திமுக புது வியூகம்

    December 26, 2025

    உத்தர பிரதேச அரசு பள்ளிகளில் செய்தித் தாள்கள் வாசிப்பது கட்டாயம்! தினமும் 10 நிமிடம் ஒதுக்கீடு

    December 26, 2025

    தட்கல் டிக்கெட்: மேலும் 5 ரயில்களில் ஓடிபி கட்டாயம்!

    December 26, 2025

    அதிமுகவில் டிச.31 வரை விருப்ப மனு அளிக்கலாம்! இபிஎஸ் அறிவிப்பு

    December 26, 2025
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2025 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.