Close Menu
    What's Hot

    திருப்பூர் : பேஸ்புக் மூலம் ஆபாச வீடியோ அனுப்பி பணம் பறித்த கும்பல்..! மிரட்டலில் பயந்து தற்கொலை செய்து கொண்ட பீகார் இளைஞர்..!

    116 வயதில் 3,550 படிக்கட்டுகள் ஏறிய மூதாட்டி..! ஏழுமலையானை தரிசனம் செய்த காட்சிகள் வைரல்..!

    ஃபிஃபா அப்டேட் : பராகுவேவை பந்தாடிய பிரான்ஸ்..! கடைசி நேரத்தில் கோல் அடித்து வெற்றி..!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»இந்தியா»சத்தீஸ்கரில் நிலக்கரி சுரங்கத்துக்கு எதிரான போராட்டத்தில் வன்முறை: போலீஸார் காயம்; வாகனங்கள் எரிப்பு
    இந்தியா

    சத்தீஸ்கரில் நிலக்கரி சுரங்கத்துக்கு எதிரான போராட்டத்தில் வன்முறை: போலீஸார் காயம்; வாகனங்கள் எரிப்பு

    Editor TN TalksBy Editor TN TalksDecember 28, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    chatsigar
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    சத்தீஸ்கரின் ராய்கர் மாவட்டத்தின் தாம்னார் பகுதியில் நிலக்கரி சுரங்கத் திட்டத்துக்கு எதிராக நடந்து வரும் போராட்டம் வன்முறையாக மாறியது. இதில் போலீஸார் பலர் காயமடைந்தனர் மற்றும் வாகனங்கள் தீக்கிரையாக்கப்பட்டன.

    ஜிண்டால் பவர் லிமிடெட்டின் நிலக்கரி கையாளும் ஆலைக்குள் நேற்று (டிசம்பர் 27) மாலை ஒரு கும்பல் நுழைந்து, ஒரு கன்வேயர் பெல்ட், இரண்டு டிராக்டர்கள் மற்றும் பிற வாகனங்களை எரித்ததுடன், அலுவலக வளாகத்தையும் சேதப்படுத்தியதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்தது.

    இந்த சம்பவத்தின் போது போராட்டக்காரர்கள் கல் வீசி தாக்குதல் நடத்தியதோடு, ஒரு போலீஸ் பேருந்து, ஒரு ஜீப் மற்றும் ஆம்புலன்ஸ் ஆகியவற்றை தீக்கிரையாக்கியதைத் தொடர்ந்து பதற்றம் நிலவியது. மேலும், பல அரசு வாகனங்களும் சேதப்படுத்தப்பட்டன.

    அப்போது சுமார் 300 போராட்டக்காரர்கள் சம்பவ இடத்தில் கூடியதாகவும், அவர்களில் சிலர் சாலையை மறித்து போக்குவரத்துக்கு இடையூறு விளைவித்ததாகவும் கூறப்படுகிறது. தொடர்ந்து அருகிலுள்ள கிராமங்களைச் சேர்ந்த மக்கள் இணைந்ததால் அங்கே சுமார் 1,000 பேர் திரண்டனர். இந்தப் போராட்டம் பிற்பகல் 2.30 மணியளவில் வன்முறையாக மாறியது.

    தாம்னார் பகுதியில் உள்ள (கரே பெல்மா) செக்டார்-1 நிலக்கரித் திட்டத்தின் கீழ் உள்ள 14 பாதிக்கப்பட்ட கிராமங்களைச் சேர்ந்த மக்கள், டிச.8-ம் தேதி தௌரபதாவில் இந்தத் திட்டத்துக்காக நடைபெற்ற கருத்துக்கேட்பு திட்டத்துக்கு எதிராக டிச.12-ம் தேதி முதல் லிப்ரா கிராமத்தில் உள்ள சிஎச்பி சவுக்கில் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதாக மாவட்ட நிர்வாகம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
    இந்த தாக்குதலில் துணைப்பிரிவு காவல் அதிகாரி அனில் விஸ்வகர்மா, தம்னார் காவல் நிலைய பொறுப்பாளர் கம்லா பூசம் மற்றும் ஒரு கான்ஸ்டபிள் ஆகியோர் பலத்த காயமடைந்தனர். மேலும் பெண் போலீஸார் உட்பட பலரும் காயமடைந்தனர்.
    கலெக்டர் மயங்க் சதுர்வேதி செய்தியாளர்களிடம் கூறுகையில், “கடந்த 15 நாட்களாக போராட்டக் களத்தில் கிராம மக்கள் அமைதியாக இருந்தனர். அவர்களுக்குத் தேவையான வசதிகளை மாவட்ட நிர்வாகம் உறுதி செய்தது. சனிக்கிழமை பிற்பகல் 2 முதல் 2.30 மணியளவில், சில சமூக விரோத சக்திகள் போராட்டக்காரர்களைத் தூண்டிவிட்டு வன்முறையை உருவாக்கின” என்றார்.

    இதுகுறித்து பேசிய சத்தீஸ்கர் காங்கிரஸ் தலைவர் தீபக் பைஜ், “இந்த வன்முறை துரதிர்ஷ்டவசமானது. இது மாநில அரசின் பிடிவாதத்தின் காரணமாக ஏற்பட்டது. இந்த நிலக்கரிச் சுரங்கத்துக்காக கிராமவாசிகள் மற்றும் பழங்குடியினரை அவர்களின் காடுகள் மற்றும் நிலங்களிலிருந்து வலுக்கட்டாயமாக அரசு வெளியேற்றி வருகிறது” என குற்றம் சாட்டினார்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleஜம்மு காஷ்மீரில் 30-35 பாக்., பயங்கரவாதிகள் பதுங்கல்!. உளவுத்துறை எச்சரிக்கை!.
    Next Article சொத்து வரி பெயர் மாற்ற கட்டணம்.. அதிரடியாக அறிவித்த தமிழக அரசு! நகராட்சி, மாநகராட்சிகளில் எவ்வளவு?
    Editor TN Talks

    Related Posts

    116 வயதில் 3,550 படிக்கட்டுகள் ஏறிய மூதாட்டி..! ஏழுமலையானை தரிசனம் செய்த காட்சிகள் வைரல்..!

    July 5, 2026

    பிரான்ஸில் அமைச்சர் நிர்மலா சீதாராமன்;  ITER திட்டத்தை பார்வையிட்டார்

    July 4, 2026

    பிரதமர் மோடிக்கு ‘மரண மிரட்டல்’ ; ஆஸ்திரேலியா போலீஸ் விசாரணை

    July 4, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    திருப்பூர் : பேஸ்புக் மூலம் ஆபாச வீடியோ அனுப்பி பணம் பறித்த கும்பல்..! மிரட்டலில் பயந்து தற்கொலை செய்து கொண்ட பீகார் இளைஞர்..!

    116 வயதில் 3,550 படிக்கட்டுகள் ஏறிய மூதாட்டி..! ஏழுமலையானை தரிசனம் செய்த காட்சிகள் வைரல்..!

    ஃபிஃபா அப்டேட் : பராகுவேவை பந்தாடிய பிரான்ஸ்..! கடைசி நேரத்தில் கோல் அடித்து வெற்றி..!

    பிரான்ஸில் அமைச்சர் நிர்மலா சீதாராமன்;  ITER திட்டத்தை பார்வையிட்டார்

    2-வது டி 20; இங்கிலாந்துக்கு 191 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது இந்தியா

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.