Close Menu
    What's Hot

    இந்தியாவில் அதிகம் விற்கப்படும் ஐ-போன் எது தெரியுமா?

    2026 டி20 உலகக் கோப்பை!. இங்கிலாந்து அணி அறிவிப்பு!. அதிரடி வீரர்களுக்கு இடமில்லை!.

    கோவை ஆட்சியர் அலுவலகத்திற்கு 23-வது முறை வெடிகுண்டு மிரட்டல்..,

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»உலகம்»அதிபர் புடின் வீடு மீது ட்ரோன்கள் தாக்குதல்; ரஷ்யாவின் குற்றச்சாட்டு பொய் என்கிறது உக்ரைன்
    உலகம்

    அதிபர் புடின் வீடு மீது ட்ரோன்கள் தாக்குதல்; ரஷ்யாவின் குற்றச்சாட்டு பொய் என்கிறது உக்ரைன்

    Editor TN TalksBy Editor TN TalksDecember 30, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    puthin
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    புடின் வீட்டை குறிவைத்துத் தாக்குதல் நடத்தவில்லை. ரஷ்யா பொய் சொல்கிறது என உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.

    ரஷ்யாவின் வடமேற்கு நோவ்கோரோட் பகுதியில் உள்ள ரஷ்ய அதிபர் புடினின் வீட்டை உக்ரைன் தாக்க முயன்றதாக ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் கூறி இருந்தார். அவர், ”91 ட்ரோன்கள் மூலம் புடினின் அரசு இல்லத்தை உக்ரைன் தாக்கியது. இந்தத் தாக்குதல் ரஷ்யாவின் அமைதிப் பேச்சுவார்த்தை நிலைப்பாட்டை பாதிக்கும்’ என்றார்.

    புடினின் வீட்டை குறி வைத்த அனைத்து ட்ரோன்களும் சுட்டு வீழ்த்தப்பட்டது. யாருக்கும் காயம் ஏற்படவில்லை என ரஷ்ய ராணுவம் தகவல் தெரிவித்துள்ளது. இதனை உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி மறுத்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

    ரஷ்யா மீண்டும் தனது வேலையைத் தொடங்கியுள்ளது. அதிபர் டிரம்பின் குழுவுடனான நமது கூட்டு ராஜதந்திர முயற்சிகளின் அனைத்து சாதனைகளையும் சீர்குலைக்க, அது ஆபத்தான குற்றச்சாட்டை சுமத்துக்கிறது. அமைதியை உருவாக்க நாங்கள் தொடர்ந்து ஒன்றாகச் செயல்பட்டு வருகிறோம். புடினின் வீடு மீதான தாக்குதல் ஒரு புனைகதை. அவர்கள் பொய் சொல்கின்றனர்.

    எங்கள் மீது அவர்கள் நடத்தும் தாக்குதல்களை நியாயப்படுத்தவும், அத்துடன் போரை முடிவுக்குக் கொண்டுவரத் தேவையான நடவடிக்கைகளை எடுக்க ரஷ்யா மறுப்பதை நியாயப்படுத்தவும் முயற்சிக்கிறது. இது ரஷ்யாவின் வழக்கமான பொய்கள். மேலும், ரஷ்யர்கள் கடந்த காலங்களில் எங்களது அமைச்சரவை கட்டடத்தை ஏற்கனவே குறிவைத்துள்ளனர்.

    உக்ரைன், ராஜதந்திரத்தை சீர்குலைக்கும் நடவடிக்கைகளை எடுப்பதில்லை. மாறாக, ரஷ்யா எப்போதும் அத்தகைய நடவடிக்கைகளையே எடுக்கிறது. இது எங்களுக்கிடையேயான பல வேறுபாடுகளில் ஒன்றாகும். இந்த நேரத்தில் உலக நாடுகள் மவுனமாக இருக்கக்கூடாது என்பது மிகவும் முக்கியம். நிலையான அமைதியை உருவாக்க மேற்கொள்ளப்படும் பணிகளை ரஷ்யா சீர்குலைப்பதை நாம் அனுமதிக்க முடியாது. இவ்வாறு ஜெலன்ஸ்கி கூறியுள்ளார்.

    இது நல்லதல்ல!

    இது குறித்து அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியதாவது: தனது வீட்டை உக்ரைன் ட்ரோன்கள் தாக்குதல் நடத்த குறிவைத்தது என்று ரஷ்ய அதிபர் புடின் என்னிடம் கூறினார். இது நல்லதல்ல. நான் மிகவும் கோபமாக இருக்கிறேன். இவ்வாறு டிரம்ப் கூறினார்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleபெருமாள் கோயில்களில் சொர்க்க வாசல் திறப்பு கோலாகலம்
    Next Article கிரிக்கெட்டின் பொக்கிஷம்!. ஏலத்திற்கு வரும் சர் டான் பிராட்மேனின் வரலாற்று சிறப்புமிக்க பேக்கி கிரீன் தொப்பி!.
    Editor TN Talks

    Related Posts

    புதின் வீட்டில் ட்ரோன் தாக்குதல் எதிரொலி!. பிரதமர் மோடி கவலை!

    December 30, 2025

    கலிதா ஜியா மறைவு: வங்காளதேசத்தில் 3 நாட்கள் துக்கம் அனுசரிப்பு

    December 30, 2025

    புதின் வீடு மீது ட்ரோன் தாக்குதல்? – ட்ரம்ப் கோபம்; ஜெலன்ஸ்கி விளக்கம்!

    December 30, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    இந்தியாவில் அதிகம் விற்கப்படும் ஐ-போன் எது தெரியுமா?

    2026 டி20 உலகக் கோப்பை!. இங்கிலாந்து அணி அறிவிப்பு!. அதிரடி வீரர்களுக்கு இடமில்லை!.

    கோவை ஆட்சியர் அலுவலகத்திற்கு 23-வது முறை வெடிகுண்டு மிரட்டல்..,

    இதற்காக காவல்துறையினரையும் தண்டிக்க வேண்டும்! ராமதாஸ் சொல்கிறார்

    புதின் வீட்டில் ட்ரோன் தாக்குதல் எதிரொலி!. பிரதமர் மோடி கவலை!

    Trending Posts

    சூர்யகுமார் யாதவ் எனக்கு மெசேஜ் அனுப்பி கொண்டே இருப்பார்.. பற்ற வைத்த பாலிவுட் நடிகை.. யார் இவர்?

    December 30, 2025

    இதற்காக காவல்துறையினரையும் தண்டிக்க வேண்டும்! ராமதாஸ் சொல்கிறார்

    December 30, 2025

    புதின் வீட்டில் ட்ரோன் தாக்குதல் எதிரொலி!. பிரதமர் மோடி கவலை!

    December 30, 2025

    ஷாக்! சின்னத்திரை நடிகை நந்தினி தற்கொலை

    December 30, 2025

    “நெதன்யாகு இல்லையென்றால், இஸ்ரேல் வரைபடத்தில் கூட இருக்காது”!. டிரம்ப் புகழாரம்!

    December 30, 2025
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2025 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.