Close Menu
    What's Hot

    தமிழருவி மணியன் மனைவி மரணம்: வைகோ நேரில் அஞ்சலி

    உள்நோக்கத்துடன் குண்டர் சட்டம்! காவல்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க ஐகோர்ட் உத்தரவு

    பேருந்துகளின் தகுதியை ஆய்வு செய்ய ஆணையம்! மத்திய-மாநில அரசுகளின் பதிலை கோரியது ஐகோர்ட்

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»Featured»கலிதா ஜியா மறைவு: வங்காளதேசத்தில் 3 நாட்கள் துக்கம் அனுசரிப்பு
    Featured

    கலிதா ஜியா மறைவு: வங்காளதேசத்தில் 3 நாட்கள் துக்கம் அனுசரிப்பு

    Editor TN TalksBy Editor TN TalksDecember 30, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    khalida zia
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    வங்காளதேச முன்னாள் பிரதமர் கலிதா ஜியா மறைவை அடுத்து, 3 நாட்கள் அரசு துக்கம் அனுசரிக்கப்படும் என்று அந்நாட்டின் இடைக்கால அரசாங்கத்தின் தலைமை ஆலோசகர் முகமது யூனுஸ் தெரிவித்துள்ளார்.

    National Mourning

    கலிதா ஜியாவின் மறைவை அடுத்து முகமது யூனுஸ், தொலைக்காட்சியில் நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். அப்போது அவர், ‘‘இன்று நாட்டுக்கு மிகவும் துயரமான நாள். நாட்டின் ஜனநாயக அரசியலின் முன்னணி ஆளுமையாக விளங்கிய கலிதா ஜியா இன்று நம்மிடம் இல்லை. ஜனநாயகம், பல கட்சி அரசியல் கலாச்சாரம், மக்களின் உரிமைகளை நிலைநாட்டுவதற்கான போராட்டம் ஆகியவற்றில் அவரது அசாதாரண பங்கு வரலாற்றில் நிலைத்திருக்கும்.

    தேசத்தின் இந்த கடினமான காலத்தில் நாம் அனைவரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும். இந்த துக்க தருணத்தைப் பயன்படுத்தி யாரும் ஸ்திரமற்ற நிலையை உருவாக்கவோ, நாசகாரச் செயல்களில் ஈடுபடவோ அனுமதிக்காதபடி அனைவரும் விழிப்புடன் இருக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

    இந்த நேரத்தில் நாம் அனைவரும் பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும். 3 நாட்கள் அரசு துக்கம் அனுசரிக்கப்படும். அவரது இறுதிச் சடங்கு நடைபெறும் நாளைய தினம் (டிச. 31) பொது விடுமுறையாக அறிவிக்கிறேன்’’ என தெரிவித்துள்ளார்.

    கலிதா ஜியா மறைவு: கலிதா ஜியா இன்று (டிச. 30) அதிகாலை காலமானார். நீண்டகாலமாக உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டு டாக்காவிலுள்ள மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்று வந்த அவர், இன்று காலை 6 மணியளவில் உயிரிழந்ததாக அவரது கட்சி அதிகாரபூர்வமாக அறிவித்தது.

    கல்லீரல் பாதிப்பு, நீரிழிவு மற்றும் இதயம் தொடர்பான பல்வேறு உடல்நலப் பிரச்சனைகளால் கலிதா ஜியா அவதிப்பட்டு வந்தார். கடந்த நவம்பர் 23-ம் தேதி நுரையீரல் தொற்று காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. எனினும் அவரது உடல்நிலை சீராகவில்லை. கடந்த டிசம்பர் 11-ம் தேதி முதல் அவர் தீவிர சிகிச்சை பிரிவில் செயற்கை சுவாசக் கருவி உதவியுடன் சிகிச்சை பெற்று வந்தார். வெளிநாட்டு மருத்துவர்கள் அடங்கிய குழுவினர் அவருக்குத் தீவிர சிகிச்சை அளித்து வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று அவர் உயிரிழந்தார்.

    வங்கதேசத்தின் முன்னாள் அதிபர் ஜியாவுர் ரஹ்மானின் மனைவியான கலிதா ஜியா, 1981-ல் தனது கணவர் படுகொலை செய்யப்பட்ட பிறகு அரசியலில் நுழைந்தார். 1984-ம் ஆண்டு முதல் பிஎன்பி கட்சியின் தலைவராகப் பொறுப்பு வகித்த அவர், 1991 முதல் 1996 வரையிலும், மீண்டும் 2001 முதல் 2006 வரையிலும் வங்கதேசத்தின் பிரதமராக பதவி வகித்தார்.

    17 ஆண்டுகளாக லண்டனில் வாழ்ந்து வந்த அவரது மூத்த மகன் தாரிக் ரஹ்மான், சில நாட்களுக்கு முன்புதான் வங்கதேசம் திரும்பியிருந்தார். வங்கதேச அரசியலில் ஷேக் ஹசீனாவுக்குப் பெரும் சவாலாகத் திகழ்ந்த கலிதா ஜியாவின் மறைவு அந்நாட்டின் அரசியல் வட்டாரத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleதிமுக தேர்தல் அறிக்கை தயாரிப்பு!. கருத்து கேட்க பிரத்யேக செயலி!. நாளை தொடங்கி வைக்கிறார் முதல்வர்!.
    Next Article ஷாக்! சின்னத்திரை நடிகை நந்தினி தற்கொலை
    Editor TN Talks

    Related Posts

    உள்நோக்கத்துடன் குண்டர் சட்டம்! காவல்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க ஐகோர்ட் உத்தரவு

    December 30, 2025

    காசோலை மோசடி வழக்கு! மதிமுக எம்எல்ஏக்கு 2 ஆண்டு ஜெயில்!

    December 30, 2025

    அணுகுண்டு தாக்குதல் பீதி! அலறியடித்து புதினை போனில் அழைத்த டிரம்ப்!

    December 30, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    தமிழருவி மணியன் மனைவி மரணம்: வைகோ நேரில் அஞ்சலி

    உள்நோக்கத்துடன் குண்டர் சட்டம்! காவல்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க ஐகோர்ட் உத்தரவு

    பேருந்துகளின் தகுதியை ஆய்வு செய்ய ஆணையம்! மத்திய-மாநில அரசுகளின் பதிலை கோரியது ஐகோர்ட்

    கூட்டாட்சி தத்துவத்திற்கு பெரும் பின்னடைவு! செல்வப்பெருந்தகை கண்டனம்

    காசோலை மோசடி வழக்கு! மதிமுக எம்எல்ஏக்கு 2 ஆண்டு ஜெயில்!

    Trending Posts

    சூர்யகுமார் யாதவ் எனக்கு மெசேஜ் அனுப்பி கொண்டே இருப்பார்.. பற்ற வைத்த பாலிவுட் நடிகை.. யார் இவர்?

    December 30, 2025

    கூட்டாட்சி தத்துவத்திற்கு பெரும் பின்னடைவு! செல்வப்பெருந்தகை கண்டனம்

    December 30, 2025

    கபட நாடக அரசு! திருத்தணி சம்பவத்தை சுட்டிக்காட்டி விஜய் பாய்ச்சல்

    December 30, 2025

    ஜன 1 முதல் 65 ரயில்களின் வேகம் அதிகரிப்பு! தெற்கு ரயில்வே அறிவிப்பு

    December 30, 2025

    மும்பையில் பயங்கரம்! பேருந்து மோதி சாலையோரம் நின்ற 4 பேர் பலி

    December 30, 2025
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2025 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.