Close Menu
    What's Hot

    ராகுலின் நண்பர் மீது செல்வப்பெருந்தகை புகார்

    ஜன.1 புத்தாண்டில் மழை பெய்யுமா? வானிலை மையம் சொல்வது என்ன?

    தமிழருவி மணியன் மனைவி மரணம்: வைகோ நேரில் அஞ்சலி

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»அரசியல்»காசோலை மோசடி வழக்கு! மதிமுக எம்எல்ஏக்கு 2 ஆண்டு ஜெயில்!
    அரசியல்

    காசோலை மோசடி வழக்கு! மதிமுக எம்எல்ஏக்கு 2 ஆண்டு ஜெயில்!

    Editor TN TalksBy Editor TN TalksDecember 30, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    mdmk mla
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    காசோலை மோசடி வழக்கில் மதிமுக எம்எல்ஏ டாக்டர் சதன் திருமலை குமாருக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சென்னை நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

    தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூர் சட்டமன்ற தொகுதி உறுப்பினராக உள்ள மருத்துவர் சதன் திருமலை குமார், கடந்த 2016 ஆம் ஆண்டு தன்னுடைய தொழில் முன்னேற்றத்திற்கு சென்னை ராயப்பேட்டை சேர்ந்த நியூ லிங் ஓவர்சீஸ் நிதி நிறுவனத்தில் 1 கோடி ரூபாய் கடன் பெற்றுள்ளார். இதற்காக 50 லட்சம் ரூபாய் கொண்ட இரண்டு காசோலையை சதன் திருமலை குமார் வழங்கியுள்ளார். கடன் தொகைக்கு வழங்கிய காசோலை வங்கியில் செலுத்திய போது சதன் திருமலை குமார் வங்கி கணக்கில் பணம் இல்லை என திரும்பியது.

    இதனையடுத்து கடந்த 2019 ஆம் ஆண்டு சதன் திருமலை குமாருக்கு எதிராக காசோலை மோசடி வழக்கை சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் நியூ லிங் ஓவர்சீஸ் நிதி நிறுவனத்தின் இயக்குநர் தாக்கல் செய்தார். சட்டமன்ற உறுப்பினர் என்பதால் பின்னர் சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டு பின்னர் சிறப்பு நீதிமன்ற உத்தரவின்படி சென்னை ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்திற்கு வழக்கு மாற்றப்பட்டது.

    இந்த வழக்கை விசாரித்த ஜார்ஜ் டவுன் நீதிமன்ற நீதிபதி சுந்தரபாண்டியன், “காசோலை மோசடி வழக்கில் சதன்திருமலை குமாருக்கு எதிரான குற்றச்சாட்டுகள் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே அவருக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதிப்பதாகவும், மேலும் 1 கோடி ரூபாய் பணத்தை 2 மாதங்களுக்குள் கொடுக்க வேண்டும். இல்லை என்றால் மேலும் 3 மாதங்கள் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும்” என  தீர்ப்பளித்தார்.

    மேலும் மேல் முறையீடு செய்ய 2 மாதங்கள் கால அவகாசம் வழங்குவதாகவும் அதுவரை தண்டனையை நிறுத்திவைப்பதாகவும் அறிவித்தார்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleஅணுகுண்டு தாக்குதல் பீதி! அலறியடித்து புதினை போனில் அழைத்த டிரம்ப்!
    Next Article கூட்டாட்சி தத்துவத்திற்கு பெரும் பின்னடைவு! செல்வப்பெருந்தகை கண்டனம்
    Editor TN Talks

    Related Posts

    ராகுலின் நண்பர் மீது செல்வப்பெருந்தகை புகார்

    December 30, 2025

    உள்நோக்கத்துடன் குண்டர் சட்டம்! காவல்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க ஐகோர்ட் உத்தரவு

    December 30, 2025

    கூட்டாட்சி தத்துவத்திற்கு பெரும் பின்னடைவு! செல்வப்பெருந்தகை கண்டனம்

    December 30, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    ராகுலின் நண்பர் மீது செல்வப்பெருந்தகை புகார்

    ஜன.1 புத்தாண்டில் மழை பெய்யுமா? வானிலை மையம் சொல்வது என்ன?

    தமிழருவி மணியன் மனைவி மரணம்: வைகோ நேரில் அஞ்சலி

    உள்நோக்கத்துடன் குண்டர் சட்டம்! காவல்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க ஐகோர்ட் உத்தரவு

    பேருந்துகளின் தகுதியை ஆய்வு செய்ய ஆணையம்! மத்திய-மாநில அரசுகளின் பதிலை கோரியது ஐகோர்ட்

    Trending Posts

    கூட்டாட்சி தத்துவத்திற்கு பெரும் பின்னடைவு! செல்வப்பெருந்தகை கண்டனம்

    December 30, 2025

    ஜன 1 முதல் 65 ரயில்களின் வேகம் அதிகரிப்பு! தெற்கு ரயில்வே அறிவிப்பு

    December 30, 2025

    மும்பையில் பயங்கரம்! பேருந்து மோதி சாலையோரம் நின்ற 4 பேர் பலி

    December 30, 2025

    சூர்யகுமார் யாதவ் எனக்கு மெசேஜ் அனுப்பி கொண்டே இருப்பார்.. பற்ற வைத்த பாலிவுட் நடிகை.. யார் இவர்?

    December 30, 2025

    ஜன.1 புத்தாண்டில் மழை பெய்யுமா? வானிலை மையம் சொல்வது என்ன?

    December 30, 2025
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2025 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.