2026 சட்டமன்ற தேர்தலில் யாருடன் கூட்டணி என்ற கேள்விக்கு தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் அதிலளித்துள்ளார்.
சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக கட்சியின் தலைமை அலுவலகத்தில் பொங்கல் விழா நடைபெற்றது. இதில் பங்கேற்ற தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது தேமுதிக யாருடன் கூட்டணி? எந்தெந்த தொகுதிகளில் போட்டி என்பது, விஜய் பிரபாகரன் எந்த தொகுதியில் போட்டியிட உள்ளார் என்பது குறித்து தேமுதிக நிர்வாகிகளுடன் ஆலோசனை பெற்று, விருப்ப மனு உள்ளிட்ட நடைமுறைகள் முடித்த பின் ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் என தெரிவித்தார்.
மேலும் சமவேலைக்கு சம ஊதியம் கோரி போராட்டத்தில் ஈடுப்பட்டு வரும் இடை நிலை ஆசிரியர்களின் கோரிக்கை தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும் எனவும் பிரேமலதா கேட்டு கொண்டார்.
முன்னதாக கடலூரில் நடந்த தேமுதிக மாநாடு 2.0-வில் பேசிய பிரேமலதா விஜயகாந்த், கூட்டணி குறித்து ஏற்கெனவே முடிவெடுத்து விட்டதாகவும் ஆனால் தற்போது அதை அறிவிக்க மாட்டோம் என்றும் கூறினார். மேலும் தேமுதிக இருக்கும் கூட்டணி தான் வெற்றிப்பெற்று ஆட்சி அமைக்கும் என்றும் திட்டவட்டமாக கூறினார். தங்கள் கட்சியின் மாவட்ட நிர்வாகிகள் கைக்காட்டும் கட்சியுடனே கூட்டணி என்றும் அறிவித்தார்.
