நியூசிலாந்துக்கு எதிரான 3வது டி20 போட்டியில் வெற்றிபெற்று இந்திய அணி தொடரை கைப்பற்றியது.
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து அணி 3 ஒருநாள் , 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் ஒரு நாள் தொடரை 2-1 என்ற கணக்கில் நியூசிலாந்து அணி கைப்பற்றியது. இதையடுத்து இரு அணிகளுக்கும் இடையிலான டி20 போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதில் முதல் இரண்டு போட்டிகளில் இந்தியா அணி வெற்றிபெற்று 2-1 என்ற கணக்கில் தொடரில் முன்னிலை வகிக்கிறது.
இந்நிலையில், இந்தியா, நியூசிலாந்து இடையேயான 3வது டி20 போட்டி கவுகாத்தியில் இன்று நடைபெற்றது. முதலில் டாஸ் வென்ற இந்திய அணி, பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கிய நியூசிலாந்து அணி, 154 ரன்களை இலக்காக நிர்ணயித்தது. நியூசிலாந்து அணி தரப்பில் கான்வே-1, சைபெர்ட்-12, ரச்சின் -4, ஆகியோர் அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிக்கொடுத்து ஏமாற்றம் அளித்தனர். பின்னர் பிலிப்ஸ் -48, சாப்மேன் – 32 ஜோடி அணியை சரிவிலிருந்து மீட்டாலும்9 விக்கெட்டுகளை இழந்து 153 ரன்கள் மட்டுமே எடுத்தது. இந்தியா சார்பில் பும்ரா – 3 விக்கெட்டுகளையும், ஹர்திக், பிஷ்னோய் தலா விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
154 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான சஞ்சு சாம்சன் ரன் ஏதும் எடுக்காமல் விக்கெட்டை இழந்து மீண்டும் அதிர்ச்சி கொடுத்தார். இஷான் கிசன் 28 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். தொடக்கம் முதலே அதிரடி காட்டிய அபிஷேக் சர்மாவுடன் ஜோடி சேர்ந்து கேப்டன் சூர்யகுமார் யாதவ், நியூசிலாந்து பந்துவீச்சை நாலாபுறமும் சிதறடித்தனர். அதன்படி அபிஷேக் 20 பந்துகளில் 68 ரன்களும் சூர்யகுமார் யாதவ் 57 ரன்களும் எடுத்து அவுட்டாகாமல் களத்தில் உள்ளனர். இந்திய அணி 10 ஓவரிலேயே இலக்கை எட்டி வெற்றிவாகை சூடி ஹாட்ரிக் வெற்றியுடன் டி20 தொடரை வென்றது.
