2026 ஜனவரி 26 இன்று நாட்டின் 77வது குடியரசு தினம் டெல்லியில் உள்ள கடமை பாதையில் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. ஒவ்வோரு ஆண்டு குடியரசு தினத்தன்றும் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் அலங்காரா ஊர்திகளின் அணிவகுப்பு நடைபெறுவது வழக்கம். அதன் படி இந்த ஆண்டு குடியரசு தின கொண்டாட்டத்தில் பங்கேற்க உள்ள தமிழ்நாட்டின் அலங்கார ஊர்திக்கு மத்திய உள்துறை அமைச்சகம் ஒப்புதல் வழங்கியது.
இந்தநிலையில், டெல்லியில் நடைபெறும் குடியரசு தின விழாவில் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரேதசங்களின் அலங்கார ஊர்திகளின் அணிவகுப்பு மரியாதையை குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு ஏற்றுக்கொண்டார். அதில், தமிழர்களின் பாரம்பரியம், கலாசாரத்தை பறைசாற்றும் தமிழ்நாடு அலங்கார ஊர்தியும் இடம்பெற்றது. ஜல்லிக்கட்டு காளையை அடக்கும் வீரர்களின் வடிவமைப்புடனான வாகனத்திற்கு பக்கவாட்டில் பெண்கள் மயிலாட்டம் போட கம்பீரமாக தமிழகத்தின் வாகனம் கடந்து சென்றது.
கடந்த 2024-ம் ஆண்டு குடியரசு தின விழா அலங்கார ஊர்திகளில் தமிழ்நாடு பங்கேற்க மத்திய அரசு அனுமதி மறுத்தது. இதற்கு தமிழ் நாடு அரசு சார்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
