Close Menu
    What's Hot

    தெலுங்கானா : நகைக்காக கிணற்றில் தள்ளி விடப்பட்ட பெண்..! 21 மணி நேர போராட்டம்..! பத்திரமாக மீட்ட தீயணைப்பு வீரர்கள்..!

    திருப்பூர் : பேஸ்புக் மூலம் ஆபாச வீடியோ அனுப்பி பணம் பறித்த கும்பல்..! மிரட்டலில் பயந்து தற்கொலை செய்து கொண்ட பீகார் இளைஞர்..!

    116 வயதில் 3,550 படிக்கட்டுகள் ஏறிய மூதாட்டி..! ஏழுமலையானை தரிசனம் செய்த காட்சிகள் வைரல்..!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»தமிழ்நாடு»நெல்லையில் மீண்டும் பயங்கரம்!. 18 வயது இளம்பெண் ஆணவக்கொலை?. 
    தமிழ்நாடு

    நெல்லையில் மீண்டும் பயங்கரம்!. 18 வயது இளம்பெண் ஆணவக்கொலை?. 

    Editor web3By Editor web3February 3, 2026Updated:February 3, 2026No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    nellai honor killing
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    நெல்லையில் இருவேறு பிரிவை சேர்ந்த காதல் திருமணத்திற்கு இன்னும் 4 நாட்களே உள்ள நிலையில், மணப்பெண் மர்மமுறையில் உயிரிழந்திருப்பது ஆணவக் கொலையா என்ற அச்சம் நிலவுகிறது.

    நெல்லை பேட்டை செக்கடியைச் சேர்ந்த பச்சிராஜன், அரசு பஸ் டிரைவர்; அவரது மனைவி ரேவதி, தனியார் பள்ளி ஆசிரியை. இவர்களின் இளையமகள் சிவமதி (18) பாளை கல்லூரியில் பிஎஸ்சி இயற்பியல் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். சிவமதி, பேட்டை கடசர் தெருவைச் சேர்ந்த ஆனந்த கிருஷ்ணனுடன் காதலித்து வந்தார். ஆனந்த கிருஷ்ணன் ஏர்டெல் நிறுவனத்தில் டீம் லீடராக பணியாற்றுகிறார்.

     

    இருவரும் வெவ்வேறு பிரிவினரினால், சிவமதியின் பெற்றோர் இந்த காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து, உறவினர் மகனுடன் திருமணம் செய்ய ஏற்பாடு செய்துள்ளனர். இதையொட்டி, ஆனந்த கிருஷ்ணனும் சிவமதியும் வரும் 6-ஆம் தேதி திருமணம் செய்ய திட்டமிட்டிருந்தனர்.

    கடந்த சில தினங்களில் சிவமதியின் உடல்நிலை சரியில்லை எனக் கூறி, மாலை 6 மணியளவில் அவரை டவுன் கண்டியபேரி அரசு மருத்துவமனையில் கழுத்தில் காயத்துடன் பெற்றோர் சேர்த்தனர். மருத்துவமனை பரிசோதனையில் அவர் ஏற்கனவே உயிரிழந்துள்ளார் என்று அறிவிக்கப்பட்டது. அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டது. பேட்டை போலீசார் மர்மச்சாவாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    முன்னதாக, தூத்துக்குடி மாவட்டம், ஆறுமுகமங்கலத்தைச் சோ்ந்த பட்டியல் சாதி மென்பொருள் பொறியாளரான கவின் செல்வகணேஷ், ஜூலை 27, 2025 அன்று திருநெல்வேலியில் படுகொலை செய்யப்பட்டாா். காவல் உதவி ஆய்வாளா்களான (தற்போது பணியிடை நீக்கம் செய்யபட்டுள்ளனா்) சரவணன் மற்றும் கிருஷ்ணகுமாரி ஆகியோரின் மகன் சூா்ஜித்தால் வெட்டிக் கொல்லப்பட்டதாக குற்றஞ்சாட்டப்பட்டது

    சூா்ஜித்தின் சகோதரியுடன் கவினுக்கு இருந்ததாகக் கூறப்படும் சாதி மறுப்பு உறவே படுகொலைக்குக் காரணம் என கூறப்பட்டது. இந்த சம்பவம் தமிழகத்தையே உலுக்கிய நிலையில், குற்றவாளி சூா்ஜித் கைது செய்யப்பட்டு வழக்கு நீதிமன்றத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த வழக்கை சிபிசிஐடி போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

     

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleசட்டமன்ற தேர்தல்!. தவெக சார்பில் போட்டியிட பிப்.6ஆம் தேதி முதல் விருப்ப மனு விநியோகம்!
    Next Article மாணவர்களிடையே புழங்கும் கஞ்சா!. திமுக அரசு வெட்கித் தலைகுனிய வேண்டும்!. நயினார் நாகேந்திரன்!
    Editor web3
    • Website

    Related Posts

    திருப்பூர் : பேஸ்புக் மூலம் ஆபாச வீடியோ அனுப்பி பணம் பறித்த கும்பல்..! மிரட்டலில் பயந்து தற்கொலை செய்து கொண்ட பீகார் இளைஞர்..!

    July 5, 2026

    புரட்சித்தலைவியிடம் பாடம் பயின்றவர்கள்; தவெக வெற்றிக்காக உழைப்போம் – டாக்டர் சி.விஜயபாஸ்கர்

    July 4, 2026

    திமுக, அதிமுக அளித்த புகார் மனுக்களில் இருந்தது என்ன? ஆளுநர் மாளிகை தகவல்

    July 4, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    தெலுங்கானா : நகைக்காக கிணற்றில் தள்ளி விடப்பட்ட பெண்..! 21 மணி நேர போராட்டம்..! பத்திரமாக மீட்ட தீயணைப்பு வீரர்கள்..!

    திருப்பூர் : பேஸ்புக் மூலம் ஆபாச வீடியோ அனுப்பி பணம் பறித்த கும்பல்..! மிரட்டலில் பயந்து தற்கொலை செய்து கொண்ட பீகார் இளைஞர்..!

    116 வயதில் 3,550 படிக்கட்டுகள் ஏறிய மூதாட்டி..! ஏழுமலையானை தரிசனம் செய்த காட்சிகள் வைரல்..!

    ஃபிஃபா அப்டேட் : பராகுவேவை பந்தாடிய பிரான்ஸ்..! கடைசி நேரத்தில் கோல் அடித்து வெற்றி..!

    பிரான்ஸில் அமைச்சர் நிர்மலா சீதாராமன்;  ITER திட்டத்தை பார்வையிட்டார்

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.