16வது இளையோர் உலக் கோப்பை கிரிக்கெட் போட்டி கடந்த மாதம் 15-ம் தேதி ஜிம்பாப்வே மற்றும் நமிபியாவில் தொடங்கியது. இதன் இறுதிப் போட்டியில் இங்கிலாந்து அணியுடன் மோதியது இந்தியா. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி, பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கிய இந்திய வீரர்கள் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். குறிப்பாக சூர்யவன்ஷி 55 பந்துகளில் சதமடித்து அசத்தினார். .
இறுதியாக 50 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 9 விக்கெட் இழப்பிற்கு 411 எடுத்தது. 412 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து அணி வீரர்கள், சீரான இடைவெளியில் விக்கெட்களை பறிகொடுத்தனர். அந்த அணியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய கலெப் பால்கனர், 67 பந்துகளில் 115 ரன்கள் சேர்த்திருந்தார்.
இங்கிலாந்து அணி 40.2ஓவர்களில் 311 ரன்களுக்குள் சுருண்டது. இதனால் இந்திய அணி 100 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 6-வது முறையாக யு19 உலகக் கோப்பையில் சாம்பியன் பட்டம் வென்றது.
