Close Menu
    What's Hot

    திருவண்ணாமலையில் அனிருத் சாமி தரிசனம்!. செல்ஃபி எடுத்து மகிழ்ந்த ரசிகர்கள்!

    கோட், பட்டு வேட்டி அணிவது செய்திகளா? என் அன்பான வேண்டுகோள் இதுவே..! முதல்வருக்கு ஸ்டாலின் அட்வைஸ்..!

    கவுதமியின் சொத்து மோசடியாக விற்பனை; கைதானவர் தொடர்புடைய இடங்களில் அமலாக்கத் துறை சோதனை

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»இந்தியா»மறக்க முடியுமா?. இன்று புல்வாமா தாக்குதலின் 7ம் ஆண்டு நினைவு தினம்!. பிரதமர் அஞ்சலி!
    இந்தியா

    மறக்க முடியுமா?. இன்று புல்வாமா தாக்குதலின் 7ம் ஆண்டு நினைவு தினம்!. பிரதமர் அஞ்சலி!

    Editor web3By Editor web3February 14, 2026Updated:February 14, 2026No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    pulwama attack
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    உலகமே காதலர் தினத்தை கொண்டாடிக் கொண்டிருந்த நாளி்ல்தான் அந்த பெருந்துயர் சம்பவம் நிகழ்ந்தது. கடந்த 2019-ம் ஆண்டு பிப்ரவரி 14-ம் தேதி ஜம்முவில் இருந்து ஸ்ரீநகருக்கு 2,547 துணை ராணுவப் படை வீரர்களை ஏற்றிக்கொண்டு 78 ராணுவ வாகனங்கள் வரிசையாக சென்று கொண்டிருந்தன. அன்று மதியம் 3.30 மணியளவில் ராணுவ வாகனங்கள் புல்வாமா பகுதியில் சென்று கொண்டிருந்த நிலையில், திடீரென்று ஒரு கார் வேகமாக வந்து, துணை ராணுவப் படையினர் வந்து கொண்டிருந்த ஒரு பேருந்தின் மீது பயங்கரமாக மோதியது.

    அந்தக் காரில் வெடிகுண்டு நிரப்பப்பட்டிருந்தது. இதனால், அந்தக் கார் மோதிய பேருந்து வெடித்துச் சிதறியது. இதில் 40 வீரர்கள் உயிரிழந்தனர். இந்தத் தாக்குதலுக்கு பாகிஸ்தானைச் சேர்ந்த பயங்கரவாத அமைப்பான ஜெய்ஷ் இ முகம்மது பொறுப்பேற்றது.

    இதையடுத்து, இந்திய ராணுவம் பாகிஸ்தானுக்குள் சென்று அங்கு செயல்பட்டுக்கொண்டிருந்த ஜெய்ஷ் இ முகம்மது பயங்கரவாத அமைப்பின் முகாம் மீது துல்லிய தாக்குதல் நடத்தினர். இதில், ஏராளமான பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக தகவல் வெளியானது. இதன்மூலம், இந்த தாக்குதலுக்கு இந்திய ராணுவம் உரிய பதிலடி கொடுத்தது.

    இதையொட்டி ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 14-ந் தேதி நாட்டின் பல்வேறு பகுதிகளில் புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த வீரர்கள் நினைவாக உருவப் படத்திற்கு மாலை அணிவித்து, மலர்கள் தூவி, நினைவஞ்சலி செலுத்தப்பட்டு வருகின்றது. அதன்படி, தாக்குதலில் உயிர் தியாகம் செய்த சிஆர்பிஎஃப் வீரர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி  அஞ்சலி செலுத்தினார், அவர்கள் நாட்டுக்கு ஆற்றிய சேவை மக்களின் மனதில் என்றும் நிலைத்திருக்கும் என்று கூறினார். அவரது எக்ஸ் தளத்தில், “2019 ஆம் ஆண்டு இதே நாளில் புல்வாமாவில் தங்கள் உயிரைத் தியாகம் செய்த துணிச்சலான வீரர்களை நினைவு கூர்கிறேன். அவர்களின் பக்தி, உறுதிப்பாடு மற்றும் தேசத்திற்கான சேவை நம் உணர்வில் என்றென்றும் பதிந்திருக்கும். ஒவ்வொரு இந்தியனும் அவர்களின் துணிச்சலை கண்டு உத்வேகம் பெறுகின்றனர் என்று குறிப்பிட்டுள்ளார்.

    புல்வாமா பயங்கரவாத தாக்குதலின் ஆண்டு நிறைவையொட்டி ஜம்மு-காஷ்மீரில் உச்சக்கட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தாக்குதலுக்குப் பிறகு, ஜம்மு-காஷ்மீர் போன்ற முக்கியமான பகுதிகளில் இந்தியா பாதுகாப்புப் படைகளை நிலைநிறுத்துவதை அதிகரித்தது. தாக்குதலின் 7வது ஆண்டு நிறைவை முன்னிட்டு, ஜம்மு-காஷ்மீர் காவல்துறை வெள்ளிக்கிழமை முதல் ஸ்ரீநகரின் பரபரப்பான பகுதிகளிலும் பிற இடங்களிலும் திடீர் சோதனைகளை மேற்கொண்டு வருகிறது.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleசர்ஜிகல் ஸ்டிரைக் போல் மகளிருக்கு பணம்!. அமைச்சர் அன்பில் மகேஷ்!
    Next Article ஆட்சி மாற்றம் ‘ஈரானுக்கு சிறந்த விஷயம்’!, மத்திய கிழக்கிற்கு 2வது விமானம் தாங்கிக் கப்பலை அனுப்ப உத்தரவிட்ட டிரம்ப்!
    Editor web3
    • Website

    Related Posts

    திருவண்ணாமலையில் அனிருத் சாமி தரிசனம்!. செல்ஃபி எடுத்து மகிழ்ந்த ரசிகர்கள்!

    June 17, 2026

    கோட், பட்டு வேட்டி அணிவது செய்திகளா? என் அன்பான வேண்டுகோள் இதுவே..! முதல்வருக்கு ஸ்டாலின் அட்வைஸ்..!

    June 17, 2026

    கவுதமியின் சொத்து மோசடியாக விற்பனை; கைதானவர் தொடர்புடைய இடங்களில் அமலாக்கத் துறை சோதனை

    June 17, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    திருவண்ணாமலையில் அனிருத் சாமி தரிசனம்!. செல்ஃபி எடுத்து மகிழ்ந்த ரசிகர்கள்!

    கோட், பட்டு வேட்டி அணிவது செய்திகளா? என் அன்பான வேண்டுகோள் இதுவே..! முதல்வருக்கு ஸ்டாலின் அட்வைஸ்..!

    கவுதமியின் சொத்து மோசடியாக விற்பனை; கைதானவர் தொடர்புடைய இடங்களில் அமலாக்கத் துறை சோதனை

    நடுரோட்டில் டூவீலர் சீட்டில் படுத்துக்கொண்ட மலைப்பாம்பு!. அலறியடித்து ஓடிய மக்கள்!

    திருப்பூர் : வேலை தேடி வந்த பெண்ணுக்கு பாலியல் அத்துமீறல்..! தலைமறைவான ஆசாமிக்கு வலைவீச்சு..!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.