Close Menu
    What's Hot

    இட ஒதுக்கீடு உயர்வு கோரிக்கையை  தவறாகச் சித்தரிப்பதா? பாஜகவுக்கு எஸ்.டி.பி.ஐ கண்டனம்

    தமிழ்நாட்டின் நிதி நிலைமை: வெள்ளை அறிக்கை வெளியிட்டார் நிதி அமைச்சர் மரியவில்சன்

    யாருக்கு யார் பாடம் நடத்துவது?  ஜெயக்குமார் Vs ஜோசப் விஜய்

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»தமிழ்நாடு»அதிமுகவில் இருந்து விலகினார் முன்னாள் அமைச்சர் நிலோபர் கபில்! இபிஎஸ்-க்கு கடிதம்!
    தமிழ்நாடு

    அதிமுகவில் இருந்து விலகினார் முன்னாள் அமைச்சர் நிலோபர் கபில்! இபிஎஸ்-க்கு கடிதம்!

    Editor web3By Editor web3February 14, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    Nilofar Kapil resigns
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    அதிருப்தியில் இருந்த முன்னாள் அமைச்சர் நிலோபர் கபில் அதிமுகவில் இருந்து விலகியுள்ளார். தனது ராஜினாமா கடிதத்தை பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு அனுப்பியுள்ளார்.

    2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு அரசியல் கட்சியினர் தனது கட்சியில் இருந்து விலகி மாற்று கட்சிகளில் இணைந்து வருகின்றனர். அந்தவகையில், சமீபத்தில் ஓபிஎஸின் ஆதரவாளர்களான மனோஜ் பாண்டியன், வைத்திலிங்கம், ஜேசிடி பிரபாகர், மருது அழகுராஜ், சுப்புரத்தினம் உள்ளிட்ட பலரும் திமுக மற்றும் தவெகவில் ஐக்கியமாகிவிட்டனர். இதேபோல், அதிமுகவில் இருந்து திமுகவிற்கும், திமுகவில் இருந்து அதிமுகவிற்கு நிர்வாகிகள் மாறி வருகிறது.

    2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிறுத்தி அதிமுக காய்களை நகர்த்தி வரும் நிலையில், முன்னாள் அமைச்சர் நிலோபர் கபில் அதிமுகவில் இருந்து விலகியுள்ளார். அதாவது, திருப்பத்தூர் மாவட்ட அதிமுகவில் நிலவி வரும் கே.சி.வீரமணி உடனான கோஷ்டி பூசல் மற்றும் உட்கட்சி மோதல்கள் தற்போது உச்சகட்டத்தை எட்டியுள்ளன. அக்கட்சியின் முக்கிய முகமாகவும், முன்னாள் அமைச்சராகவும் வலம் வந்த நிலோபர் கபில், தொடர்ந்து ஓரங்கட்டப்பட்டு வருவதால் அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது. கட்சிக் கூட்டங்களில் தமக்கு உரிய அங்கீகாரம் வழங்கப்படாதது மற்றும் பெயரளவுக்கே அழைக்கப்படுவது போன்ற செயல்களால் மிகுந்த மனவேதனையில் இருந்ததாக கூறப்பட்டது.

    இந்தநிலையில், தனது ராஜினாமா கடிதத்தை நிலோபர் கபில் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு அனுப்பியுள்ளார். இதனிடையே ஜோலாபேட்டையில்  இன்று நடைபெறவுள்ள திமுக வாக்குச்சாவடி பயிற்சி மாநாட்டிற்கு நிலோபர் கபில் சென்றுள்ள நிலையில், அவர் திமுகவில் இணைவது உறுதியாகியுள்ளது.  நிலோபர் கபில் போன்ற சிறுபான்மையின செல்வாக்கு மிக்க தலைவர்கள் வெளியேறுவது, குறிப்பிட்ட தொகுதிகளில் அதிமுகவின் வாக்கு வங்கியில் பெரும் சரிவை ஏற்படுத்தக்கூடும் என்று கருதப்படுகிறது.

     

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleதமிழகத்தில் வாக்குப்பதிவு ஏற்பாடுகளில் திருப்தி!. தேர்தல் தேதி எப்போது?. வெளியான அப்டேட்!
    Next Article இந்தியா-பாகிஸ்தான் போட்டி ஒத்திவைக்கப்படுமா?. மழை பெய்ய 85% வாய்ப்பு!. 
    Editor web3
    • Website

    Related Posts

    இட ஒதுக்கீடு உயர்வு கோரிக்கையை  தவறாகச் சித்தரிப்பதா? பாஜகவுக்கு எஸ்.டி.பி.ஐ கண்டனம்

    June 16, 2026

    தமிழ்நாட்டின் நிதி நிலைமை: வெள்ளை அறிக்கை வெளியிட்டார் நிதி அமைச்சர் மரியவில்சன்

    June 16, 2026

    யாருக்கு யார் பாடம் நடத்துவது?  ஜெயக்குமார் Vs ஜோசப் விஜய்

    June 16, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    இட ஒதுக்கீடு உயர்வு கோரிக்கையை  தவறாகச் சித்தரிப்பதா? பாஜகவுக்கு எஸ்.டி.பி.ஐ கண்டனம்

    தமிழ்நாட்டின் நிதி நிலைமை: வெள்ளை அறிக்கை வெளியிட்டார் நிதி அமைச்சர் மரியவில்சன்

    யாருக்கு யார் பாடம் நடத்துவது?  ஜெயக்குமார் Vs ஜோசப் விஜய்

    பயிர்க்கடன் தள்ளுபடி; முரணாகச் செயல்படுகிறது தவெக அரசு – டிடிவி தினகரன் குற்றச்சாட்டு

    அதிமுகவில் அடுத்த விக்கெட் காலி;  எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்தார் விஜயபாஸ்கர்

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.