தமிழ்நாடு அரசின் 2026-27 நிதியாண்டிற்கான இடைக்கால பட்ஜெட்டை நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்தார். அவர் மொத்தமாக 2மணிநேரம் 22 நிமிடங்கள் பட்ஜெட்டை வாசித்தார். இது கடந்தாண்டு அவர் வாசித்த முழு பட்ஜெட்டை விட 16 நிமிடங்கள் குறைவாகும். (கடந்த 2025ல் 2 மணி நேரம் 38 நிமிடங்கள்).
முன்னதாக, பட்ஜெட் தாக்கலின்போது, 2025-26 நிதி ஆண்டில் ரூ.69 ஆயிரம் கோடி அளவுக்கு வருவாய் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. 2026-27 நிதி ஆண்டில் நிதிப் பற்றாக்குறை ரூ.1.21 லட்சம் கோடியாக கணக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தங்கம் தென்னரசு தெரிவித்தார்.
மேலும், சமக்ரா சிக்ஷா திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டிற்கு வழங்க வேண்டிய ரூ.3,548 கோடி நிலுவையில் உள்ளது.
2025-26ல் தமிழகத்தின் கடன் நிலுவைத் தொகை ரூ.9.52 லட்சம் கோடி.
இடைக்கால பட்ஜெட்டின் படி தமிழ்நாட்டின் நிலுவைக் கடன் ரூ.10.62 லட்சம் கோடி.
மத்திய அரசின் மாற்றாந்தாய் மனப்பான்மையையும் தாண்டி தமிழக அரசு சாதனை.
தமிழக அரசின் இடைக்கால பட்ஜெட்டை 2 மணி நேரம் 22 நிமிடங்கள் இடைவிடாமல் தாக்கல் செய்து தனது உரையை அமைச்சர் தங்கம் தென்னரசு நிறைவு செய்தார். இவ்வளவு நேரம் வாசித்தும் இந்த பட்ஜெட்டில் புதிய அறிவிப்புகள் இடம்பெறவில்லை என எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டி வருகின்றனர்.
