வடநெம்மேலியில் மு.க.ஸ்டாலின் பெயர் பொறிக்கப்பட்ட கல்வெட்டை ஒருவாரத்தில் சீரமைக்காவிட்டால் மாவட்டமே ஸ்தம்பிக்கும் வகையில் திமுக போராட்டம் நடத்தும்.
நெம்மேலியில் கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்தினை தொடங்கி வைத்த அப்போதைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெயர் பொறிக்கப்பட்ட கல்வெட்டை, சேதமடைந்துள்ளதாகக் கூறி அதிகாரிகள் மூடி வைத்துள்ளனர்.
ஒருவாரத்தில் அதனை சரி செய்து திறக்காவிடில் திமுக தரப்பில் போராட்டம் நடத்தப்படும் என திமுக மாவட்டச் செயலாளர் தா.மோ.அன்பரசன் தெரிவித்துள்ளார்.
அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தபோது அவர் தொடர்ந்து கூறுகையில்,
திமுக அரசு கொண்டு வந்த திட்டங்களுக்கு தவெக அரசு ஸ்டிக்கர் ஒட்டுவதாகக் குற்றம்சாட்டினார்.
மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சியின் 5 ஆண்டுகளில் 50 ஆண்டுகால திட்டங்களை கொண்டு வந்திருப்பதாகவும், கல்வெட்டில் இருந்து வேண்டுமானால் ஸ்டாலின் பெயரை அகற்றலாம். மக்கள் மனதில் இருந்து அவரது பெயரை, புகழை அழிக்கமுடியாது எனத் தெரிவித்தார்.
