இன்றைய அரசியல்வாதிகள் தங்கள் சொத்து கணக்கை டிக்ளேர் செய்ய தயாரா என்று தவெக தலைவர் விஜய் கேள்வி எழுப்பியுள்ளார்
வேலூா் மாவட்டம், அகரம்சேரியில் விஜய் – யின் தவெக நிா்வாகிகள் சந்திப்புக் கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது. அதில் உரையாற்றி வரும் விஜய், “எங்கள் ஓட்டு, எங்கள் உரிமை. எங்களை யாரும் விலைக்கு வாங்க முடியாது. எங்கள் ஓட்டு விசில் சின்னத்திற்கு தான். எங்கள் வார்த்தையில் இருந்து மாறமாட்டோம். மக்களை நேசிக்கும் ஒரு நல்ல தலைமை இல்லாததால் இத்தனை ஆண்டுகளாக வேறு வலியில்லாமல் ஸ்டாலின் சார் கொடுத்த பொய்யான வாக்குறுதிகளை நம்பி ஏமாற்றம் அடைந்த மக்களுக்கு சரியான நேரத்தில் ஒரு வெகுஜன மக்கள் இயக்கமாக வந்ததுதான் நம்முடைய தவெக.
வரும் தேர்தல் தமிழ்நாடு சட்டப்பேரவைக்கான தேர்தல். தமிழ்நாட்டுக்கும், டெல்லிக்கு தான் தேர்தல் என்றும் தமிழ்நாட்டுக்கும், என்டிஏ-க்கும்தான் தேர்தல் என்றும் முதல்வர் ஸ்டாலின் கூறுகிறார். இதென்ன நாடாளுமன்றத் தேர்தலா? பிரதமர் பதவிக்கு போட்டியிடுகிறாரா? தமிழ்நாட்டு மக்களுக்கு எந்த தேர்தலை எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்று தெரியும். தமிழ்நாட்டு மக்கள் மிகத் தெளிவான சூப்பர் மக்கள்.
உண்மையில் இந்த தேர்தல் தமிழ்நாட்டு மக்களுக்கும் ஊழலுக்கும் நடக்கிற போர். தமிழ்நாட்டு மக்களுக்கும் லஞ்சத்துக்கும் நடக்கிற போர். சரியான நிர்வாகம் செய்யாத திமுக அரசுக்கும் தவெகவுக்கும் இடையே நடக்கிற போர். தமிழ்நாட்டு மக்களுக்கும் ஸ்டாலின் சாருக்கும் நடக்கிற போர். விஜய்க்கும் ஸ்டாலின் சாருக்கும் நடக்கிற போர். தமிழ்நாடு தான் விஜய், விஜய் தான் தமிழ்நாடு. மற்ற தேர்தல்களில் வாக்குப்பதிவு அன்று வாக்குச்சாவடிக்கு சென்று வாக்களித்து திரும்புவீர்கள். ஆனால், இந்த முறை நீங்கள் தேர்தலில் பங்கேற்க போகிறீர்கள். உங்கள் வீட்டில் இருக்கும் ஒரு விஜய்தான் வேட்பாளர். எனவே உங்கள் வீட்டில் இருப்பவர்களின் வாக்கு, விசில் சின்னத்துக்குதான். அனைவருக்கும் தெரிந்ததால்தான் அவதூறு பரப்புகிறார்கள்.
தொடர்ந்து பேசிய அவர், இன்றைய அரசியல்வாதிகள் தங்கள் சொத்து கணக்கை டிக்ளேர் செய்ய தயாரா என்று கேள்வி எழுப்பிய விஜய், அரசியல்வாதிகளின் சொத்து எந்த தொழில் செய்து வந்தது. உழைத்து சம்பாரித்ததா? ஆட்டையப்போட்ட போட்ட பணமா என அடுக்கடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பியுள்ளார். இதெல்லாம் நாம கேட்டா எல்லா ஊழல் வாதிகளும் சேர்ந்து நம் மீது சேற்றை வாரி இறைக்கின்றனர் என தெரிவித்த விஜய், ஆனால் நாங்கள் யார் என்று மக்கள் தெரியும் எனவும் கூறினார்.
